search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலூரில் வாட்ஸ் அப்பில் தகவல் அனுப்பி ரூ.4 லட்சம் மோசடி
    X

    வேலூரில் வாட்ஸ் அப்பில் தகவல் அனுப்பி ரூ.4 லட்சம் மோசடி

    • 56 வயது நபர் வைத்திருந்த செல்போனுக்கு வாட்ஸ் அப்பில் வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம் என தகவல் வந்தது
    • மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார்

    வேலூர்:

    ஆன்லைனில் பண மோசடி சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. தொழில்நுட்பம் குறித்து பெரியளவில் புரிதல் இல்லாத வயதனாவர்களை மோசடிகாரர்கள் குறிவைக்கின்றனர்.

    அவர்களும் எளிதாக விழுந்துவிடுகின்றனர். எனவே, ஆன்லைன் பணப்பரிமாற்றத்தில் கூடுதல் கவ னம் அவசியம்.

    வாட்ஸ் அப்பில் நூதன முறையில் வேலூரை சேர்ந்தவரிடம் ரூ.4 லட்சம் பறித்து மோசடி செய்துள்ளனர்.இவரை வித்தியாசமான முறையில் வலையில் சிக்கவைத்துள்ளனர்.

    வேலூர் கொணவட்டத்தைச் சேர்ந்த 56 வயதுடைய நபர் வைத்திருந்த செல்போனுக்கு வாட்ஸ் அப்பில் வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம் என தகவல் வந்தது.

    அதனை நம்பி அவர் அதில் உள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்துள்ளார். தொடர்ந்து அதில் காட்டப்பட்ட பல்வேறு பொருட்களை வாங்கினால் லாபம் கிடைக்கும் என தெரிவித்துள்ளனர்.

    அதில் கொடுக்கப்பட்டிருந்த வங்கி கணக்கில் ரூ.4 லட்சத்தி 22, 617 செலுத்தினார்.

    இதனை தொடர்ந்து பணத்தை எடுக்க முயன்ற போது முடியவில்லை.

    அப்போதுதான் அவர் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது.

    இது குறித்து வேலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×