என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஞாபகமறதி"

    • வீட்டைவிட்டுக் கிளம்பி வாசலுக்கு வந்தவுடனேயே நாம் எதற்காக வெளியே வந்துள்ளோம் என்பதுகூடச் சிலருக்கு மறந்து போகிறது.
    • மறதி என்பது பலருக்கு நோய்போலப் பேசப்படுகிறது.

    'மறதி' மனிதர்க்கு வரமா? சாபமா? என்பதை அறிந்துகொள்வதற்கு ஆவலாய்க் காத்திருக்கும் வாசகப் பெருமக்களே! வணக்கம்!.

    அன்றாடம் நொடிகள்தோறும் நாம் சந்திக்கின்ற ஒவ்வொரு நிகழ்வும், அல்லது ஒவ்வொரு அனுபவமும் நமது மூளையில் சேமித்து வைக்கப்படுகின்றன. சேமித்து வைக்கப்படும் தகவல்கள் நினைவுகளாக மாற்றப்பட்டு, நாம் நினைக்கும்போது, மறந்துபோகாமல் நினைவில் வந்து தோன்ற வேண்டும். அவ்வாறு அவை தோன்றாமல், மறைந்துபோக நேரிட்டால் அது 'மறதி' என்று ஆகிவிடும். வாழ்க்கையின் எல்லா நிகழ்வுகளையும் மூளை சேமித்து வைக்கக் கூடிய ஆற்றல் உடையதுதான். என்றாலும், ஒவ்வொன்றையும் மறந்துபோகாமல் நினைவில் வைத்திருந்தால் அது வீண் குழப்பங்களுக்கும் மன உளைச்சல்களுக்கும் நம்மை ஆளாக்கி விடும். அந்த வகையில் மறதியை ஒரு மாபெரும் வரப்பிரசாதம் என்று குறிப்பிடுவர். ஆனால் மறக்கக் கூடாததையும் சேர்த்து மறந்துவிட்டால், பிறகு நாம் நன்றிகெட்டவர்கள் ஆகி விடுவோம். அதனால்தான் திருவள்ளுவர், வாழ்க்கையில் சிலவற்றை நெடுநாட்களுக்கு நினைவில் வைத்திருக்க வேண்டும் என்றும், சிலவற்றை உடனே மறந்துவிட வேண்டும் என்றும் குறிப்பிடுகிறார்.

    "நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது

    அன்றே மறப்பது நன்று"

    பிறர் நமக்குச் செய்த உதவிகளையும் நன்மைகளையும் மறக்காமல் எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டும்; பிறர் நமக்குச் செய்த தீமைகளையும் கெடுதல்களையும் கால தாமதப்படுத்தாமல் அப்போதே மறந்து விடுவது நல்லது என்கிறது வள்ளுவம். ஆனால் இன்று இதை அப்படியே தலைகீழாகத் திருப்பிப் போட்டுக் கடைப்பிடித்துக் கொண்டிருக்கிறோம். அடுத்தவர் செய்த நன்மைகளை உடனே மறந்துபோய் செய்ந்நன்றி கொன்றவர்களாக வாழ்கிறோம்; அடுத்தவர் செய்த தீமைகளை எப்போதும் நெஞ்சில் சுமந்துகொண்டு பழிவாங்கும் பாதகர்களாக அலைந்து கொண்டிருக்கிறோம்.

    அடுத்தவர்கள் நமக்குச் செய்யும் கொடுமைகளை உடனே மறந்துபோவதன் மூலமாக, நம் மனம் துன்பமில்லாத மனமாகத், தெளிந்த பளிங்குபோலக் குழப்பமின்றி எப்போதும் தெளிவாகவும் அமைதியாகவும் இருக்கும். அடுத்தவர் செய்த நன்மைகளை நினைத்துப் பார்க்க நினைத்துப் பார்க்க, நம்முடைய மனமும் எப்போதும் அடுத்தவர்களுக்கு உதவி செய்வதிலேயே அக்கறையாய் இருக்கும்.

    மறதி என்பது பலருக்கு நோய்போலப் பேசப்படுகிறது. வீட்டைவிட்டுக் கிளம்பி வாசலுக்கு வந்தவுடனேயே நாம் எதற்காக வெளியே வந்துள்ளோம் என்பதுகூடச் சிலருக்கு மறந்து போகிறது. சரியான உடற் பயிற்சியின்மை, மனப் பயிற்சியினமை, போதிய உறக்கமின்மை, சத்தான ஆகாரமின்மை போன்ற குறைபாடுகள் மறதி நோய் வருவதற்கு மருத்துவக் காரணங்களாகக் கூறப்படுகின்றன. 'மறதி' யுடையவர்கள் வாழ்க்கையில் விரைவில் கெட்டழிவார்கள் என்று திருவள்ளுவர் எச்சரிக்கவும் செய்கிறார்.

