என் மலர்
நீங்கள் தேடியது "Sabarimala temple verdict"
சபரிமலை கோவிலில் பெண்களை அனுமதிக்கலாம் என்ற தீர்ப்பு தொடர்பான மறு சீராய்வு மனுவை அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. #Sabarimala #SupremeCourt
புதுடெல்லி:
சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று கடந்த மாதம் 28-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

மேலும் தேசிய ஐயப்ப பக்தர்கள் சங்கம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மறு சீராய்வு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது.
நேற்று தாக்கல் செய்யப்பட்ட அந்த மறு சீராய்வு மனுவை சுப்ரீம் கோர்ட்டு அவசர வழக்காக ஏற்று விசாரிக்க வேண்டும் என்று மனுவை தாக்கல் செய்த வக்கீல்கள் கோரிக்கை விடுத்தனர். தேசிய ஐயப்ப பக்தர்கள் சங்க வக்கீல்களின் கோரிக்கையை சுப்ரீம் கோர்ட்டு ஏற்க மறுத்து விட்டது.
சபரிமலை கோவிலில் பெண்களை அனுமதிக்கலாம் என்ற தீர்ப்பு தொடர்பான மறு ஆய்வு மனுவை சுப்ரீம் கோர்ட்டு பதிவாளரிடம் சமர்ப்பிக்கும் படியும், அங்கு வழக்கு பட்டியலிட்ட பின்பு அதன்மீது விசாரணை நடைபெறும் எனவும் சுப்ரீம் கோர்ட்டு அறிவித்து உள்ளது. #Sabarimala #SupremeCourt
சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று கடந்த மாதம் 28-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு ஐயப்ப பக்தர்களின் ஆச்சாரங்களுக்கு எதிரானது என்றும், எனவே இந்த தீர்ப்பை மறு சீராய்வு செய்ய வேண்டும் எனவும் ஐயப்ப பக்தர்கள், கோவில் தந்திரிகள் கோரிக்கை விடுத்தனர்.

மேலும் தேசிய ஐயப்ப பக்தர்கள் சங்கம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மறு சீராய்வு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது.
நேற்று தாக்கல் செய்யப்பட்ட அந்த மறு சீராய்வு மனுவை சுப்ரீம் கோர்ட்டு அவசர வழக்காக ஏற்று விசாரிக்க வேண்டும் என்று மனுவை தாக்கல் செய்த வக்கீல்கள் கோரிக்கை விடுத்தனர். தேசிய ஐயப்ப பக்தர்கள் சங்க வக்கீல்களின் கோரிக்கையை சுப்ரீம் கோர்ட்டு ஏற்க மறுத்து விட்டது.
சபரிமலை கோவிலில் பெண்களை அனுமதிக்கலாம் என்ற தீர்ப்பு தொடர்பான மறு ஆய்வு மனுவை சுப்ரீம் கோர்ட்டு பதிவாளரிடம் சமர்ப்பிக்கும் படியும், அங்கு வழக்கு பட்டியலிட்ட பின்பு அதன்மீது விசாரணை நடைபெறும் எனவும் சுப்ரீம் கோர்ட்டு அறிவித்து உள்ளது. #Sabarimala #SupremeCourt
சபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை கண்டித்து கேரளா முழுவதும் நாளை கடை அடைப்பு போராட்டம் நடத்தப்போவதாக சிவசேனா அறிவித்துள்ளது.
சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்யலாம் என்ற சுப்ரீம் கோர்ட்டின் அறிவிப்புக்கு ஒரு தரப்பினர் ஆதரவும், மற்றொரு தரப்பினர் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.
சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு சிவசேனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சபரிமலை தொடர்பான சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை கண்டித்து நாளை (1-ந் தேதி) கேரள மாநிலம் முழுவதும் கடை அடைப்பு போராட்டம் நடத்தப்போவதாக சிவசேனா அறிவித்துள்ளது.
இதுகுறித்து கேரள மாநில சிவசேனா தலைவர் புவனச்சந்திரன் கூறியதாவது-
ஒவ்வொரு கோவிலுக்கும், ஒரு பழக்க வழக்கம் உள்ளது. அதேபோல் சபரிமலை கோவிலுக்கென உள்ள பாரம்பரிய பழக்கவழக்கங்களை சுப்ரீம் கோர்ட் கவனத்தில் கொள்ளவில்லை. இது பக்தர்களிடையே வேதனையை ஏற்படுத்தி உள்ளது. எனவே இதனை கண்டித்து இந்த கடை அடைப்பு போராட்டத்தை நடத்துகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு சிவசேனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சபரிமலை தொடர்பான சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை கண்டித்து நாளை (1-ந் தேதி) கேரள மாநிலம் முழுவதும் கடை அடைப்பு போராட்டம் நடத்தப்போவதாக சிவசேனா அறிவித்துள்ளது.
இதுகுறித்து கேரள மாநில சிவசேனா தலைவர் புவனச்சந்திரன் கூறியதாவது-
ஒவ்வொரு கோவிலுக்கும், ஒரு பழக்க வழக்கம் உள்ளது. அதேபோல் சபரிமலை கோவிலுக்கென உள்ள பாரம்பரிய பழக்கவழக்கங்களை சுப்ரீம் கோர்ட் கவனத்தில் கொள்ளவில்லை. இது பக்தர்களிடையே வேதனையை ஏற்படுத்தி உள்ளது. எனவே இதனை கண்டித்து இந்த கடை அடைப்பு போராட்டத்தை நடத்துகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.






