என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sathyamurthy Bhavan"

    • அண்ணாமலை தமிழக மக்களுக்கு துரோகம் செய்வதை நிறுத்த வேண்டும்.
    • தமிழக அரசியலில் தோற்றுப்போனவர்.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சத்தியமூர்த்தி பவனில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

    தமிழக மக்களால் புறக்கணிக்கப்பட்ட கட்சி பா.ஜ.க. அதன் தலைவர் அண்ணாமலை தொடர்ந்து வெறுப்பு அரசியலை செய்து வருகிறார்.

    முதல்-அமைச்சர் மீதும் அவதூறு பேசுவது வாடிக்கையாகி விட்டது. எத்தனையோ அரசியல் கட்சி தலைவர்கள் இருக்கிறார்கள. இவரைப்போல் யாரிடமும் வெறுப்பும், திமிறும், ஆணவமும் இல்லை.

    காங்கிரஸ் பற்றி எனக்கு தெரியாது என்கிறார். நான் படித்து விட்டுத்தான் வந்திருக்கிறேன். முதலில் ஜன நாயகத்தை படிக்க வேண்டும். நான் காங்கிரஸ் பற்றி பேச தயார். நீங்கள் ஜனசங்கம், இந்து மகாசபா பற்றி பேச தயாரா?

    தன் கட்சி வேட்பாளரையே தோற்கடிக்க முயற்சித்த விவகாரம், சிருங்கேரி மடம் முதல் பல விசயங்களை நாங்களும் தூசு தட்டுவோம்.

    முதல்-அமைச்சரின் வெளிநாட்டு சுற்றுப் பயணத்தை கிண்டல் செய்கிறார். மோடி எத்தனையோ வெளிநாடுகளுக்கு செல்கிறாரே முதலீடுகளை கொண்டு வந்தாரா?

    முதலில் அண்ணாமலை தமிழக மக்களுக்கு துரோகம் செய்வதை நிறுத்த வேண்டும். அவர் ஒரு ஐ.பி.எஸ். அதிகாரியாக இருந்து காவிரி விவகாரத்தில் கன்னடர்களுக்குத்தான் ஆதரவாக இருப்பாராம்.

    தமிழக அரசியலில் தோற்றுப்போனவர். இப்போது உலக அரசியல் செய்யப் போகிறாராம். ஒரு வேளை அமெரிக்க அதிபராக முயற்சிக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சத்தியமூர்த்தி பவனில் நடந்த கக்கன் பிறந்தநாள் விழாவில் 20-க்கும் குறைவான தொண்டர்கள் பங்கேற்று, மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
    சென்னை:

    சத்தியமூர்த்தி பவனில் நடந்த கக்கன் பிறந்தநாள் விழாவில் 20-க்கும் குறைவான தொண்டர்கள் பங்கேற்று, மலர் தூவி மரியாதை செலுத்தினர். நேர்மைக்கும், எளிமைக்கும் ஆதாரமாக திகழ்ந்த கக்கன் பிறந்தநாள் விழாவில் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்காதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    காமராஜர் ஆட்சிக்காலத்தில் உள்துறை அமைச்சராக இருந்தவர் கக்கன். காமராஜரை போல் அரசியலில் மிக நேர்மையாகவும், எளிமையாகவும் இருந்து அரசியல் களத்தில் பயணித்தவர். அவரது 109-வது பிறந்தநாள் விழா சத்தியமூர்த்தி பவனில் நேற்று கொண்டாடப்பட்டது. அவரின் பிறந்தநாளையொட்டி, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் அவரது படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.

    காலை 10.30 மணிக்கு அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் 11.30 மணியாகியும் மூத்த தலைவர் குமரி அனந்தன், கக்கன் குடும்பத்தினரை தவிர வேறு யாரும் அங்கு வரவில்லை. 11.30 மணிக்கு பிறகு ஓரிரு நிர்வாகிகள் சத்தியமூர்த்தி பவனுக்கு வந்தனர்.

    அதனை தொடர்ந்து 11.35 மணிக்கு கக்கன் படத்திற்கு மூத்த தலைவர் குமரி அனந்தன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பொதுச்செயலாளர் கே.சிரஞ்சீவி, மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், சிவராஜசேகரன், கக்கனின் பேரன் பி.வி.தமிழ்செல்வன், செல்வபெருந்தகை, செயற்குழு உறுப்பினர் ஜி.தமிழ்செல்வன், மகளிர் காங்கிரஸ் தலைவி ஜான்சிராணி உள்பட 20-க்கும் உட்பட்டவர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.

    இதைத்தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்த குமரி அனந்தன், ‘தமிழகத்தில் விரைவில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த தமிழக அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்தார்.

    நேர்மைக்கும் எளிமைக்கும், ஆதாரமாக திகழ்ந்த கக்கனின் பிறந்தநாள் விழாவில் 20-க்கும் குறைவான தொண்டர்களே கலந்து கொண்டது, அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. காங்கிரஸ் மாநில நிர்வாகிகள், மூத்த நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தது, கட்சியினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரின் நேர்மைக்கு கிடைத்த பரிசு இதுதானா? என்ற ஆதங்கத்தை அவர்களிடத்தில் ஏற்படுத்தியது.

    இதற்கிடையே, காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து த.மா.கா. என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கிய ஜி.கே.வாசன் கட்சி அலுவலகத்திலும் நடந்த கக்கன் பிறந்தநாள் விழாவில் 10-க்கும் குறைவான நிர்வாகிகளே கலந்து கொண்டனர். த.மா.கா. அலுவலகத்தில் கக்கன் படத்திற்கு மூத்த துணைத்தலைவர் ஞானதேசிகன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். #tamilnews
    ×