search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sister husband"

    • தகராறு முற்றியதில் கணேஷ் கைலாஷ் அங்கிருந்த கிரைண்டர் கல்லை எடுத்து சுரேஷ் தலையில் போட்டு கொலை செய்தார்.
    • சம்பவத்தன்று குடித்துவிட்டு வந்த சுரேஷ், அங்கிருந்த எனது மனைவி மற்றும் 2 குழந்தைகளையும் அரிவாளின் பின்பகுதியால் அடித்து துன்புறுத்தி உள்ளார்.

    நெல்லை:

    பாளை கோட்டூர் ரோடு திருஞானசம்பந்தர் நாயனார் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி சுப்புலட்சுமி.

    உடல்நிலை பாதிப்பு

    இவர்களுக்கு சுரேஷ்(வயது 35) என்ற மகன், உமா என்ற மகள் உள்ளனர். மணிமூர்த்தீஸ்வரத்தை சேர்ந்த சண்முகம் மகன் கணேஷ் கைலாஷ் என்பவருடன் உமாவுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

    கணேஷ் கைலாஷ் தனியார் தண்ணீர் கேன் நிறுவனத்தில் மேலாளராக உள்ளார்.கடந்த சில நாட்களாக சுப்புலட்சுமிக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டு உள்ளதால், உமா தனது தாய் வீட்டுக்கு சென்று கவனித்து வந்துள்ளார்.

    கொலை

    இந்நிலையில் சுரேஷ் குடித்துவிட்டு வந்து நேற்று இரவு வீட்டில் தகராறு செய்துள்ளார். தகவல் அறிந்த கணேஷ் கைலாஷ் அங்கு சென்று சமாதானம் பேசி உள்ளார். அப்போது அவர்களுக்குள் தகராறு முற்றியதில் கணேஷ் கைலாஷ் அங்கிருந்த கிரைண்டர் கல்லை எடுத்து சுரேஷ் தலையில் போட்டு கொலை செய்தார்.

    இதுதொடர்பாக பாளை போலீஸ் இன்ஸ்பெக்டர் வாசிவம் வழக்குப்பதிவு செய்து கணேஷ் கைலாசை கைது செய்தார். அவர் போலீசில் வாக்குமூலமாக கூறியதாவது:-

    அடித்து துன்புறுத்தினார்

    சுரேஷ் சரிவர வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு தகராறு செய்து வந்தார். அவர் கோவில்பட்டியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு மகன் உள்ள நிலையில் சுரேசின் தொந்தரவால் அவரது மனைவி குழந்தையுடன் கோவில்பட்டிக்கு சென்றுவிட்டார்.

    எனது மாமனார் இறந்துவிட்டதால் அவருக்கு வந்த ஓய்வூதிய தொகையை குடும்பத்திற்கு செலவிடாமல் குடித்துவிட்டு தகராறு செய்து வந்தார். சம்பவத்தன்று குடித்துவிட்டு வந்த சுரேஷ், அங்கிருந்த எனது மனைவி மற்றும் 2 குழந்தைகளையும் அரிவாளின் பின்பகுதியால் அடித்து துன்புறுத்தி உள்ளார்.

    இதனை எனக்கு போன் செய்து எனது குழந்தைகள் அழுது கொண்டே தெரிவித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த நான் அங்கு சென்று அவரை சத்தம்போட்டேன். அப்போது எங்களுக்குள் வாக்குவாதம் முற்றியதில் கொலை செய்துவிட்டேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

    மத்தூர் அருகே வாலிபரை கத்தியால் குத்திய அக்காவின் கணவரை போலீசார் கைது செய்து ஊத்தங்கரை கிளைச் சிறையில் அடைத்தனர்.
    ஊத்தங்கரை:

    கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூரை அடுத்துள்ள மாடரஹள்ளி பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவரது மகன் வெங்கடேசன் (38). இவரது மனைவியின் சகோதரர் அதே பகுதியை சேர்ந்த வள்ளரசு (வயது18). கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். 

    இந்த நிலையில் வெங்கடேன் தனக்கு பிடிக்காத ஒருவருடன் வள்ளரசு பேசி கொண்டு இருந்தார். அதனை வெங்கடேசன் கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் விரக்தி அடைந்த வெங்கடேசன் வைத்திருந்த கத்தியை எடுத்து வள்ளரசை குத்தினார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

    இது குறித்து வள்ளரசு மத்தூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து வெங்டேசனை கைது செய்தனர். பின்னர் போலீசார் போச்சம்பள்ளி நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தி ஊத்தங்கரை கிளைச் சிறையில் அடைத்தனர்.
    ×