    "நெடுநீர் மறவி மடி துயில் நான்கும்

    கெடுநீரார் காமக் கலன்"

    எந்தச் செயலையும் உடனே செய்யாமல் காலம் தாழ்த்தித் தள்ளிப்போடுவது (நெடுநீர்), மறந்து போவது (மறதி), சோம்பல்(மடி), அளவுகடந்த தூக்கம் (துயில்) ஆகிய நான்கும் விரைவில் கெட்டுப்போகிறவர்கள் விரும்பிக் கட்டி ஏறுகிற வாகனங்கள் ஆகும் என்கிறார் திருவள்ளுவர். எனவே மறந்து போகாமல் நினைவுகளை மூளையில் சேமித்து வைப்பது எப்படி?.

    நம்முடைய அனுபவங்களையும், நாம் சந்திக்கும் சம்பவங்களையும் தகவல்களாக நாம் நமது மூளைக்கு அனுப்புகிறோம்; அந்தத் தகவல்களை மூளை, நினைவுகளாக மாற்றி நமது மூளையில் சேமித்து வைத்துக் கொள்கிறது. தேவைப்படும் நிகழ் தருணங்களில், தேவையான விஷயங்களை மறப்பின்றி நினைப்பூட்டிப் பொருத்தமாக, நம் செயலுக்கு வேண்டிய உதவிகளைச் செய்கின்றன. நம் மூளைக்குச் செல்லுகின்ற எல்லாத் தகவல்களும் நினைவுகளாக நிலைத்துத் தங்குவதில்லை; எந்த அனுபவம் அல்லது சம்பவம் முக்கியமானவையாக அல்லது மதிப்புடையனவாக இருக்கிறதோ அது மட்டுமே முன்னுரிமை அடிப்படையில் நினைவில் சென்று அமர்ந்து கொள்ளும்; அந்தத் தகவல் இனிமையானதோ அல்லது கசப்பானதோ எதுவாக இருந்தாலும் நாம்தரும் முக்கியத்துவத்தைப் பொறுத்து அழியாத நினைவுகளாக அவை உருமாறிக் கொள்கின்றன.

    ஒரு செய்தி அல்லது தகவலின் மீது நாம் செலுத்தும் அக்கறையைப் பொறுத்தே அது அழியாத நினைவாக நம் மூளையில் மாறுவதற்கு வாய்ப்பிருக்கிறது. அக்கறை காட்டாத எந்த அனுபவமும், கண்ணோடு வந்து இமையோடு கரைவது போலவும், காதோடு வந்து காதோடு கடப்பது போலவும் காணாமல் போய்விடும். மாணவர்களைப் பொறுத்த வரை கற்றல் திறனில் மறதி என்பது கூடாத தீய சக்தியாகவே பார்க்கப்படுகிறது. எவ்வளவுதான் பலதடவை மனப் பாடம் செய்தாலும், பரீட்சை அரங்குக்குள் நுழைந்தவுடன் சுத்தமாகக் கழுவி விட்டதுபோல அனைத்தும் மறந்துவிடுகிறதே! ஏன்? என்று பல மாணவர்கள் அனுபவக் கேள்வியோடு வந்து நிற்கிறார்கள். எல்லாப்பாடமும் புரிகிறது!; கணக்குப் பாடம் மட்டும் காததூரம் தள்ளி நிற்கிறதே! ஏன்? என்று சிலர் கணக்காகக் கேட்கிறார்கள். போன வாரம் ரயிலில் சந்தித்து உரையாடிய நபரை இந்த வாரம் பார்த்தவுடன் சட்டென்று பெயர்கூட நினைவில் வர மறுக்கிறதே! ஏன்? என்று சிலர் தனது ஞாபகப் பிசகைக் கேள்வியாகக் கேட்கிறார்கள்.

    இவர்களுக்கெல்லாம் ஒரே ஒரு பதில்தான். எதையும் விருப்பத்தோடும் ஆர்வத்தோடும் அக்கறையோடும் செய்தால் அது நிச்சயம் நினைவை விட்டு அகலவே அகலாது. மாணவர்கள் எந்த வகையிலாவது தங்களுக்கும் படிக்கும் பாடத்திற்குமுள்ள தூரத்தை குறைத்து அந்நியோன்யப் படுத்திக்கொள்ள வேண்டும். கற்பிக்கும் ஆசிரியரோடு அன்பின் நெருக்கத்தை உருவாக்கிக் கொண்டால், அந்தப் பாடம் வெல்லக் கட்டியாய் இனிக்கும்; ஆசிரியர் மீது மரியாதை, கற்கும் பாடத்தின்மீது மதிப்பு, கல்வியின்மீது அக்கறை இவை ஒன்றுகூடிவிட்டால் புரிகிறவரை கற்க வேண்டும் என்கிற ஆர்வம் பெருகும்; பெருகிய ஆர்வத்தில் புரிந்து படித்தால் அந்தப் பாடம் அதன்பிறகு எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மறக்கவே மறக்காது. அதைப் போல நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதர் மீதும், நாம் செய்யும் ஒவ்வொரு செயலின்மீதும் ஆர்வத்தோடும் அக்கறையோடும் இருந்தால் எல்லாமே நினைவுச் சேமிப்பில் கல்லில் எழுத்தாய் நிலைத்து நிற்கும்.

