என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வான்வெளி விமானங்கள்"

    • பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து இரு நாடுகள் இடையே மோதல் வெடித்தது.
    • இந்த மோதல் இருதரப்பு ராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தை மூலம் முடிவை எட்டியது.

    புதுடெல்லி:

    ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த பயங்கரவாத முகாம்களை குறிவைத்து மே 7-ம் தேதி இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் தாக்கி அழித்தது.

    இதனால் இந்தியா, பாகிஸ்தான் இடையே மோதல் வெடித்தது. இருதரப்பும் ஏவுகணை, டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தின. இந்த மோதல் இருதரப்பு ராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தை மூலம் முடிவை எட்டியது.

    இதற்கிடையே, பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்திய வான்பரப்பை பாகிஸ்தான் விமானங்கள் பயன்படுத்த மத்திய அரசு ஏப்ரல் 30-ம் தேதி முதல் மே 24-ம் தேதி வரை தடை விதித்தது. இந்த தடை ஒவ்வொரு மாதமும் நீட்டிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்பரப்பை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, இந்திய வான்பரப்பிற்குள் பாகிஸ்தான் விமானங்கள் நுழைய அடுத்த மாதம் 24-ம் தேதி வரை தடை விதித்து விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

    இந்திய விமானப்படை தாக்குதலை தொடர்ந்து தனது நாட்டின் வான்வெளியில் விமானங்கள் பறக்க விதித்திருந்த தடையை பாகிஸ்தான் இன்று விலக்கியது. #Pakistanopens #Pakistanairspace
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் ஆக்கிரமித்து வைத்துள்ள காஷ்மீரில் உள்ள பாலகோட் பகுதிக்குள் கடந்த மாதம் இந்திய விமானப்படைகள் நடத்திய தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் உள்பட பல விமான நிலையங்களை பாகிஸ்தான் அரசு அவசரமாக மூடியது.

    இதேபோல் சில நகரங்களில் உள்ள சர்வதேச விமான நிலையங்களும், உள்நாட்டு விமான நிலையங்களும் மூடப்பட்டன. பிப்ரவரி மாதம் 27-ம் தேதியில் இருந்து சில நகரங்களின் வான் எல்லை வழியாக வெளிநாட்டு விமானங்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டிருந்தது.

    பின்னர், சில முக்கிய விமான நிலையங்கள் வழியாக மிக குறைவான விமானச் சேவைகள் இயக்கப்பட்டன.

    சுமார் ஒருமாத இடைவெளிக்கு பின்னர் இஸ்லாமாபாத், கராச்சி, பெஷாவர், குவெட்டா ஆகிய விமான நிலையங்கள் நேற்று திறக்கப்பட்டு உள்நாட்டு, வெளிநாட்டு விமானங்கள் தரையிறங்கவும், புறப்பட்டு செல்லவும் அனுமதி அளிக்கப்பட்டது.



    இதைதொடர்ந்து, தங்கள் நாட்டின் வான் எல்லைக்கு உட்பட்ட சில பகுதிகளில் விமானங்கள் பறப்பதற்கு  விதிக்கப்பட்ட தடையை பாகிஸ்தான் அரசு இன்று திரும்பப் பெற்றது. எனினும், நடுவழியில் இறங்கும் விமானங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது.

    பாதுகாப்பு கருதி பாங்காக், கோலாலம்பூர், புதுடெல்லி ஆகிய பகுதிகளில் இருந்துவரும் விமானங்கள் தற்போதைக்கு இயங்காது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. #Pakistanopens #Pakistanairspace
    ×