search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pudhupettai 2"

    • 'புதுப்பேட்டை 2’ எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
    • செல்வராகவன் "புதுப்பேட்டை 2 இந்த வருடம் தொடங்கும் என்று நம்புகிறேன்" என பதிவிட்டிருந்தார்.

    தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான செல்வராகவன் இயக்கத்தில் 2006-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'புதுப்பேட்டை'. இந்த படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்திருந்தார். மேலும், சோனியா அகர்வால், சினேகா என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.


    இதையடுத்து சமீபத்தில் இந்த எதிர்பார்ப்புகளுக்கு தீணி போடும் வகையில் இயக்குனர் செல்வராகவன் தனது சமூக வலைதளத்தில், "புதுப்பேட்டை 2 இந்த வருடம் தொடங்கும் என்று நம்புகிறேன்" என பதிவிட்டிருந்தார். இதற்கு கொக்கி குமார் மீண்டும் வரார் என ரசிகர்கள் மகிழ்ச்சியாக கமெண்ட் செய்து வந்தனர்.


    இந்நிலையில் 'புதுப்பேட்டை 2' திரைப்படத்தில் நடிக்க நடிகை சோனியா அகர்வால் விருப்பம் தெரிவித்துள்ளார். அதாவது, சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட சோனியா அகர்வால், "கண்டிப்பாக புதுப்பேட்டை-2 படத்தில் நடிக்க அழைத்தால் நடிப்பேன். நடிப்பு என்னுடைய தொழில். செல்வாக்கூட சேர்ந்து வேலை செய்வதில் எனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை. ஆனால், இதுவரை 'புதுப்பேட்டை 2' படத்தில் நடிக்கவேண்டும் என்று எந்த அழைப்பும் வரவில்லை. யார் யார் இதுல நடிக்க போகிறார்கள் என்றும் எனக்கு தெரியாது" என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இயக்குனர் செல்வராகவன் பல படங்களை இயக்கியுள்ளார்.
    • இவரின் 'புதுப்பேட்டை 2' படத்திற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

    தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான செல்வராகவன் இயக்கத்தில் 2006-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'புதுப்பேட்டை'. இந்த படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்திருந்தார். மேலும், சோனியா அகர்வால், சினேகா என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.


    இந்நிலையில், இந்த எதிர்பார்ப்புகளுக்கு தீணி போடும் வகையில் இயக்குனர் செல்வராகவன் பதிவு அமைந்துள்ளது. அதாவது இயக்குனர் செல்வராகவன் தனது சமூக வலைதளத்தில், "புதுப்பேட்டை 2 இந்த வருடம் தொடங்கும் என்று நம்புகிறேன்" என பதிவிட்டுள்ளார். இதற்கு கொக்கி குமார் மீண்டும் வரார் என ரசிகர்கள் மகிழ்ச்சியாக கமெண்ட் செய்து வருகின்றனர்.


    இயக்குனர் செல்வராகவன் 'துள்ளுவதோ இளமை', 'காதல் கொண்டேன்', '7ஜி ரெயின்போ காலனி', 'ஆயிரத்தில் ஒருவன்', 'என்.ஜி.கே.' உள்பட பல வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்குவதோடு மட்டுமல்லாமல் நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார்.


    • நீண்ட இடைவெளிக்குப் பிறகு செல்வராகவன், தனுஷ் கூட்டணியில் உருவாகி வரும் படம் நானே வருவேன்.
    • சமீபத்தில் செல்வராகவன் - கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான சாணிக் காயிதம் படம் நல்ல வரவேற்பை பெற்றது.

    தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் செல்வராகவன். 'துள்ளுவதோ இளமை', 'காதல் கொண்டேன்', '7ஜி ரெயின்போ காலனி', 'புதுப்பேட்டை', 'ஆயிரத்தில் ஒருவன்', 'என்.ஜி.கே.' உள்பட பல வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார். தற்போது தனுஷ் நடிப்பில் 'நானே வருவேன்' படத்தை இயக்கி வருகிறார். இப்பொழுது இவர் நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

    புதுப்பேட்டை - ஆயிரத்தில் ஒருவன்

    புதுப்பேட்டை - ஆயிரத்தில் ஒருவன்

    இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகி பலரின் பாராட்டுக்களை பெற்ற புதுப்பேட்டை மற்றும் ஆயிரத்தில் ஒருவன் ஆகிய 2 திரைப்படங்களின் இரண்டாம் பாகத்தை ரசிகர்கள் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில், சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த இயக்குனர் செல்வராகவன் புதுப்பேட்டை 2 மற்றும் ஆயிரத்தில் ஒருவன் 2 ஆகிய இரண்டு திரைப்படங்களும் விரைவில் தொடங்கப்படும் என்றும் முதலில் புதுப்பேட்டை 2 திரைப்படம் தொடங்கப்படும், அதன்பின் ஆயிரத்தில் ஒருவன் 2 தயாராகும் என்றும் தெரிவித்துள்ளார். இவரின் இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளதாக பதிவிட்டு வருகின்றனர்.

