search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Aayirathil Oruvan 2"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இயக்குனர் செல்வராகவன் பல படங்களை இயக்கியுள்ளார்.
    • இவரின் 'புதுப்பேட்டை 2' படத்திற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

    தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான செல்வராகவன் இயக்கத்தில் 2006-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'புதுப்பேட்டை'. இந்த படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்திருந்தார். மேலும், சோனியா அகர்வால், சினேகா என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.


    இந்நிலையில், இந்த எதிர்பார்ப்புகளுக்கு தீணி போடும் வகையில் இயக்குனர் செல்வராகவன் பதிவு அமைந்துள்ளது. அதாவது இயக்குனர் செல்வராகவன் தனது சமூக வலைதளத்தில், "புதுப்பேட்டை 2 இந்த வருடம் தொடங்கும் என்று நம்புகிறேன்" என பதிவிட்டுள்ளார். இதற்கு கொக்கி குமார் மீண்டும் வரார் என ரசிகர்கள் மகிழ்ச்சியாக கமெண்ட் செய்து வருகின்றனர்.


    இயக்குனர் செல்வராகவன் 'துள்ளுவதோ இளமை', 'காதல் கொண்டேன்', '7ஜி ரெயின்போ காலனி', 'ஆயிரத்தில் ஒருவன்', 'என்.ஜி.கே.' உள்பட பல வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்குவதோடு மட்டுமல்லாமல் நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார்.


    • நீண்ட இடைவெளிக்குப் பிறகு செல்வராகவன், தனுஷ் கூட்டணியில் உருவாகி வரும் படம் நானே வருவேன்.
    • சமீபத்தில் செல்வராகவன் - கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான சாணிக் காயிதம் படம் நல்ல வரவேற்பை பெற்றது.

    தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் செல்வராகவன். 'துள்ளுவதோ இளமை', 'காதல் கொண்டேன்', '7ஜி ரெயின்போ காலனி', 'புதுப்பேட்டை', 'ஆயிரத்தில் ஒருவன்', 'என்.ஜி.கே.' உள்பட பல வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார். தற்போது தனுஷ் நடிப்பில் 'நானே வருவேன்' படத்தை இயக்கி வருகிறார். இப்பொழுது இவர் நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

    புதுப்பேட்டை - ஆயிரத்தில் ஒருவன்

    புதுப்பேட்டை - ஆயிரத்தில் ஒருவன்

    இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகி பலரின் பாராட்டுக்களை பெற்ற புதுப்பேட்டை மற்றும் ஆயிரத்தில் ஒருவன் ஆகிய 2 திரைப்படங்களின் இரண்டாம் பாகத்தை ரசிகர்கள் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில், சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த இயக்குனர் செல்வராகவன் புதுப்பேட்டை 2 மற்றும் ஆயிரத்தில் ஒருவன் 2 ஆகிய இரண்டு திரைப்படங்களும் விரைவில் தொடங்கப்படும் என்றும் முதலில் புதுப்பேட்டை 2 திரைப்படம் தொடங்கப்படும், அதன்பின் ஆயிரத்தில் ஒருவன் 2 தயாராகும் என்றும் தெரிவித்துள்ளார். இவரின் இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளதாக பதிவிட்டு வருகின்றனர்.

    செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த புதுப்பேட்டை படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சி கைவிடப்பட்டதாக கூறிய செல்வராகவன், ஆயிரத்தில் ஒருவன் 2 படத்திற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றார்.
    தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்குநர்களுள் ஒருவர் செல்வராகவன். இவரது இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள என்ஜிகே திரைப்படம் வருகிற மே 31-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது.

    செல்வராகவன் இயக்கிய புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் படங்களின் இரண்டாம் பாகங்கள் எப்போது என்று ரசிகர்கள் அடிக்கடி கேள்வி எழுப்பி வருகின்றனர். செல்வராகவனும் விரைவில் அதற்கான பணிகள் துவங்கும் என்று கூறி வந்தார். இந்த நிலையில், அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,



    புதுப்பேட்டை இரண்டாம் பாகம் எடுக்க யோசித்தேன். ஆனால் தனுஷ் 2-ம் பாகம் எடுத்து சொதப்பி விடக்கூடாது என்று தயங்கியதால் முயற்சி கைவிடப்பட்டது. கார்த்தியை வைத்து ஆயிரத்தில் ஒருவன் 2-ம் பாகம் எடுக்க முடிவு செய்துள்ளேன். இதற்கான கதை தயாராகிவிட்டது. சோழ மன்னர்களின் வரலாற்று நிகழ்வுகள் இந்த படத்தில் பதிவு செய்யப்படும்.

    அரசியல் தலைவர்களில் எனக்கு எம்.ஜி.ஆரை பிடிக்கும். அவரது வாழ்க்கையை படமாக்க வாய்ப்பு கிடைத்தால் செய்வேன்.” என்றார்.

    செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான `ஆயிரத்தின் ஒருவன்' படத்தின் இரண்டாம் பாகம் மூலம் சோழனின் பயணத்தை தொர விரும்புவதாக செல்வராகவன் தெரிவித்துள்ளார். #AayirathilOruvan2 #CholanJourney
    12-ம் நூற்றாண்டின் சோழ பின்னணியைக் கொண்டு தமிழில் எடுக்கப்பட்ட படம் ஆயிரத்தில் ஒருவன். கார்த்தி, ரீமாசென், ஆன்ட்ரியா நடித்த இந்த படத்தை செல்வராகவன் இயக்கினார்.

    2010-ஆம் ஆண்டு வெளியான இந்த படம் தமிழ் சினிமாவின் முக்கியமான முயற்சியாக அப்போது பார்க்கப்பட்டது. தமிழில் ஒரு புதிய கதைக் களத்தைப் படைத்த செல்வராகவன் குழுவுக்கு பாராட்டுகள் குவிந்தன.

    ஆனால் செல்வராகவனிடம் டுவிட்டரில் அடிக்கடி வைக்கப்படும் கேள்வியாக இருப்பது என்னோவோ ‘புதுப்பேட்டை 2’, `ஆயிரத்தில் ஒருவன் 2' எப்போது வரும் என்பது தான். அவரும் நிச்சயம் வரும் என்று கூறி ரசிகர்களை ஆசுவாசப்படுத்துவார். இதற்கிடையே, தன்னுடைய ஆசை குறித்து தற்போது டுவிட்டரில் பகிர்ந்து ரசிகர்களை இன்ப அதிர்ச்சியடைய வைத்துள்ளார் செல்வராகவன்.


    ஆயிரத்தில் ஒருவன் 2 எடுப்பது தான் அவரின் நீண்ட நாள் ஆசையாக இருப்பதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் ``வெளியே எங்குச் சென்றாலும் நண்பர்கள் ‘புதுப்பேட்டை 2‘ எப்போது என்று அன்பாய் கேட்கின்றனர். நடக்கும் என சொல்வேன். ஆயினும் என் மனதுக்குள் கேட்கும் தீரா ஓசை `ஆயிரத்தில் ஒருவன் 2’ எடுக்க வேண்டும் என்பதுதான். சோழன் பயணம் தொடர வேண்டும் என்பது என்னுள் புதைந்து கிடக்கும் நீண்ட நாள் தாகம்“ எனக் கூறியுள்ளார். #AayirathilOruvan2 #CholanJourney #Selvaraghavan

    ×