    ஓர் அலுவலகத்தில் ஓர் எழுத்தர் பணிபுரிந்து வந்தார்; அவரிடம் எப்போதும் ஒரு மாறாத பழக்கம் இருந்தது. அலுவலகம் சென்றாலும், வங்கிக்குச் சென்றாலும் அஞ்சல் நிலையம், ரயில் நிலையம் என்று எங்குச் சென்றாலும் தன்னுடைய பேனாவைப் போகிற இடத்தில் மறந்து வைத்துவிட்டு வந்துவிடுவார். அதனால் எப்போதும் அவரது சட்டைப் பை, கால்சட்டைப் பை, ஜோல்னாப் பை என்று எல்லாவற்றிலும் இரண்டிரண்டு பேனாக்கள் இருக்கும். ஆனாலும் மாலையில் வீடு திரும்பும்போது அவரிடத்தில் ஒரு பேனாவும் இருக்காது.

    சுந்தர ஆவுடையப்பன்


     

    ஒருநாள் மனநல மருத்துவரிடம் சென்று, தான் அன்றாடம் பேனாவை மறந்து விட்டு வருவதை நிறுத்த ஒரு மார்க்கம் சொல்லுங்கள்; அல்லது ஏதாவது மருந்தாவது கொடுங்கள்! என்று பாவமாகக் கேட்டார். மருத்துவர் அவரிடம் இதுவரை என்ன மாதிரிப் பேனாக்களை உபயோகிக்கிறீர்கள்? என்று கேட்டுவிட்டு, "இனிமேல் ஒரே பேனாவை உபயோகியுங்கள்!; அதுவும் விலை உயர்ந்த பேனாவாக இருக்கட்டும்!; தங்கத்தால் செய்யப்பட்ட பேனாவாக இருந்தால் இன்னும் சிறப்பு!. வாங்கிப் பயன்படுத்திப் பாருங்கள்; ஒரு மூன்று மாதம் கழித்து வாருங்கள்!" என்று சொல்லி அனுப்பினார் மனநல மருத்துவர்.

    எழுத்தர் 22 காரட் தங்கத்தாலான பேனாவை வாங்கிப் பயன்படுத்தத் தொடங்கினார். மூன்றுமாதம் கழித்து மருத்துவரைக் காணச் சென்றார். " என்ன ஆயிற்று? இப்போதும் பேனாக்களை மறந்து வைத்துவிட்டு வந்து விடுகிறீர்களா? பேனாக்கள் தொலைகின்றனவா?" கேட்டார் மருத்துவர். " அதெப்படித் தொலையும்? இப்போது நான் பயன்படுத்துவது விலை உயர்ந்த தங்கப் பேனா ஆயிற்றே!; கவனமாகக் கையாளுகிறேன்; யாரிடம் எழுதக் கொடுத்தாலும் மறக்காமல் கையோடு கேட்டுவாங்கிப் பையோடு வைத்துக்கொள்கிறேன்!. தங்கப் பேனா மந்திரத்தின்மூலம் என் பேனாமறதியை நிறுத்தியதற்கு மிக்க நன்றி!" என்றார் எழுத்தர்.. "அதில் எந்த மந்திரமும் இல்லை!; மனித மூளைக்கு ஒரு குணம் உண்டு; அது எதை மதிப்புமிக்கதாகக் கருதுகிறதோ அதை மறக்கவே மறக்காது!" என்றார் மனநல மருத்துவர்.

    நமது வாழ்க்கையின் ஒவ்வொரு தருணங்களையும் மதிப்புமிக்க தருணங்களாக ஆக்கிக் கொண்டு மதிப்போடு வாழக் கற்றுக்கொண்டால், மறதியில்லாமல் வெற்றிகாணலாம். வாழ்வின்மீது அக்கறையும் ஆர்வமும் கொண்டு வாழ்பவர்களின் வாழ்வு அவர்களுக்கு மட்டுமல்ல; மற்ற எல்லாருக்கும் நினைவில் நிற்கும் வாழ்வாகப் பளிச்சிடும். எல்லாமே ஓர் எல்லைக்குள் இருக்க வேண்டும். அளவுக்குமீறிய மிதமிஞ்சிய மகிழ்ச்சி மயக்கத்தில் மனிதனுக்கு மறதிநோய் ஏற்படுவதாகத் திருவள்ளுவர் கூறுகிறார். இதற்காக, மனிதனுக்கு மறதி கூடாது! என்பதை வலியுறுத்திக் கூறுவதற்காகவே 'பொச்சாவாமை' என்கிற அதிகாரத்தையும் படைத்திருக்கிறார்.

