search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "puja items"

    • பவுர்ணமி திதியும், கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்து வரும் நாள் கார்த்திகை தீபத் திருநாளாக கொண்டாடப்படுகிறது.
    • அகல் விளக்குகளில் பஞ்சு திரியிட்டு, நல்லெண்ணெய் அல்லது பஞ்ச கூட்டு எண்ணெய் ஊற்றி விளக்கேற்றி வழிபாடு நடத்துவார்கள்.

    திண்டுக்கல்:

    தமிழ் மாதங்களில் ஒன்றான கார்த்திகை மாத த்தில் பவுர்ணமி திதியும், கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்து வரும் நாள் கார்த்திகை தீபத் திருநாளாக கொண்டாடப்படுகிறது. அதன்படி நாளை திருக்கா ர்த்திகை தீப திருநாள் கொண்டாடப்படுகிறது.

    அன்றைய தினம் வீடுகள் தோறும் விளக்குகள் ஏற்றி வழிபடுவது வழக்கம். அகல் விளக்குகளில் பஞ்சு திரியிட்டு, நல்லெண்ணெய் அல்லது பஞ்ச கூட்டு எண்ணெய் ஊற்றி விளக்கேற்றி வழிபாடு நடத்துவார்கள்.

    இதற்காக திண்டுக்கல் கடைவீதிகளில் சாலை யோரங்களில் அகல் விளக்கு, திரி, எண்ணெய் மற்றும் பூஜை பொருட்கள் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது.

    அம்மன் விளக்கு, பாவை, கும்பம், விநாயகர் மற்றும் டிசைன் விளக்குகள் விற்பனைக்கு வந்துள்ளது. விளக்குகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் தேர்வு செய்து வாங்கி வருகின்றனர். ரூ.2 முதல் ரூ.100 வரையிலான 1 இன்ச் முதல் ஒரு அடி வரை விளக்குகள் விற்பனைக்கு வந்துள்ளது. இதனால் கடைவீதிகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.

    • மதுரை மார்க்கெட்டுகளில் பூஜை பொருட்களை வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
    • இதனால் பொதுமக்கள் அதிக ஆர்வத்துடன் காய் கறிகளை வாங்கி வருகிறார்கள்.

    மதுரை

    விநாயகர் சதுர்த்தியை யொட்டி மதுரை மார்க் கெட்டுகளில் காய்கறி மற்றும் பூஜை பொருட்களை வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது

    இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி விழா இன்று சிறப்பாக கொண்டா டப்பட்டு வருகிறது. மதுரை யிலும் வழக்கமான உற்சா கத்துடன் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

    மதுரை பகுதியில் உள்ள அனைத்து விநாயகர் கோவில் களிலும் விநாய கருக்கு சிறப்பு படையல் செய்து பூஜைகள் செய்யப் பட்டு வருகிறது. இதை யொட்டி விநாயகர் சதுர்த்திக்கு தேவையான பொருட்களை வாங்க பொதுமக்கள் மதுரை மார்க்கெட்டுகளில் அதிக அளவில் திரண்டு உள்ளனர்.

    இதற்காக ஒவ்வொரு மார்க்கெட்டுகளிலும் வழக்கத்தைவிட கூடுதலாக கடைகள் அமைக்கப்பட்டுள் ளன. மேலும் முக்கிய சாலை களின் இருபுறங்களிலும் விநாயகர் சதுர்த்திக்கு தேவையான அவல், அரிசி பொறி, பொறிகடலை, வாழை கன்றுகள், அருகம் புல் மாலை, எருக்கலை மாலை மற்றும் பூஜை பொருட்கள் அதிக அளவில் விற்பனைக்காக வைக்கப் பட்டுள்ளன.

    பழ மார்க்கெட்டுகளில் ஆப்பிள், கொய்யா, மாதுளை, ஆரஞ்சு, எலுமிச்சை உள்ளிட்ட பழங்களையும் பொது மக்கள் ஆர்வத்துடன் வாங்கி வருகிறார்கள். இதற்காக வழக்கத்தை விட மதுரை மார்க்கெட்டுகளில் அதிக அளவில் பழங்கள் மற்றும் காய்கறிகள் விற்ப னைக்கு வந்துள்ளன. மதுரை காய்கறி மார்க்கெட் களில் காய்கறிகளை வாங்க வும் பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகி றார்கள்.

    இதனால் நாட்டு காய்கறி களான தக்காளி, கத்தரி, வெண்டை, புடலை, சுரைக் காய் உள்ளிட்ட காய்கறிகள் வழக்கமான விலையிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மற்ற காய்கறி களும் சிறிதளவு விலை உயர்ந்து விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் பொதுமக்கள் அதிக ஆர்வத்துடன் காய் கறிகளை வாங்கி வரு கிறார்கள்.

    தற்போது புரட்டாசி மாதம் என்பதால் அசைவ பிரியர்கள் மட்டன், சிக்கன், மீன் உள்ளிட்ட கடைகளில் கூட்டம் குறைந்துள்ளன. விநாயகர் சதுர்த்தியை யொட்டி மதுரை காய்கறி மார்க் கெட்டுகளில் பொதுமக்கள் அதிகளவில் திரண்டு உள்ளதால் வியாபாரம் களை கட்டி உள்ளது.

