search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "transmission"

    • நாளை 24-ந் தேதி திங்கட்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படும்.
    • 10 கிராமங்களுக்கு மின் வினியோகம் இருக்காது.

    விழுப்புரம்:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக கண்டமங்கலம் கோட்ட செயற்பொறியாளர் சிவகுரு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் கோட்டத்தை சேர்ந்த கண்ட மங்கலம் 110/22 கி.வோ. குமளம் பீடர் உயரழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் நாளை 24-ந் தேதி திங்கட்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படும். இதனால் பண்ணக்குப்பம், ஆழியூர், வனத்தாம்பாளையம், குயிலாப்பாளையம், சேஷாங்கனூர், பி.எஸ்.பாளையம், வாதானூர், குறான்பாளையம், ஆண்டிபாளையம், திருமங்கலம் உள்ளிட்ட 10 கிராமங்களுக்கு மின் வினியோகம் இருக்காது என்பதை பொதுமக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம். மேற்கண்டவாறு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக கண்டமங்கலம் கோட்ட செயற்பொறியாளர் சிவகுரு அறிவித்துள்ளார்.

    • மொடக்குறிச்சி அடுத்த பூந்துறை பெரியசேமூர் பகுதியை சேர்ந்த மக்கள் சிலர் வந்து கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
    • ஈக்கள் தொல்லை யால் எங்கள் கிராமத்தைச் சேர்ந்த பெரியவர்கள் முதல் சிறியவர்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

    ஈரோடு:

    மொடக்குறிச்சி அடுத்த பூந்துறை பெரியசேமூர் பகுதியை சேர்ந்த மக்கள் சிலர் வந்து கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    எங்கள் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான கோழி பண்ணை செயல்பட்டு வருகிறது. சரியான பராமரிப்பு இன்றி உள்ளதால் எங்கள் கிரா மத்தில் குடியிருப்புகளிலும், கால்நடை வளர்ப்புகளிலும் ஈக்கள் தொந்தரவு அதிகமாகி உள்ளது.

    இதனால் சுகாதாரக் கேடு நோய் பரப்பும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் ஈக்கள் தொல்லை யால் எங்கள் கிராமத்தைச் சேர்ந்த பெரியவர்கள் முதல் சிறியவர்கள் அவதி அடைந்து வருகின்றனர். உடனடியாக அந்த கோழி பண்ணையை மூடவோ அல்லது வேறு இடத்திற்கு மாற்றவோ நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் அந்த மனுவில் கூறியுள்ள னர்.

    ×