என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pudhupettai"

    • 2006 ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் புதுப்பேட்டை திரைப்படம் வெளியானது.
    • யுவன் சங்கர் ராஜா இசையில் இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ஹிட் ஆகின.

    நடிகர் தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு 'புதுப்பேட்டை' திரைப்படம் ஜூலை 26ல் புதுப்பொலிவுடன் 4K தரத்தில் ரீ-ரிலீஸ் ஆகிறது

    2006 ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் புதுப்பேட்டை திரைப்படம் வெளியானது. இப்படத்தில் தனுஷ், சோனியா அகர்வால், சினேகா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். யுவன் சங்கர் ராஜா இசையில் இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ஹிட் ஆகின.

    புதுப்பேட்டை திரைப்படம் வெளியான சமயத்தில் மக்களிடம் போதிய வரவேற்பை பெறவில்லை. ஆனால் இத்திரைப்படம் பின்னாளில் மக்களிடம் பெரும் கவனத்தை பெற்று கல்ட் கிளாசிக் கேங்ஸ்டர் படமாக மாறியது குறிப்பிடத்தக்கது.

    • இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றன.
    • தனுஷ் கேங்ஸ்டர் வேடத்தில் நடித்திருப்பார்.

    திரையுலகில் நடிகர், இயக்குநர், பாடலாசிரியர் என பன்முகத்தன்மை கொண்டவர் தனுஷ். இவர் நடிப்பில் உருவாகும் 50 ஆவது திரைப்படம் ராயன். இதனை இவரே இயக்கியுள்ளார். ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ள ராயன் படம் வருகிற ஜூன் 13 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. சமீபத்தில் இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றன.

    தனுஷ் ஆரம்பக்கட்டத்தில் நடித்து வெளியான படம் "புதுப்பேட்டை." இயக்குநரும், நடிகர் தனுஷின் சகோதரருமான செல்வராகவன் இயக்கிய புதுப்பேட்டை படத்தில் தனுஷ் கேங்ஸ்டர் வேடத்தில் நடித்திருப்பார். இந்த படம் விமர்சன ரீதியில் பெரும் வரவேற்பை பெற்றது.

    மேலும், இந்த படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த நிலையில், புதுப்பேட்டை படம் வெளியாகி 18 ஆண்டுகள் நிறைவு செய்ததை ஒட்டி, நடிகர் தனுஷ் தனது எக்ஸ் தளத்தில் படம் குறித்து பதிவிட்டுள்ளார்.

    அதில், "ஒரு நடிகருக்கு திரை பயணத்தில் சில கதாபாத்திரங்கள் மட்டும்தான் அழுத்தமானதாக அமையும். இதுபோன்ற கதாபாத்திரம் தான் கொக்கி குமார். இப்படி ஒரு கதாபாத்திரத்தை கொடுத்த செல்வராகவனுக்கு நன்றி. நான் அதை சிறப்பாக செய்ய வேண்டும் என்று மட்டுமே விரும்பினேன். கொக்கி குமார் ஒரு எமோஷன்," என்று குறிப்பிட்டுள்ளார்.

    செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த புதுப்பேட்டை படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சி கைவிடப்பட்டதாக கூறிய செல்வராகவன், ஆயிரத்தில் ஒருவன் 2 படத்திற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றார்.
    தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்குநர்களுள் ஒருவர் செல்வராகவன். இவரது இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள என்ஜிகே திரைப்படம் வருகிற மே 31-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது.

    செல்வராகவன் இயக்கிய புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் படங்களின் இரண்டாம் பாகங்கள் எப்போது என்று ரசிகர்கள் அடிக்கடி கேள்வி எழுப்பி வருகின்றனர். செல்வராகவனும் விரைவில் அதற்கான பணிகள் துவங்கும் என்று கூறி வந்தார். இந்த நிலையில், அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,



    புதுப்பேட்டை இரண்டாம் பாகம் எடுக்க யோசித்தேன். ஆனால் தனுஷ் 2-ம் பாகம் எடுத்து சொதப்பி விடக்கூடாது என்று தயங்கியதால் முயற்சி கைவிடப்பட்டது. கார்த்தியை வைத்து ஆயிரத்தில் ஒருவன் 2-ம் பாகம் எடுக்க முடிவு செய்துள்ளேன். இதற்கான கதை தயாராகிவிட்டது. சோழ மன்னர்களின் வரலாற்று நிகழ்வுகள் இந்த படத்தில் பதிவு செய்யப்படும்.

    அரசியல் தலைவர்களில் எனக்கு எம்.ஜி.ஆரை பிடிக்கும். அவரது வாழ்க்கையை படமாக்க வாய்ப்பு கிடைத்தால் செய்வேன்.” என்றார்.

    ×