search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sale of tobacco"

    • புகையிலை விற்ற வியாபாரி கைது செய்யப்பட்டார்.
    • அரசு தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்ததாக மரக்காணம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது.

    விழுப்புரம்:

    மரக்காணம் அருகே கீழ்பேட்டை கிராமத்தில் இசிஆர் மெயின் ரோட்டில் பெட்டி கடை நடத்தி வருபவர் அர்ஜுனன் (வயது 55). இவர் தமிழக அரசு தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்ததாக மரக்காணம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. அதன் பெயரில் மரக்காணம் சப் இன்ஸ்பெக்டர் தீபன் மற்றும் போலீசார் உடன் சென்று மளிகை கடையை ஆய்வு செய்யும் போது அப்போது அவர் கடையில் வைத்திருந்த புகையிலை பாக்கெட் 15 பறிமுதல் செய்து அர்ஜுனன் மீதுவழக்கு பதிந்து கைது செய்தனர்

    • நெய்வேலியில் புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • சப்-இன்ஸ்பெக்டர் அழகிரி ஜெயதேவி உள்ளிட்ட போலீசார் நெய்வேலி நகர் பகுதியில் உள்ள கடைகளில் ஆய்வு செய்தனர்.

    கடலூர்:

    நெய்வேலி நகர பகுதியில் உள்ள கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்நிலையில் நெய்வேலி டிஎஸ்பி ராஜேந்திரன் உத்தரவின் பெயரில் சப்-இன்ஸ்பெக்டர் அழகிரி ஜெயதேவி உள்ளிட்ட போலீசார் நெய்வேலி நகர் பகுதியில் உள்ள கடைகளில் ஆய்வு செய்தனர். அப்பொழுது பெரியார் சதுக்கம் அருகில் பாரதி நகரை சேர்ந்த ராமஜெயம் விற்பனை செய்ததை போலீசார் கண்டுபிடித்து அவரை கைது செய்தனர். அப்போது அவரது கடையில் சுமார் 10000 மதிப்புள்ள 800 புகையிலை பாக்கெட் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ×