என் மலர்
நீங்கள் தேடியது "sentenced death"
மும்பை கேட்வே ஆப் இந்தியா மற்றும் ஜாவேரி பஜார் ஆகிய இரண்டு இடங்களில் கடந்த 2003-ம் ஆண்டு ஆகஸ்டு 25-ந் தேதி குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்தன.
இரண்டு டாக்சிகளில் வைக்கப்பட்டு இருந்த சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்து சிதறியதில் 52 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். 260 பேர் படுகாயம் அடைந்தனர்.
மும்பையை உலுக்கிய இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய முகமது ஹனிப் சையது, அவரது மனைவி பெமிடா மற்றும் அஷ்ரத் அன்சாரி ஆகிய 3 பேருக்கு மும்பை பொடா சிறப்பு கோர்ட்டு கடந்த 2009-ம் ஆண்டு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது.
தீர்ப்புக்கு பின்னர் முகமது ஹனிப் சையது நாக்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். அண்மையில் சிறையில் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. கடந்த சனிக்கிழமை அவரது உடல் நிலைமை மோசமானது. உடனடியாக சிறை அதிகாரிகள் அவரை சிகிச்சைக்காக அங்குள்ள அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு டாக்டர்கள் அவரது உடல் நிலையை பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர்.
இந்த நிலையில் அவர் திடீரென மரணம் அடைந்தார். சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட 1½ மணி நேரத்திலேயே அவர் உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
முகமது ஹனிப் சையது உயிரிழந்தது பற்றி மும்பையில் உள்ள அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் நாக்பூர் சென்றனர்.
முதல்கட்ட தகவலின் அடிப்படையில் முகது ஹனிப் சையது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து இருக்கலாம் என கருதுவதாக நாக்பூர் மத்திய சிறை கண்காணிப்பாளர் ராணி போஸ்லே தெரிவித்தார். இருப்பினும் அவரது மரணத்துக்கான உண்மையான காரணம் பிரேத பரிசோதனையின் மூலம் தான் உறுதியாக தெரியவரும் என்றார்.


டாக்கா:
வங்காளதேசத்தில் அதிக அளவில் சாலை விபத்துகளும் அதனால் ஏராளமான உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. கடந்த 29-ந் தேதி நடந்த விபத்தில் 2 மாணவர்கள் உயிரிழந்தனர்.
அதிவேகமாக வந்த வாகனம் மோதியதில் அவர்கள் பலியாகினர். எனவே, சாலை பாதுகாப்பு சட்டத்தை மறுசீரமைப்பு செய்ய வலியுறுத்தி மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள்.
உயிரிழப்பு ஏற்படுத்துவோருக்கு அதிகபட்சமாக தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை முக்கியமாக வலியுறுத்தப்பட்டது.
கடந்த 10 நாட்களாக தலைநகர் டாக்காவில் நடந்த போராட்டத்தில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். 8 பஸ்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. ரோடு மறியல் போராட்டமும் நடந்தது. டாக்கா உள்பட மற்ற பகுதிகளுக்கும் போராட்டம் பரவியது.
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் ரப்பர் குண்டுகளை வீசினர். அதில் மாணவர்கள் காயம் அடைந்தனர்.
இருந்தும் போராட்டம் ஓயவில்லை. நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. தலைநகர் டாக்கா ஸ்தம்பித்தது.
மாணவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வங்காள தேச அரசு முடிவு செய்தது. அதை தொடர்ந்து மாணவர் பிரதிநிதிகளை அழைத்து அதிகாரிகள் பேச்சு வார்ததை நடத்தினர்.
முடிவில் சாலை விபத்தில் உயிரிழப்பு ஏற்படுத்தும் வாகன ஓட்டிகளுக்கு தூக்குதண்டனை விதிக்க வகை செய்யும் சட்டம் கொண்டு வரப்படும் என உறுதி அளித்தனர். #Roadaccident
போபால்:
மத்தியபிரதேச மாநிலம் போபாலை சேர்ந்தவர் நவீன். இவர் கடந்த ஏப்ரல் 20-ந்தேதி தனது உறவினரின் 4 மாத பெண் கைக்குழந்தையை தூக்கி சென்று கற்பழித்து கொலை செய்தார்.
அவர் குழந்தையை தோளில் தூக்கி சென்று வீட்டு அருகே உள்ள வணிக கட்டிடத்துக்குள் செல்வதும், அதன்பிறகு வெளியே வரும் போது அவரிடம் குழந்தை இல்லாததும் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அவர் குழந்தையை மாடியில் இருந்து தூக்கி வீசி கொன்றார்.
அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுதொடர்பாக வழக்கு உடனடியாக இந்தூர் கோர்ட்டில் தொடரப்பட்டது.
பச்சிளம் குழந்தையை கொடூரமாக கொன்ற நவீன் மீதான வழக்கை கோர்ட்டு விரைவாக விசாரித்தது. இதில் போலீசார் குற்றப் பத்திரிகையை ஒரு வாரத்தில தாக்கல் செய்தனர்.
29 பேர் சாட்சிகளாக விசாரிக்கப்பட்டனர். இதையடுத்து இந்தூர் கோர்ட்டு நீதிபதி வர்ஷா சர்மா நேற்று தீர்ப்பு அளித்தார். 4 மாத குழந்தையை கற்பழித்து கொன்ற நவீனுக்கு தூக்கு தண்டனை விதித்தார்.
இது தொடர்பாக நீதிபதி கூறுகையில், அழுவதை தவிர எதுவும் தெரியாத 4 மாத குழந்தையை மனித தன்மையன்றி கற்பழித்து கொடூரமாக கொலை செய்துள்ளான்.
கொடிய குற்றம் செய்த நவீன் தூக்கு தண்டனைக்கு தகுதியானவன் என்று கூறினார். இந்த வழக்கில் 22 நாளில் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
நவீனுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதற்கு குழந்தையின் பெற்றோர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
ராஜஸ்தானில் வெளி நாட்டு பெண் கற்பழிப்பு வழக்கில் ஜோத்பூர் கோர்ட்டு 18 நாட்களில் விசாரித்து தீர்ப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது. #tamilnews






