search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sardar vallabhai patel"

    பட்டேல் சிலைக்கு 3000 கோடி, கஜா புயலால் பாதிக்கப்பட்ட 12 மாவட்ட தமிழர்களுக்கு 350 கோடியா? என்று கனிமொழி டுவிட்டரில் கேள்வியெழுப்பியுள்ளார். #Kanimozhi #GajaCyclone
    சென்னை:

    தி.மு.க. எம்.பி. கனிமொழி சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கஜா புயல் பிரச்சினை என்பது புதிய வி‌ஷயம் என்று சுப்பிரமணியசாமி சொல்லி இருப்பதை பெரிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது. தமிழ்நாட்டைப் பற்றி அவருக்கு என்ன தெரியும்.

    இங்கே இருக்கிற மக்கள் மற்றும் அவர்களின் பிரச்சினையை உணர்ந்தவர்கள் பேசலாம். இவர் பேசுவதை பெரிய வி‌ஷயமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.

    மேகதாது பகுதியில் அணை கட்டும் பிரச்சினை பற்றி பாராளுமன்றத்தில் குரல் எழுப்புவோம். மற்ற கட்சிகளின் ஆதரவையும் கோருவோம். மேகதாது பிரச்சினையை தி.மு.க. ஒரு முக்கியமான பிரச்சினையாக எடுத்துக் கொண்டு பாராளுமன்றத்தில் குரல் எழுப்பும். கஜா புயல் பாதிப்பு பற்றியும் குரல் எழுப்புவோம்.

    இந்நிலையில் உயிரற்ற பட்டேல் சிலைக்கு 3000 கோடியாம், உயிர்வாழ துடிக்கும் கஜா புயல் பாதிக்கப்பட்ட 12 மாவட்ட  தமிழர்களுக்கு 350 கோடியாம்! என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.


    கஜா புயலால் ஏற்பட்ட மக்களின் பிரச்சினையை அரசு சரியாக புரிந்து கொள்ளவில்லை. அங்கிருக்கும் மக்கள் உணவு சமைக்கக் கூட முடியாத சூழல்கள் இருக்கின்றன. மின்சாரம், குடிநீர் இன்னும் கிடைக்கவில்லை. மக்களின் வாழ்வாதாரம் பாதிப்படைந்திருக்கிறது. இதெல்லாம் எத்தனை நாளில் சரியாகும் என்று அரசால் சொல்ல முடியவில்லை. இதை மத்திய அரசோ பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

    இவ்வாறு அவர் பேசினார். #Kanimozhi #GajaCyclone
    உலகின் மிக உயரமாக உருவாக்கப்பட்ட வல்லபாய் படேலின் சிலையில், தமிழ் மொழிப்பெயர்ப்பு மிக மோசமான முறையில் செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #VallabhbhaiPatel #Tamil #StatueofUnity
    அகமதாபாத்:

    இந்தியாவின் இரும்பு மனிதர் என போற்றப்படும் சர்தார் வல்லபாய் படேலின் சிலை குஜராத் மாநிலம் நர்மதா ஆற்றின் குறுக்கே மிக பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது. 182 மீட்டர் உயரமான இந்த சிலை உலகின் மிக உயரமான சிலை என்ற பெருமையை பெற்றுள்ளது. மேலும் இந்த சிலைக்கு ‘ஸ்டாட்சூ ஆப் யூனிட்டி’ அதாவது ஒற்றுமையின் சிலை என பெயரிடப்பட்டுள்ளது.

    இந்த சிலையை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்கவுள்ளார். இந்நிலையில். இந்த சிலைக்கு கீழே பல்வேறு மொழிகளில் ஸ்டாட்சூ ஆப் யூனிட்டி என்ற சிலையின் பெயர் மொழிப்பெயர்க்கப்பட்டு இருந்தது. அந்த வரிசையில் தமிழ் மொழியின் மொழிப்பெயர்ப்பு மிகவும் மோசமாக இருப்பதால் சர்ச்சையாகி உள்ளது.



    ஸ்டாட்சூ ஆப் யூனிட்டி என்ற ஆங்கில வார்த்தையை கூகுளில் மொழிப்பெயர்ப்பு செய்து இருந்தால் கூட ஒற்றுமையின் சிலை என வந்திருக்கும் ஆனால், ‘ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி’ என மொழிப்பெயர்த்து இருக்கிறார்கள். இதற்கு கடும் கண்டனங்கள் வலுத்து வருகிறது.



    இதையடுத்து, தமிழ் மொழிப்பெயர்ப்பின் மீது வண்ணம் பூசி அதை தற்காலிகமாக மறைத்து உள்ளனர். இந்தியாவின் அடையாளங்களில் ஒன்றாக மாறிவிட்ட உலகின் மிக உயரமான சிலையில் தமிழ் மொழியின் மொழிப்பெயர்ப்பு மோசமான நிலையில் இருப்பது, தமிழை வஞ்சிக்கும் பார்வையை வெளிப்படுத்துவதாக கருத்துக்களும், கண்டங்களும் கூறப்படுகிறது. #VallabhbhaiPatel #Tamil #StatueofUnity
    ×