என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » salt production impact
நீங்கள் தேடியது "Salt Production Impact"
வேதாரண்யம் பகுதிகளில் மழை பெய்ததால் அந்த பகுதியில் உப்பு பணி பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால் 25 ஆயிரம் உப்பு தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டத்தில் மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மழையின் காரணமாக வெயிலின் தாக்கம் அதிகமாக தெரியவில்லை. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை தஞ்சையில் திடீரென வானம் திரண்டு மழை பெய்தது.
இதைத் தொடர்ந்து நேற்று மாலை நேரத்தில் வானம் கருமேகத்துடன் காட்சி அளித்தது. இதனால் மழை வரும் என்று எதிர்ப்பார்த்த நிலையில் 2-வது நாளாக இரவு மழை பெய்ய தொடங்கியது. லேசான தூறலாக தொடங்கிய மழை பின்னர் பலத்த மழையாக பெய்தது.
இதனால் தஞ்சையில் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது. சாலைகளில் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். இரவு மழை பெய்ததால் சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டது. சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழை அதன்பின் நின்றது. இதனால் தஞ்சை மேரீஸ் கார்னரில் உள்ள ரெயில்வே கீழ்பாலத்தில் அதிக அளவு தண்ணீர் தேங்கியது. அதைத் தொடர்ந்து மழை நின்ற பின் மோட்டார் மூலமாக தண்ணீர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டது.
திருவாரூர் மாவட்டத்திலும் பலத்த மழை பெய்தது. திருவாரூரில் வெயில் வாட்டி எடுத்த நிலையில் கடந்த சில நாட்களாக வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. ஆனால் மழை பெய்ய வில்லை.
இந்த நிலையில் நேற்று முன்தினம் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்தது. நேற்று வானம் திரண்டு மழை கொட்ட தொடங்கியது. பின்னர் பலத்த மழையாக பெய்தது இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
நாகை மாவட்டத்தில் நேற்று பெய்த பலத்த மழையால் சாலைகளில் மழை நீர் தேங்கி வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். மேலும் வேதாரண்யம் பகுதிகளில் மழை பெய்ததால் அந்த பகுதியில் உப்பு பணி பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால் 25 ஆயிரம் உப்பு தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து மணல்மேடு, சீர்காழி உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.
டெல்டா மாவட்டங்களில் தற்போது விவசாயிகள் குறுவை சாகுபடி பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ள நிலையில், மழை பெய்யத் தொடங்கி இருப்பது விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
டெல்டா மாவட்டங்களில் பெய்த மழை அளவு மி.மீட்டரில் பின்வருமாறு:-
வலங்கைமான் - 72.4
பாபநாசம் - 67.2
நன்னிலம் - 51.4
குடவாசல் - 44.8
அணைக்கரை - 32.6
நீடாமங்கலம் - 24.4
பாண்டவையாறு - 15.4
வெட்டிக்காடு - 14.8
திருவாரூர் - 13.8
நெய்வாசல்தென்பாதி - 11.6
கோரையாறு - 10.2
ஒரத்தநாடு - 8.9
பூதலூர் - 7.4
மஞ்சளாறு - 3.8
ஈச்சன்விடுதி - 2
தஞ்சை மாவட்டத்தில் மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மழையின் காரணமாக வெயிலின் தாக்கம் அதிகமாக தெரியவில்லை. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை தஞ்சையில் திடீரென வானம் திரண்டு மழை பெய்தது.
இதைத் தொடர்ந்து நேற்று மாலை நேரத்தில் வானம் கருமேகத்துடன் காட்சி அளித்தது. இதனால் மழை வரும் என்று எதிர்ப்பார்த்த நிலையில் 2-வது நாளாக இரவு மழை பெய்ய தொடங்கியது. லேசான தூறலாக தொடங்கிய மழை பின்னர் பலத்த மழையாக பெய்தது.
இதனால் தஞ்சையில் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது. சாலைகளில் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். இரவு மழை பெய்ததால் சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டது. சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழை அதன்பின் நின்றது. இதனால் தஞ்சை மேரீஸ் கார்னரில் உள்ள ரெயில்வே கீழ்பாலத்தில் அதிக அளவு தண்ணீர் தேங்கியது. அதைத் தொடர்ந்து மழை நின்ற பின் மோட்டார் மூலமாக தண்ணீர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டது.
திருவாரூர் மாவட்டத்திலும் பலத்த மழை பெய்தது. திருவாரூரில் வெயில் வாட்டி எடுத்த நிலையில் கடந்த சில நாட்களாக வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. ஆனால் மழை பெய்ய வில்லை.
இந்த நிலையில் நேற்று முன்தினம் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்தது. நேற்று வானம் திரண்டு மழை கொட்ட தொடங்கியது. பின்னர் பலத்த மழையாக பெய்தது இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
நாகை மாவட்டத்தில் நேற்று பெய்த பலத்த மழையால் சாலைகளில் மழை நீர் தேங்கி வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். மேலும் வேதாரண்யம் பகுதிகளில் மழை பெய்ததால் அந்த பகுதியில் உப்பு பணி பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால் 25 ஆயிரம் உப்பு தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து மணல்மேடு, சீர்காழி உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.
டெல்டா மாவட்டங்களில் தற்போது விவசாயிகள் குறுவை சாகுபடி பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ள நிலையில், மழை பெய்யத் தொடங்கி இருப்பது விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
டெல்டா மாவட்டங்களில் பெய்த மழை அளவு மி.மீட்டரில் பின்வருமாறு:-
வலங்கைமான் - 72.4
பாபநாசம் - 67.2
நன்னிலம் - 51.4
குடவாசல் - 44.8
அணைக்கரை - 32.6
நீடாமங்கலம் - 24.4
பாண்டவையாறு - 15.4
வெட்டிக்காடு - 14.8
திருவாரூர் - 13.8
நெய்வாசல்தென்பாதி - 11.6
கோரையாறு - 10.2
ஒரத்தநாடு - 8.9
பூதலூர் - 7.4
மஞ்சளாறு - 3.8
ஈச்சன்விடுதி - 2
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X