search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Risk of disease"

    • தேங்கி கிடக்கும் குப்பைகளால் நோய் பரவும் அபாயம்
    • சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பாலையம்பட்டி

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலையம்பட்டி முதல் நிலை ஊராட்சியில் மதுரை சாலையில் குடிநீர் குழாய் அருகே திறந்தவெளியில் குப்பைகள் கொட்டப்படு வதால் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது. குடிநீர் குழாய் அருகே கொட்டப்படும் குப்பைக ளால் கொசுக்கள், ஈக்கள் உற்பத்தியாகி பொது மக்களுக்கு டெங்கு, மலேரியா போன்ற தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது.

    மேலும் அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. குப்பைகள் காற்றில் பறந்து வாகன ஓட்டிகளின் முகத்தில் விழுகிறது. எனவே உடனடியாக குப்பைகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்வதோடு இதுபோன்று திறந்த வெளியில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • குடிநீர் எடுக்க தண்ணீர் வராததால் பல ஆண்டுகளாக பல சிரமங்களை அடைந்து வருகிறார்கள்.
    • தண்ணீரை பருகும் கிராம மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வட்டம் மரக்காணம் அருகே எண்டியூர் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்ப ங்கள் வசிக்கின்றனர். திண்டிவனம் மரக்காணம் செல்ல சாலை ஓரம் உள்ள இப்பகுதியில் வசிக்கும் கிராமத்தில் உள்ளவர்கள் குடிநீர் குழாயின் மூலம் தாங்கள் குடும்பத்திற்கு குடிநீர் எடுக்க தண்ணீர் வராததால் பல ஆண்டுகளாக பல சிரமங்களை அடைந்து வருகிறார்கள்.

    இதனால் தங்கள் பகுதி க்கு தண்ணீர் சீராக வருவதில்லை. எனவே தண்ணீர் பிடிப்பதற்கு பள்ளம் தோண்டுகிறார்கள். இந்த தண்ணீரை பருகும் கிராம மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இந்த கிராம த்திற்கு சீரான குடிநீர் வழங்க வேண்டும் என்று அப்பகுதியில் வசிக்கும் குடும்ப த்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • மொடக்குறிச்சி அடுத்த பூந்துறை பெரியசேமூர் பகுதியை சேர்ந்த மக்கள் சிலர் வந்து கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
    • ஈக்கள் தொல்லை யால் எங்கள் கிராமத்தைச் சேர்ந்த பெரியவர்கள் முதல் சிறியவர்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

    ஈரோடு:

    மொடக்குறிச்சி அடுத்த பூந்துறை பெரியசேமூர் பகுதியை சேர்ந்த மக்கள் சிலர் வந்து கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    எங்கள் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான கோழி பண்ணை செயல்பட்டு வருகிறது. சரியான பராமரிப்பு இன்றி உள்ளதால் எங்கள் கிரா மத்தில் குடியிருப்புகளிலும், கால்நடை வளர்ப்புகளிலும் ஈக்கள் தொந்தரவு அதிகமாகி உள்ளது.

    இதனால் சுகாதாரக் கேடு நோய் பரப்பும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் ஈக்கள் தொல்லை யால் எங்கள் கிராமத்தைச் சேர்ந்த பெரியவர்கள் முதல் சிறியவர்கள் அவதி அடைந்து வருகின்றனர். உடனடியாக அந்த கோழி பண்ணையை மூடவோ அல்லது வேறு இடத்திற்கு மாற்றவோ நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் அந்த மனுவில் கூறியுள்ள னர்.

    ×