search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "raw banana price low"

    பரமத்தி வேலூரில் வாழைத்தார் விலை சரிந்து உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
    பரமத்திவேலூர்:

    பரமத்தி வேலூர் காவிரி கரையோர பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் வாழை பயிர் செய்யப்பட்டுள்ளது. இங்கு விளையும் வாழைத்தார்கள் கேரளா ,கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், சேலம், கோவை, ஈரோடு, கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் தினந்தோறும் லாரிகள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது.

    மேலும் விவசாயிகள் பரமத்தி வேலூர் வாழைத்தார் சந்தைக்கு தங்களது தோட்டத்தில் விளைவித்த வாழைத்தார்களை நேரடியாக கொண்டு வந்து விற்பனை செய்யும் வசதி உள்ளது.

    கடந்த வாரம் 600 வாழைத்தார்களை விவசாயிகள் ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர். இதில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.400 வரையிலும், ரஸ்தாலி ரூ.450-க்கும், பச்சைநாடன் ரூ.450-க்கும், கற்பூரவள்ளி ரூ.500-க்கும் ஏலம் போனது. மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ.8-க்கு ஏலம் போனது.

    நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு 750 வாழைத்தார்களை விவசாயிகள் ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர். இதில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.200 வரையிலும், ரஸ்தாலி ரூ.250-க்கும், பச்சைநாடன் ரூ.100-க்கும், கற்பூரவள்ளி ரூ.250-க்கும் ஏலம் போனது. மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ.6-க்கு ஏலம் போனது. கடந்த வாரத்தை விட நேற்று விலை சரிவு ஏற்பட்டது.
    பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில் வாழைத்தார் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் வாழை விவசாயம் அதிகம் நடைபெறுகிறது. குறிப்பாக பவானி ஆற்றுப்பகுதியில் அதிகம் வாழைகளை பயிரிடப்படுகிறது. வாழைகள் நன்கு காய்த்து அறுவடைக்கு தயாராக இருந்தபோது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்தது. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் கனமழை கொட்டியது.

    இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. வெள்ளப்பெருக்கால் ஆற்றங்கரையோரம் பயிரிட்டிருந்த வாழைகள் தண்ணீரில் மூழ்கின. அறுவடைக்கு தயாரான வாழை குலைகளை அறுவடை செய்ய முடியாமல் போனதால் வாழைகள் அழுகி நாசமானது. இதனால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது. ஒரு சில இடங்களில் வாழை நல்ல விளைச்சலை கண்டது. பெரும்பாலும் ஓணம் திருவிழாவிற்காக கதளி, நேந்திரன், பூவன், ரஸ்தாளி, செவ்வாழை, தேன் வாழைகள் அதிகம் பயிரிடப்பட்டிருந்தன. கேரளாவில் மழை காரணமாக ஓணம் ரத்து செய்யப்பட்டது.

    கேரளாவுக்கு என்றே பயிரிட்ட வாழைகள் ஏற்றுமதி செய்யமுடியாமல் தேக்கம் அடைந்தது. சுற்றுப்புற பகுதிகளில் விளையும் வாழைகள் மேட்டுப்பாளையம் வாழை மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்படுகிறது. கேரளாவுக்கு ஏற்றுமதி செய்ய வியாபாரிகள் யாரும் வரவில்லை. இதனால் வாழை விலை மற்றும் விற்பனை கடும் சரிவு ஏற்பட்டுள்ளது.

    கடந்த வருடம் இதே நேரத்தில் ஒரு கிலோ நேந்திரன் விலை ரூ.55 ஆக இருந்தது. தற்போது ரூ.32-க்கு மட்டுமே விற்பனையாகிறது.

    இதேபோன்று கதளி, நேந்திரன், பூவன், ரஸ்தாளி, செவ்வாழை, தேன் வாழை ஆகியவைகளின் விலையும் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது.

    தற்போது நேந்திரன் ஒரு கிலோ ரூ.15 முதல் ரூ.32 வரையும், கதளி ரூ.25-ல் இருந்து ரூ.55 வரையும், பூவன் (ஒரு தார்) ரூ.600 முதல் ரூ.900 வரையும், ரஸ்தாளி ரூ.200 முதல் ரூ.600 வரையும், செவ்வாழை ரூ.1000 முதல் ரூ.1200 வரையும், தேன் வாழை ரூ.500 முதல் ரூ.600 வரையும் ஏலம்போனது.

    இது குறித்து விவசாயிகள் கூறும்போது, கேரளாவுக்கு இந்த நேரத்தில் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் தார்கள் வரை ஏற்றுமதி செய்யப்படும். சுமார் 20 ஆயிரம் வாழைத்தார்கள் தேக்கம் அடைந்துள்ளன. இதனால் கடும் விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

    இது தவிர பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பெரும் பகுதி வாழைகள் நாசமானது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வாழை ஒன்றுக்கு ரூ.150 இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    குமரி மாவட்டத்தில் வாழை விளைச்சல் அதிகமாக இருப்பதால் வாழைத்தார்கள் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் வாழை மரங்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு ஒகி புயல் தாக்குதலின் போது குமரி மாவட்டத்தில் பல லட்சம் வாழைகள் முறிந்து விழுந்தன. இதனால் வாழை விவசாயிகள் கடும் பாதிப்புக்கு ஆளானார்கள்.

    இதன்பிறகு மீண்டும் குமரி மாவட்டத்தில் வாழை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டனர். இந்த முறை ரப்பர் தோட்டங்களிலும் ஊடு பயிராக வாழை பயிரிடப்பட்டது. மேலும் புயலால் ரப்பர் மரங்கள் சேதம் அடைந்த தோட்டங்களிலும் ரப்பருக்கு பதில் பலரும் வாழைகளேயே பயிரிட்டனர். இதனால் வாழை சாகுபடி பரப்பளவு அதிகரித்தது.

    இந்த நிலையில் பருவ மழையும் விவசாயிகளுக்கு கைகொடுத்தது. இதனால் வாழைகள் அமோக விளைச்சலை கண்டுள்ளன. தொடர்ந்து வாழைகளுக்கு தட்டுப்பாடு இல்லாமல் தண்ணீர் கிடைத்து வருவதால் வாழைத்தார்கள் சந்தைகளுக்கு விற்பனைக்காக அதிகளவு வரத் தொடங்கி உள்ளது.

    விளைச்சல் அதிகமாக இருப்பதால் வாழைத்தார்கள் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது. குலசேகரம் பகுதியில் பயிரிடப்பட்ட வாழைகள் குலசேகரம் சந்தையில் அதிகளவு விற்பனையாகிறது. செவ்வாழைத்தார்கள் கிலோ ரூ.35 என்ற குறைந்த விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது. நேந்திரன் வாழைகள் கிலோ ரூ.45- க்கு வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்படுகிறது.

    அதேபோல் மட்டி உள்பட பல ரக வாழைத்தார்களும் குறைந்த விலைக்கே விற்பனையாகிறது. தற்போது ஆடி மாதம் என்பதால் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் அதிகளவு நடைபெறாது. இதனால் வாழைத்தார்கள் தேவையும் குறைந்து உள்ளது. அதே சமயம் தொடர்ந்து வாழைகள் அதிகளவு சந்தைக்கு வருவதால் அதன் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. இதனால் வாழை விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
    ×