search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாளை திருக்கார்த்திகை திண்டுக்கல்லில் அகல் விளக்கு, பூஜை பொருட்கள் விற்பனை மும்முரம்
    X

    கச்சேரி தெருவில் அகல் விளக்கு உள்ளிட்ட பூஜை பொருட்களை வாங்கி சென்றனர்.

    நாளை திருக்கார்த்திகை திண்டுக்கல்லில் அகல் விளக்கு, பூஜை பொருட்கள் விற்பனை மும்முரம்

    • பவுர்ணமி திதியும், கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்து வரும் நாள் கார்த்திகை தீபத் திருநாளாக கொண்டாடப்படுகிறது.
    • அகல் விளக்குகளில் பஞ்சு திரியிட்டு, நல்லெண்ணெய் அல்லது பஞ்ச கூட்டு எண்ணெய் ஊற்றி விளக்கேற்றி வழிபாடு நடத்துவார்கள்.

    திண்டுக்கல்:

    தமிழ் மாதங்களில் ஒன்றான கார்த்திகை மாத த்தில் பவுர்ணமி திதியும், கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்து வரும் நாள் கார்த்திகை தீபத் திருநாளாக கொண்டாடப்படுகிறது. அதன்படி நாளை திருக்கா ர்த்திகை தீப திருநாள் கொண்டாடப்படுகிறது.

    அன்றைய தினம் வீடுகள் தோறும் விளக்குகள் ஏற்றி வழிபடுவது வழக்கம். அகல் விளக்குகளில் பஞ்சு திரியிட்டு, நல்லெண்ணெய் அல்லது பஞ்ச கூட்டு எண்ணெய் ஊற்றி விளக்கேற்றி வழிபாடு நடத்துவார்கள்.

    இதற்காக திண்டுக்கல் கடைவீதிகளில் சாலை யோரங்களில் அகல் விளக்கு, திரி, எண்ணெய் மற்றும் பூஜை பொருட்கள் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது.

    அம்மன் விளக்கு, பாவை, கும்பம், விநாயகர் மற்றும் டிசைன் விளக்குகள் விற்பனைக்கு வந்துள்ளது. விளக்குகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் தேர்வு செய்து வாங்கி வருகின்றனர். ரூ.2 முதல் ரூ.100 வரையிலான 1 இன்ச் முதல் ஒரு அடி வரை விளக்குகள் விற்பனைக்கு வந்துள்ளது. இதனால் கடைவீதிகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.

    Next Story
    ×