search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கணையா குமாருக்கு டெல்லியில் போட்டியிட வாய்ப்பு வழங்கியது காங்கிரஸ்
    X

    கணையா குமாருக்கு டெல்லியில் போட்டியிட வாய்ப்பு வழங்கியது காங்கிரஸ்

    • கணையா குமார் டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் ஆவார்.
    • 2019-ம் ஆண்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

    டெல்லி மாநிலத்தில் இந்தியா கூட்டணி பா.ஜனதாவை எதிர்த்து களம் இறங்குகிறது. மொத்தம் உள்ள ஏழு தொகுதிகளில் மூன்று தொகுதிகளில் காங்கிரஸ், நான்கு தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடுகின்றன.

    இந்த நிலையில் மூன்று தொகுதிகளுக்கும் காங்கிரஸ் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. வடகிழக்கு டெல்லி தொகுதியில் கணையா குமாருக்கு வாய்ப்பு வழங்கியுள்ளது. வடகிழக்கு டெல்லி தொகுதியில் இரண்டு முறை வெற்றி பெற்றுள்ள பா.ஜனதா வேட்பாளர் போஜ்புரி பாடகர் மனோஜ் திவாரியை எதிர்த்து களம் காண்கிறார்.

    கணையா குமார் டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் ஆவார். பல்கலைக்கழக வளாகத்திற்குள் நாட்டிற்கு எதிராக கோஷம் எழுப்பியதாக கைது செய்யப்பட்டார். விசாரணையில் பல்கலைக்கழக வளாகததிற்கு வெளியே இருந்துதான் கோஷமிட்டது தெரியவந்ததால் விடுதலை செய்யப்பட்டார்.

    2019-ம் ஆண்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பெகுசரை தொகுதியில் வாய்ப்பு வழங்கப்பட்டது. அப்போது பா.ஜனதா வேட்பாளர் கிரிராஜ் சிங்கிடம் தோல்வியடைந்தார்.

    கணையா குமார் காங்கிரஸ் கட்சியில் துசிய மாணவர்கள் அமைப்பின் மாணவர்கள் அணி பொறுப்பாளராக உள்ளார்.

    காந்திசவுக் தொகுதியில் இருந்து 1984, 1989 மற்றும் 1996-ல் வெற்றி பெற்ற மூத்த தலைவர் ஜே.பி. அகர்வால் அதே தொகுதியில் போட்டியிடுகிறார்.

    வடமேற்கு டெல்லி (எஸ்சி) தொகுதியில் உதித் ராஜ் களம் இறக்கப்பட்டுள்ளார். இவர் 2014-ல் பா.ஜனதா சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். 2019 தேர்தலில் பா.ஜனதா மீண்டும் வாய்ப்பு வழங்காததால் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

    டெல்லியில அடுத்த மாதம் 25-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    Next Story
    ×