search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Scientific fraud"

    டிப்-டாப் வாலிபருக்கு போலீஸ் வலைவீச்சு

    கடலூர்:

    பண்ருட்டி ராஜாஜி சாலையில்சங்கர் (59) நகைகடை நடத்தி வருகிறார். இந்த கடைக்கு நேற்று மாலை டிப்டாப் ஆசாமி ஒருவர் போன் பேசியபடி உள்ளே வந்தார்.உள்ளே வந்தகில்லாடி ஆசாமி அங்குள்ளசி.சி.டி.வி. கேமராக்களில் அவன் முகம் தெரியாதபடி தலைமுடியால் நெற்றி வரை மறைத்தபடியும் முககவசம் அணிந்திருந்தான்.

    அவன்போனில் கெத்து காட்டியபடிசிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தான். எதிர் முனையில் பேசியவர் அவரது மனைவி என்ற தோரணையில் கார் எடுத்துக் கொண்டு போக வேண்டியது தானே என்று கேட்டதாகவும் கார்ஒரு லிட்டருக்கு 8கிலோமீட்டர் தான் கொடுக்கிறது. அதனால் பைக்எடுத்துட்டு வந்துட்டேன் என்ற மாதிரி பேசி பெரிய பணக்காரன் மாதிரி காட்டிக் கொண்டு அங்கிருந்த கடை முதலாளி ,ஊழியர்களின் கவனத்தை திசை திருப்பும் வகையில் அதை எடுங்க,இதை எடுங்க என்றெல்லாம் கேட்டு இறுதியாக 4 கிராம் மோதிரத்தை வாங்கிக் கொண்டு அவர்களுக்கு ஜிபே அனுப்புவது போல சாதாரண எஸ்.எம்.எஸ். அனுப்பி உள்ளான்.எஸ். எம். எஸ். சவுண்டு வந்தவுடன் முதலாளி போனை கவனித்துள்ளார். அதில் குறும் செய்தி நோட்டிபிகேஷன் வந்துள்ளது. அவர் போனுக்குஉள்ளே சென்று பேலன்ஸ் சரிபார்ப்பதற்குள் கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த இடத்தை விட்டு மாயமாக மறைந்தார். குறுஞ்செய்தியை அனுப்பிவிட்டு ஜிபே அனுப்பியதாக கூறி ஏமாற்றிய வாலிபர் குறித்து பண்ருட்டி போலீசில் நகைக்கடை அதிபர் சங்கர்புகார் செய்தார். பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் ,சப் இன்ஸ்பெக்டர்கள் தங்கவேலு, பிரசன்னா ஆகியோர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமியை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • மாற்றுத்திறனாளிக்கு போலீஸ் வலை வீச்சு
    • கண்காணிப்பு கேமரா காட்சிகள் ஆய்வு

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் டவுன் காமராஜர் நகர் 2வது தெருவை சேர்ந்தவர் தாமோதரன். இவரது மனைவி செல்வி (வயது 42). தாமோதரன் கொரோனா பாதிப்பால் இறந்துவிட்டார்.

    இதனை அறிந்த மாற்றுத்திறனாளி நபர் ஒருவர் செல்வியிடம் உன்னுடைய கணவர் கொரோனாவில் இறந்து விட்டதால், அரசு சார்பில் பணம் வந்துள்ளதாக கூறியுள்ளார்.

    மேலும் தாலுகா அலுவலகத்தில் பணம் கொடுத்தால் மட்டுமே உங்கள் கணவரின் இறப்பு பணம் கிடைக்கும் எனக் கூறி செல்வியின் காதில் இருந்த ½ பவுன் கம்மல் மற்றும் ரூ.500 ஆகியவற்றை வாங்கிக்கொண்டார். பின்னர் நான் முன்னால் இரு சக்கர வாகனத்தில் தாலுகா அலுவலகம் செல்கிறேன்.

    நீங்கள் பின்னால் வாருங்கள் எனக் கூறிவிட்டு சென்றார். செல்வி தாலுகா அலுவலகத்துக்கு சென்று நீண்ட நேரம் காத்திருந்தும் அந்த நபர் வரவில்லை.

    இதனால் செல்வி தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து திருப் பத்தூர்டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன் பேரில் அங்கு வந்த போலீசார் அருகே உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து நூதன முறையில் பணத்தை ஏமாற்றிய மாற்றுத்திறனாளியை தேடி வருகின்றனர்.

    • 56 வயது நபர் வைத்திருந்த செல்போனுக்கு வாட்ஸ் அப்பில் வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம் என தகவல் வந்தது
    • மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார்

    வேலூர்:

    ஆன்லைனில் பண மோசடி சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. தொழில்நுட்பம் குறித்து பெரியளவில் புரிதல் இல்லாத வயதனாவர்களை மோசடிகாரர்கள் குறிவைக்கின்றனர்.

    அவர்களும் எளிதாக விழுந்துவிடுகின்றனர். எனவே, ஆன்லைன் பணப்பரிமாற்றத்தில் கூடுதல் கவ னம் அவசியம்.

    வாட்ஸ் அப்பில் நூதன முறையில் வேலூரை சேர்ந்தவரிடம் ரூ.4 லட்சம் பறித்து மோசடி செய்துள்ளனர்.இவரை வித்தியாசமான முறையில் வலையில் சிக்கவைத்துள்ளனர்.

    வேலூர் கொணவட்டத்தைச் சேர்ந்த 56 வயதுடைய நபர் வைத்திருந்த செல்போனுக்கு வாட்ஸ் அப்பில் வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம் என தகவல் வந்தது.

    அதனை நம்பி அவர் அதில் உள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்துள்ளார். தொடர்ந்து அதில் காட்டப்பட்ட பல்வேறு பொருட்களை வாங்கினால் லாபம் கிடைக்கும் என தெரிவித்துள்ளனர்.

    அதில் கொடுக்கப்பட்டிருந்த வங்கி கணக்கில் ரூ.4 லட்சத்தி 22, 617 செலுத்தினார்.

    இதனை தொடர்ந்து பணத்தை எடுக்க முயன்ற போது முடியவில்லை.

    அப்போதுதான் அவர் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது.

    இது குறித்து வேலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×