என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Sathuvachari"
வேலூர்:
வேலூர் சத்துவாச்சாரி நேருநகரை சேர்ந்தவர் ராஜா. டீ மாஸ்டர். இவருடைய மகள் தமிழ்ச்செல்வி (வயது 14). இவர், சத்துவாச்சாரி அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று மாலை பள்ளி முடிந்ததும், சத்துவாச்சாரி கெங்கையம்மன் கோவில் எதிரே உள்ள தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு கார், திடீரென தமிழ்ச்செல்வி மீது மோதியது.
இதில் அவர் படுகாயமடைந்தார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு வேலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
கெங்கையம்மன் கோவில் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க சுரங்கப்பாதை ஒன்று அமைக்க வேண்டும் என்று பலமுறை கோரிக்கை வைத்து வருகிறோம்.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சுரங்கப்பாதை அமைக்க பூமி பூஜை போடப்பட்டது. ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டன. ஆர்.டி.ஓ. அலுவலக சந்திப்பில் இருந்த அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளும் அகற்றப்பட்டன. இதற்கு பிறகு எந்த பணிகளும் நடைபெறவில்லை.
சாலையை கடக்கும்போது, பலர் விபத்தில் சிக்கி இறந்துள்ளனர். விரைவில் இந்த பகுதியில் சுரங்கப்பாதை ஒன்று அமைத்து, விபத்தைத் தடுக்க வேண்டும், என்றனர்.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் குழந்தை கடத்தல் பீதியில் வடமாநிலத்தவர்கள் மற்றும் மனநலம் பாதித்தவர்கள் என அப்பாவிகள் தாக்கப்படுவது தொடர்கிறது. சில நாட்கள் முன்பு செய்யாறில் திருட்டு பீதியில் கல்லூரி மாணவன், குழந்தை கடத்தல் பீதியில் குடியாத்தத்தில் வடமாநில வாலிபர் மற்றும் போளூர் அருகே சென்னை மூதாட்டி அடித்து கொலை செய்யப்பட்டனர்.
பெரும் அதிர்வலைகளை இச்சம்பவங்கள் ஏற்படுத்தியது. இதையடுத்து, குழந்தை கடத்தல் வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எஸ்.பி. பகலவன் எச்சரித்துள்ளார். இந்த நிலையில், வடமாநில வாலிபர் ஒருவர் மீண்டும் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அதுகுறித்த விபரம்:-
சத்துவாச்சாரி அடுத்த புதுவசூர் கிராமத்தில் நேற்று நள்ளிரவு வடமாநிலத்தை சேர்ந்த ஒரு வாலிபர் சுற்றித் திரிந்துள்ளார். சந்தேகம் ஏற்பட்ட அப்பகுதி மக்கள், அந்த வாலிபரை பிடித்து கொடூரமாக தாக்கினர். இதில் அவர் படுகாயமடைந்தார்.
தகவலறிந்ததும், சத்துவாச்சாரி போலீசார் விரைந்து வந்து வடமாநில வாலிபரை மீட்டு வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
விசாரணையில் அவர், மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த பிரசாத் சட்டர்ஜி (வயது 30) என்பது தெரிய வந்தது. அவரை தாக்கிய புகாரில், புதுவசூரை சேர்ந்த பார்த்திபன் (38) என்பவரை கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்