search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rahil Gandhi"

    • இது அரசியல் கட்சியின் நடவடிக்கை ஆகாது.
    • சட்டத்தின் முன் அனைவரும் சமம்.

    புதுடெல்லி :

    ராகுல் காந்திக்கு அவதூறு வழக்கில் குஜராத் கோர்ட்டு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதித்ததைத் தொடர்ந்து அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்டுள்ளது.

    நாடு முழுவதும் இது அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

    இது தொடர்பாக பா.ஜ.க. தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அது வருமாறு:-

    தர்மேந்திர பிரதான் மற்றும் அனுராக் தாகூர் (மத்திய மந்திரிகள்):-

    சட்டம் எல்லோருக்கும் சமமானதுதான். ராகுல் காந்தி தனது திருடர்கள் என்ற கூற்றால் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை அவதூறாகப் பேசி உள்ளார்.

    பவன் கெராவை அசாம் போலீஸ் கைது செய்தபோது, எடுத்தது போன்று ராகுல் காந்தி விவகாரத்தில் நிவாரணம் பெற மேல் கோர்ட்டை நாடவில்லை. காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே இதில் சதி நடக்கிறது.

    ராகுல் காந்தி மீதான நடவடிக்கை, இயல்பானதுதான். தண்டிக்கப்பட்ட நாளில் இருந்தே எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என்பதை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்துள்ளது. இந்த சட்ட நடைமுறையை மக்களவை சபாநாயகர் உறுதி செய்திருக்கிறார். அவ்வளவுதான்.

    எஸ்.பி.எஸ்.பாகல் (சட்டத்துறை ராஜாங்க மந்திரி):-

    இது சட்டப்படியான நடவடிக்கை. சட்டத்தின் முன் அனைவரும் சமம்.

    பிரகலாத் ஜோஷி (பாராளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி):-

    இது சட்டப்படியான நடவடிக்கை ஆகும். இது அரசியல் கட்சியின் நடவடிக்கை ஆகாது. இது கோர்ட்டால் எடுக்கப்பட்டது.

    பூபேந்தர் யாதவ் (மத்திய தொழிலாளர் நலத்துறை மந்திரி):-

    இந்த வழக்கு விசாரணையின்போது, வழக்கைப் புரிந்து கொண்டு மன்னிப்பு கேட்பதற்கு கோர்ட்டு மீண்டும் மீண்டும் வாய்ப்பு அளித்தது. ஆனால் ராகுல் அவ்வாறு செய்யவில்லை. காங்கிரஸ் கட்சியும், ராகுல் காந்தியும் நாட்டின் சட்டத்தை விட மேலானவர்களா?

    இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் பின்பெயரை அவதூறாகப் பேசுவது ஒரு தேசியத்தலைவரின் வேலையா?

    கோர்ட்டு தீர்ப்பை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • அடுத்தகட்ட அரசியல் வியூகம் குறித்து இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
    • எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை குறித்த விஷயத்தை சரியான முறையில் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

    புதுடெல்லி:

    அவதூறு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதால், எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. காங்கிரஸ் தொண்டர்கள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்துகின்றனர்.

    இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் கட்சியின் மூத்த நிர்வாகிகள் அவசர ஆலோசனை மேற்கொண்டனர். சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, ப.சிதம்பரம் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்வது தொடர்பாகவும், மத்திய அரசுக்கு எதிரான போராட்டம் தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட்டது.

    இக்கூட்டத்திற்கு பின்னர் கட்சியின் மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:-

    ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்தை தொடர்ந்து அடுத்தகட்ட அரசியல் வியூகம் குறித்து இன்றைய கூட்டத்தில் விவாதித்தோம். வரும் நாட்களில் நாடு முழுவதும் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். மோடி அரசுக்கு எதிராக குரல் கொடுத்தற்காக ராகுல் காந்தியை வேண்டுமென்றே தகுதிநீக்கம் செய்ததாக நாடு முழுவதும் எடுத்துரைக்க உள்ளோம்.

    பாரத் ஜோடோ யாத்திரை ஒரு பெரிய இயக்கமாக மாறியது. மேலும் அதானி விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து கேள்வி எழுப்புகிறது. இதனால் பாஜக கலக்கமடைந்துள்ளது.

    எங்களுக்கு ஆதரவாக பேசிய எதிர்க்கட்சி தலைவர்களின் கருத்தை வரவேற்கிறோம். நாம் இப்போது எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை குறித்த விஷயத்தை சரியான முறையில் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். பாராளுமன்றத்தில் காங்கிரஸ் தலைவர் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து செயல்படுகிறார். இதை இனி வெளியிலும் செய்ய வேண்டியுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு சட்டங்களை மேலும் பலப்படுத்தும் என்று ராகுல் காந்தி உறுதி அளித்தார்.
    • பழங்குடியினரின் கலாச்சாரம் மற்றும் வரலாற்றை புரிந்து கொள்ளாவிட்டால் நாட்டைப் புரிந்து கொள்ள முடியாது

    புல்தானா:

    மகாராஷ்டிராவில் இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஜல்கான்-ஜமோத்தில் இன்று ஆதிவாசி மகளிர் தொழிலாளர்களிடையே உரையாற்றினார்.

    அப்போது, பழங்குடியினர் நலன் மற்றும் அவர்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் உருவாக்கப்பட்ட சட்டங்களை நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பலவீனப்படுத்தி வருவதாக குற்றம் சாட்டினார், மேலும் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு அந்த சட்டங்களை மேலும் பலப்படுத்துவதுடன் புதிய சட்டங்கள் இயற்றப்படும் என்றும் ராகுல் காந்தி உறுதி அளித்தார்.

    பழங்குடியினர் நாட்டின் முதல் உரிமையாளர்கள். பிற குடிமக்களைப் போலவே அவர்களுக்கு சம உரிமைகள் உள்ளன. பழங்குடியினரின் கலாச்சாரம் மற்றும் வரலாற்றை புரிந்து கொள்ளாவிட்டால் நாட்டைப் புரிந்து கொள்ள முடியாது என்றும் பேசினார்.

    மேலும், பழங்குடியினரின் நிலங்களை பறித்து தனது தொழிலதிபர் நண்பர்களுக்கு வழங்க பிரதமர் விரும்புவதாகவும் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

    ×