    பல படங்களில் அடுத்தது ஒப்பந்தமாகும் நடிகர் தனுஷ், அடுத்ததாக மீண்டும் அண்ணன் செல்வராகவன் இணைய இருக்கிறார். #Dhanush #SelvaRaghavan
    தனுஷ் நடிப்பில் வெளியான ‘வடசென்னை’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. அடுத்து தனுஷ் தனது இயக்கத்தில் தயாராகி வரும் பிரம்மாண்ட சரித்திர படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் நான்காவது முறையாக இணைகிறார்.

    அதற்கு அடுத்து சமீபத்தில் வெளிவந்த ‘ராட்சசன்’ படத்தை இயக்கிய ராம்குமார் இயக்கத்தில் ஒரு ஆக்‌‌ஷன் திரில்லர் படத்திலும் நடிக்கவிருக்கிறார். அந்த படத்துக்கு பிறகு செல்வராகவனும் தனுஷும் அடுத்த ஆண்டு இறுதியில் இணையவிருக்கிறார்கள்.



    இப்படம் இவர்கள் இருவரின் கூட்டணியில் ஏற்கெனவே வந்த புதுப்பேட்டை படத்தின் இரண்டாம் பாகமாகவும் இருக்கலாம் என்கிறார்கள். செல்வராகவன் தற்போது சூர்யா, ரகுல்பிரீத்தி சிங், சாய் பல்லவி நடிப்பில் என்.ஜி.கே படத்தை இயக்கி வருகிறார். 
    செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகிய புதுப்பேட்டை படத்தின் இரண்டாவது பாகம் உருவாக்குவது பற்றிய ரசிகரின் கேள்விக்கு செல்வராகவன் பதில் அளித்துள்ளார். #Selvaraghavan #Pudhupettai2
    தமிழ் சினிமாவில் தனது உன்னத படைப்பின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் இயக்குநர்களுள் ஒருவர் செல்வராகவன். அவரது படங்களை எப்போது பார்த்தாலும் ரசிக்கும்படியாகவே இருக்கும். அந்த அளவுக்கு நேர்த்தியாக இயக்கியிருப்பார்.

    அவர் தற்போது சூர்யாவை வைத்து என்ஜிகே படத்தை இயக்கி வருகிறார். ஒரு படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் உருவாகுவது தான் தற்போதைய சினிமாவில் ட்ரெண்டாக இருக்கிறது. அந்த வகையில் அவரது இயக்கத்தில் உருவான ஆயிரத்தில் ஒருவன், புதுப்பேட்டை உள்ளிட்ட படங்களின் இரண்டாவது பாகங்கள் எப்போது உருவாகும் என்று ரசிகர்கள் அவ்வப்போது கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

    முன்னதாக ஆயிரத்தில் ஒருவன், புதுப்பேட்டை இந்த இரு படங்களின் இரண்டாம் பாகத்திற்கு தான் கதை யோசித்து வைத்திருப்பதாக செல்வராகவன் கூறியிருந்தார். எனவே இந்த இரு படங்களின் இரண்டாம் உருவாகும், செல்வராகவன் - தனுஷ் கூட்டணி மீண்டும் இணையும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தனர்.

    இந்த நிலையில், நடிகர் சந்தீப் கிஷன், மீண்டும் புதுப்பேட்டை படத்தை பார்க்கிறேன். வருடங்கள் கடந்தாலும் ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் ஒருவித பூரிப்பு ஏற்படுகிறது. என்று அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். அதற்கு நன்றி தெரிவித்திருந்த செல்வராகவனிடம் ரசிகர் ஒருவர் புதுப்பேட்டை இரண்டாம் பாகத்திற்காக காத்திருப்பதாக கூறியிருந்தார். அவருக்கு பதில் அளித்த செல்வா, நேரம் வரும் போது நிச்சயம் உருவாகும் என்று கூறியிருக்கிறார்.

    ×