search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sivagiri murder"

    ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே குடும்ப தகராறு காரணமாக மின்வாரிய பெண் ஊழியரை கணவர் வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    சிவகிரி:

    ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள பழமங்கலத்தை அடுத்துள்ளது கரட்டூர் கிராமம். இந்த ஊரை சேர்ந்தவர் தமிழ்மணி (வயது 45). எல்.ஐ.சி.ஏஜண்டாக உள்ளார்.

    இவரது மனைவி பெயர் ஜோதிமணி (35). திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உள்ள மின் வாரிய அலுவலகத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகிறது. குழந்தைகள் கிடையாது.

    இந்த நிலையில் கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். வீட்டின் மற்றொரு பகுதியில் ஜோதிமணி தனியாக வாழ்ந்து வந்தாராம்.

    பணி காரணமாக ஜோதிமணி பல்லடம் மற்றும் காங்கயத்தில் இருந்து வந்துள்ளார். விடுமுறை நாட்களில் மட்டும் சிவகிரி அருகே கரட்டூருக்கு வந்து செல்வதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் ஜோதிமணி ஆயுத பூஜை விடுமுறைக்காக ஊருக்கு வந்திருந்தார்.

    அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததால் கணவர் தமிழ்மணி மனைவி ஜோதிமணியிடம் விவாகரத்து வாங்கி பிரிந்து விடுவோம் என்று கூறுவாராம். ஆனால் அதற்கு ஜோதிமணி விவாகரத்துக்கு எல்லாம் சம்மதிக்க மாட்டேன். உங்களிடம்தான் உங்கள் மனைவியாகத்தான் வாழ்வேன் என்று கூறி வந்துள்ளார்.

    நேற்று மாலை 6.30 மணியளவில் இதேபோல் கணவன் மனைவி இடையே விவாகரத்து தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த தமிழ்மணி மனைவி ஜோதிமணியை அடித்து உதைத்தார். மேலும் வீட்டில் கிடந்த அரிவாளால் மனைவியை சரமாரியாக வெட்டினார்.

    இதில் ஜோதிமணியின் ஒரு கை துண்டானது. மேலும் தலை மற்றும் உடலில் வெட்டு விழுந்ததில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே ஜோதிமணி பரிதாபமாக இறந்தார்.

    மனைவி இறந்ததும் கணவர் தமிழ்மணி அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கொடுமுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் பெருந்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜாகுமார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்.

    தலைமறைவான தமிழ்மணியை போலீசார் தேடி வருகிறார்கள்.
    சிவகிரியில் ஆட்டோ டிரைவர் சரமாரி குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சிவகிரி:

    நெல்லை மாவட்டம் சிவகிரி சந்தி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமசுப்பு (வயது35), ஆட்டோ டிரைவர். இவர் அப்பகுதியில் ஆட்டோ சங்க செயலாளராகவும் இருந்தார். இவருடன் அதே பகுதி 1-ம் திருவிழா மண்டகப்படி தெருவை சேர்ந்த பொன்மாரி என்ப வரும் ஆட்டோ ஓட்டி வந்தார்.

    இவர்களுக்கிடையே சவாரி ஏற்றுவது தொடர்பாக தகராறு இருந்து வந்தது. இதனால் ஆட்டோ டிரைவர்கள் முறை வைத்து சவாரி சென்று வந்தனர். இந்த நிலையில் பொன்மாரி மட்டும் கட்டுப்பாட்டை மீறி முறைப்படி ஆட்டோ ஓட்டாமல் தனது இஷ்டம் போல் செயல்பட்டாராம்.

    இந்த நிலையில் கடந்த 15-ந்தேதி இரவு ராமசுப்பு சவாரிக்கு சென்று விட்டு ஆட்டோ ஸ்டாண்டிற்கு வந்தார். அப்போது இரவு 10 மணியை தாண்டி விட்டதால் அங்கு வந்த பொன்மாரி, ராமசுப்புவிடம் தகராறு செய்தார். தகராறு முற்றியதும் ஆத்திரம் அடைந்த பொன்மாரி, ராமசுப்புவை சரமாரியாக கத்தியால் குத்தினார்.

    இதில் அவருக்கு கழுத்து, கை, மார்பு பகுதியில் கத்திக் குத்து விழுந்தது. ரத்த வெள்ளத்தில் சாய்ந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்பு அவர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    இது தொடர்பாக சிவகிரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார் ராமசுப்புவை கொல்ல முயன்றதாக வழக்குப்பதிவு செய்து பொன்மாரியை கைது செய்தனர். இதனிடையே நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ராமசுப்புவின் உடல்நிலை மோச மடைந்து நேற்று நள்ளிரவு பரிதாபமாக இறந்தார்.

    இதையடுத்து பொன்மாரி மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கொலை செய்யப்பட்ட ராமசுப்புவின் உடல் நெல்லை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ராமசுப்புவுக்கு திருமணமாகி மனைவியும், விக்னேஷ்வரன் என்ற மகனும் உள்ளனர். இந்த கொலை சம்பவம் சிவகிரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×