search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Samba sector"

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சம்பா செக்டாரில் உள்ள சர்வதேச எல்லை பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் நேற்றிரவு அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தினர்.

    ஜம்மு:

    ஜம்மு-காஷ்மீர் மாநில எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினரும், பயங்கரவாதிகளும் அத்துமீறி நுழைந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 போலீசார் உயிரிழந்தனர். 

    இந்நிலையில், அம்மாநிலத்தின் சம்பா செக்டாரில் உள்ள சர்வதேச எல்லை பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் நேற்றிரவு அத்துமீறி நுழைந்தனர். அவர்கள் இந்திய ராணுவ நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தினர். இதையடுத்து இந்திய ராணுவத்தினர் பதில் தாக்குதல் நடத்தினர்.

    அப்பகுதியில் தொடர்ந்து தாக்குதல் நடைபெற்று வருவதாகவும், இந்த தாக்குதலில் 3 எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் காயமடைந்ததாக கூறப்படுகிறது. 
    ஜம்மு காஷ்மீர் மாநிலம் சம்பா செக்டாரில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர் உயிரிழந்துள்ளார். #CeaseFireViolation #BSF #SambaSector
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் சம்பா செக்டார் அருகே எல்லைக்கட்டுப்பாடு கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய நிலைகளை குறிவைத்து இன்று காலை தாக்கியது. துப்பாக்கி மற்றும் சிறிய ரக மோட்டார் குண்டுகளால் பாகிஸ்தான் படையினர் தாக்குதல் நடத்தினர்.

    இந்த தாக்குதலில் இந்திய எல்லை பாதுகாப்பு படை காவலர் தேவேந்திர குமார் என்பவர் உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து, இந்திய தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டு வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 
    ×