    இதன் காரணமாக பூஜை பொருட்கள்,பழங்களின் விலைகளும் சற்று அதி கரித்துள்ளதாக பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

    பூ -சிலை விற்பனை அமோகம்

    மதுரை பூ மார்க்கெட்டில் மல்லிகை 800 ரூபாய்க்கும், பிச்சி, முல்லை பூக்கள் 500 ரூபாய்க்கும் மற்ற பூக்கள் வழக்கமான விலை யிலும் விற்பனை செய்யப் பட்டு வருகின்றன. பூக்களை வாங்கவும் மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகி றார்கள். விநாயகர் சதுர்த்திக்காக வீடுகளில் வைத்து வழிபாடு செய்வ தற்காக சிறிய அளவிலான விநாயகர் சிலைகள் கண்கவர் வண்ணங்களிலும், வடிவங்களிலும் முக்கிய மார்க்கெட்டுகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.

    களிமண்ணால் செய்யப்பட்ட இந்த விநாயகர் சிலைகளை வாங்க பொதுமக்கள் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். பூஜைக்கு தேவையான அனைத்து பொருட்களையும் மக்கள் ஆர்வத்துடன் வாங்கி வருவதால் மதுரையில் விநாயகர் சதுர்த்தி விழா களைகட்டி உள்ளது.

    • பிளாஸ்டிக் தோரணங்கள் புதிய டிசைன்கள் விற்பனைக்காக வரவழைக்கப்பட்டன.
    • திண்டிவனம் பகுதியில் இருந்து தற்போது பூசணிக்காய் வந்துள்ளன.

    கடலூர்:

    ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி விழா வருகிற 4 5 ஆகிய தேதிகளில் விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது . இதை முன்னிட்டு கடலூர் மாவட்டத்தில் பூஜை பொருட்கள் அதிகரித்து விற்பனைக்கு வந்துள்ளது. கடை வீதியில் வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு, தேங்காய், பூசணிக்காய், பழங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டு உள்ளன. மேலும் வர்த்தக நிறுவனங்கள், கடைகளை அழகுப்படுத்த வைக்கப்படும் கலர் பேப்பர்கள், பிளாஸ்டிக் தோரணங்கள் புதிய டிசைன்கள் விற்பனைக்காக வரவழைக்கப்பட்டன. இதனை தொடர்ந்து கடலூர் மஞ்சக்குப்பத்தில் தற்காலிகமாக உழவர் சந்தை, திருப்பாதிரிப்புலியூர், முதுநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் தற்போது பூசணிக்காய் வரத்து வந்துள்ளன. இதில் திண்டிவனம் பகுதியில் இருந்து தற்போது பூசணிக்காய் வந்துள்ளன.

    தற்போது2 டன் பூசணிக்காய் கடலூர் தற்காலிக உழவர் சந்தைக்கு வந்துள்ளது. இதில் ஒரு கிலோ பூசணிக்காய் 30 ரூபாய்க்கு விற்பனை செய்யபடுகின்றன. ஆனால் இந்த ஆண்டு ஆயுத பூஜை விழாயையொட்டி தற்போது 2 டன் பூசணிக்காய் வந்துள்ளது. ஆனால் கடந்த ஆண்டு குறைந்தபட்சம் 10 டன் பூசணிக்காய் வரத்து வந்தது. இதன் காரணமாக விற்பனையும் அதிகரித்து காணப்பட்டது. மேலும் பொது மக்களும் ஆர்வமுடன் பூசணிக்காய் வாங்கி சென்றனர். இந்த நிலையில் பூசணிக்காய் விளைச்சல் குறைந்த‌ காரணத்தினால் பூசணிக்காய் வரத்து குறைந்துள்ளதால், நாளை முதல் பூசணிக்காய் விற்பனை அதிகமாகும் சமயத்தில் விரைவில் பூசணிக்காய் தீர்ந்துவிடும். மேலும் பூசணிக்காய் விலை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • அழகர் கோவிலில் பூஜை பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படுகிறது.
    • பக்தர்கள் சமைக்கும் கூடாரங்கள் பழுதடைந்து இருப்பதை சரிசெய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    மேலூர்

    மதுரை புறநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் ஆன்மீக ஆலயம் மேம்பாட்டு அணியின் சார்பில் மாவட்ட தலைவர் மஹா. சுசீந்திரன் வழிகாட்டுதலின்படி ஆன்மீக மேம்பாடு மற்றும் ஆலய பாத்தகாப்பு பிரிவு மாவட்ட தலைவரும், கீழவளவு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான தர்மலிங்கம் தலைமையில் அழகர் கோவிலில் மாவட்ட மண்டல நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட துணைத்தலைவர் ராமசாமி, மாவட்டச் செயலாளர் சூரக்குண்டு சோனை, நிர்வாகிகள் பாலன், பொன்னம்மாள், தொகுதி பார்வையாளர் முத்துராஜா மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில், அழகர்கோ விலில் பூஜை பொருட்கள் அதிக விலைக்கு விற்கப் படுவதை தடுக்க வேண்டும். அழகர் கோவிலில் பக்தர்கள் சமைக்கும் கூடாரங்கள் பழுதடைந்து இருப்பதை சரிசெய்ய வேண்டும்.உசிலம்பட்டி தொகுதியில் ஆக்கிரமிப்பில் உள்ள கோவில் இடங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இந்து ஆலயங்களில் வணிகம் செய்யும் உரி மையை இந்துக்களுக்கு கொடுக்க வேண்டும். என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    ×