    "இறந்த வெகுளியின் தீதே சிறந்த

    உவகை மகிழ்ச்சியிற் சோர்வு"

    கோபம், கொண்டவரையும் கொல்லும் கொடுமை வாய்ந்தது; அது அளவு கடந்து வந்தால் இன்னும் கடுமையான கொடுமையானதாக இருக்கும். அந்தக் கோபத்தைவிடத் தீமையானது அளவுக்கு மீறிய மகிழ்ச்சி மயக்கத்தில், அடுத்தவர் செய்த நன்மைகளை மறந்துவிடுவதாகும் என்கிறார் வள்ளுவர்.

    மறதி நம்மைத் தாழ்வு மனப்பான்மைக்குள் தள்ளித், தோல்வி நிலைக்குள் எளிதாகப் புகுத்திவிடும். மறதி ஓர் நோயாக வயதானவர்களுக்கு வரும் என்பதை நம்பி விடாதீர்கள். முறையான உடற்பயிற்சிகள் மூலம் நமது உடலை எப்போதும் இயங்கு நிலையில் வைத்திருந்தால், உடல் எப்போதும் விழிப்புணர்வோடு செயல்படும்; அதே போல மனத்தையும் தனிமையில் தள்ளிவிடாமல், ஏதாவது ஒரு வேலையில் ஈடுபடச் செய்து வந்தால் மனமும் எப்போதும் கூர்மையாக இருக்கும். குறுக்கெழுத்துப்போட்டியில் ஈடுபடுவது, மூளைக்கு வேலைகொடுக்கும் விளையாட்டுகளில் ஆர்வம் காட்டுவது, நல்ல இசையை ரசிப்பது, பழைய அல்லது பக்திக் கவிதைகளை மனப்பாடம் செய்து, திரும்பத் திரும்பச் சொல்லிப் பார்ப்பது போன்றவை மனம் பழக்கும் மகத்துவச் செயல்களாகும். ஒரு வேலையில் ஈடுபட்டால் அதில் மட்டுமே கவனம் செலுத்துவது; ஒரு சிந்தனையில் ஈடுபட்டால் பிற சிந்தனைகளைத் தவிர்த்து அதைமட்டுமே கூர்ந்து சிந்திப்பது ஆகியவை நமது நினைவுகளைச் செழுமைப்படுத்தும். போதிய தூக்கம், தேவையான உணவு, அமைதியான மனநிலை ஆகியவை நமது நினைவுகளை ஒருங்கிணைத்து, மறதிகளே இல்லாமல் செய்துவிடும்.

    தொடர்புக்கு 944319098

    2014- பாராளுமன்ற தேர்தலின்போது தன்னை பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்று பிரசாரம் செய்து வெற்றிபெற்ற மோடி தற்போது தனக்கு சாதியே கிடையாது என்று கூறுவதாக ப.சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார். #bunchofidiots #memorylosses #PChidambaram #Modi
    புதுடெல்லி:

    பிரதமர் மோடி சமீபத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசியபோது தனக்கு சாதி அரசியலின்மீது நம்பிக்கை கிடையாது என்று குறிப்பிட்டிருந்தார்.

    இதை சுட்டிக்காட்டி தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று கருத்து தெரிவித்துள்ள மத்திய முன்னாள் மந்திரி ப.சிதம்பரம், 'தன்னை பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்பதை முன்னிலைப்படுத்தி ஆட்சிக்கு வந்த ஒரே பிரதமரான மோடி தற்போது தனக்கு சாதியே கிடையாது என்கிறார்.


    பதவியேற்ற பிறகு, டீ விற்றவனான தன்னை இந்த நாட்டின் பிரதமராக மக்கள் தேர்ந்தெடுத்ததை எண்ணி பெருமைப்படுவதாக பலமுறை கூறிய மோடி, தற்போது நான் டீ விற்றவன் என்று ஒருபோதும் கூறியதில்லை என்கிறார்.

    நம்மைப்பற்றி பிரதமர் என்னவென்று நினைக்கிறார்? ஞாயபகமறதி கொண்ட சிறிய முட்டாள்கள் கூட்டத்தில் நம்மையும் அவர் சேர்த்து விட்டாரா?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார். #bunchofidiots #memorylosses #PChidambaram #Modi
    ×