search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஞாபகமறதி கொண்ட முட்டாள்களை நம்பி பிதற்றுகிறார் மோடி - ப.சிதம்பரம் காட்டம்
    X

    ஞாபகமறதி கொண்ட முட்டாள்களை நம்பி பிதற்றுகிறார் மோடி - ப.சிதம்பரம் காட்டம்

    2014- பாராளுமன்ற தேர்தலின்போது தன்னை பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்று பிரசாரம் செய்து வெற்றிபெற்ற மோடி தற்போது தனக்கு சாதியே கிடையாது என்று கூறுவதாக ப.சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார். #bunchofidiots #memorylosses #PChidambaram #Modi
    புதுடெல்லி:

    பிரதமர் மோடி சமீபத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசியபோது தனக்கு சாதி அரசியலின்மீது நம்பிக்கை கிடையாது என்று குறிப்பிட்டிருந்தார்.

    இதை சுட்டிக்காட்டி தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று கருத்து தெரிவித்துள்ள மத்திய முன்னாள் மந்திரி ப.சிதம்பரம், 'தன்னை பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்பதை முன்னிலைப்படுத்தி ஆட்சிக்கு வந்த ஒரே பிரதமரான மோடி தற்போது தனக்கு சாதியே கிடையாது என்கிறார்.


    பதவியேற்ற பிறகு, டீ விற்றவனான தன்னை இந்த நாட்டின் பிரதமராக மக்கள் தேர்ந்தெடுத்ததை எண்ணி பெருமைப்படுவதாக பலமுறை கூறிய மோடி, தற்போது நான் டீ விற்றவன் என்று ஒருபோதும் கூறியதில்லை என்கிறார்.

    நம்மைப்பற்றி பிரதமர் என்னவென்று நினைக்கிறார்? ஞாயபகமறதி கொண்ட சிறிய முட்டாள்கள் கூட்டத்தில் நம்மையும் அவர் சேர்த்து விட்டாரா?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார். #bunchofidiots #memorylosses #PChidambaram #Modi
    Next Story
    ×