search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sapling program"

    • மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.
    • அரசு அலுவலர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்ட னர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் குன்னூர் கிராமத்தில் ஆர்பர் தினம் மற்றும் பசுமை தமிழ்நாடு இயக்கம் ஆண்டு விழாவை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட கலெக்டர் ஜெய சீலன் மற்றும் ஸ்ரீவில்லி புத்தூர் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் திலீப்குமார் ஆகியோர் தொடங்கி வைத்து மரக் கன்றுகளை நட்டனர்.

    தமிழகத்தில் 21 சதவிகிதம் பசுமை பரப்பு உள்ளது. இதை 33 சதவீதமாக உயர்த்திடும் நோக்கில் தமிழக அரசு பசுமை தமிழகம் இயக்கம், தமிழ்நாடு பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் பசுமை யாக்கும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    விருதுநகர் மாவட்டத்தில் தற்போது சுமார் 6.5 சத விகிதம் பசுமை பரப்பளவு உள்ளது. அதனை அதி கரிக்கும் வகையில் வனத் துறையின் மூலம் பசுமை தமிழ்நாடு இயக்கம் மற்றும் தமிழ்நாடு பல்லுயிர் பாது காப்பு மற்றும் பசுமையாக்கும் திட்டத்தின் கீழ் சுமார் 7 லட்சம் மரக்கன்றுகள் நடு வதற்கு திட்டமிடப்பட்டு உள்ளது. மேலும் இத்திட் டத்தின் மூலம் விவசாயி களுக்கு பருவ மழை காலத்தில் நடவு செய்ய தேக்கு மகாகனி வேம்பு நெல்லி வேங்கை புங்கை பூவரசு மலை வேம்பு உள்ளிட்ட கன்றுகள் நாற்றங் கால்களில் தயார் நிலையில் உள்ளது.

    அதன் ஒரு பகுதியாக குன்னூர் கிராமத்தில் பெருமளவு மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதில் பள்ளி கல்லூரி மாணவர் கள், தன்னார்வ அமைப்பு கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனர். இந்நிகழ்ச்சியில் வனத்துறை அலுவலர்கள், பணியாளர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்ட னர்.

    • மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது.
    • நகர்மன்றத்தலைவர் தங்கம் ரவிக்கண்ணன் தலைமையில் உறுதிமொழி ஏற்று மரங்களை நட்டு தூய்மை பணிக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியின் தூய்மை நகரத்திற்கான மக்கள் இயக்கம் சார்பில் 32-வது வார்டு மடவார்வளாகத்தில் தீவிர தூய்மை பணிகள் மற்றும் ''என் குப்பை என் பொறுப்பு'' நிகழ்ச்சி நடந்தது.

    நகர்மன்றத்தலைவர் தங்கம் ரவிக்கண்ணன் தலைமையில் உறுதிமொழி ஏற்று மரங்களை நட்டு தூய்மை பணிக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்நிகழ்வில் பேசிய நகர்மன்றத் தலைவர், ஸ்ரீவில்லிபுத்தூர் நகரத்தை தூய்மையாக வைத்திருக்க பொதுமக்களும் நகராட்சியுடன் சேர்ந்து செயல்பட வேண்டும்.

    வீதிகளில் குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும். பொது இடங்களில் குப்பைகளை சேகரிக்காமல் நகராட்சி தூய்மை பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றார். இந்த நிகழ்வில் நகர்மன்றத் துணைத் தலைவர் செல்வமணி, ஆணையாளர் ராஐமாணிக்கம், சுகாதார ஆய்வாளர் சந்திரா,கவுன்சிலர் சுரேஷ் மற்றும் நகராட்சி தூய்மை பணியாளர்கள், தூய்மை பாரத இயக்க குழுவினர்கள் பங்கேற்றனர்.

    ×