என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Police patrol vehicles"
- 47 இரு சக்கர ரோந்து வாகனங்களும், 55 நான்கு சக்கர ரோந்து வாகனங்களின் நிலை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
- ரோந்து வாகனங்கள் இயக்கப்பட வேண்டிய முறை குறித்து காவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
திருப்பூர் :
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் குற்றச்சம்பவங்கள் நிகழாமலிருக்க மாநகரப் பகுதியில் காவல்துறை சார்பில் பாதுகாப்பு பணிகள் தீவிரபடுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் மாநகர போலீஸ் நிலையத்திற்குட்பட்ட போலீஸ் நிலையங்களின் ரோந்து வாகனங்கள் நிலை குறித்த ஆய்வு நடைபெற்றது.
காவல் நிலைய ரோந்து வாகனங்களின் நிலை குறித்து மாநகர காவல் தலைமையிடத்து துணை ஆணையர் பாஸ்கரன் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் 47 இரு சக்கர ரோந்து வாகனங்களும், 55 நான்கு சக்கர ரோந்து வாகனங்களின் நிலை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ரோந்து வாகனங்கள் இயக்கப்பட வேண்டிய முறை குறித்து காவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
- மோட்டார் சைக்கிள்களில் அதிவேகத்தில் வரும் இளைஞர்கள் சாலை ஓரத்தில் நிறுத்தி இருக்கும் வாகனங்களை இடித்து தள்ளி விட்டு அதனை கண்டுகொள்ளாமல் சென்று விடுகின்றனர்.
- விதி மீறல் பயணங்கள் மற்றும் சாகச சவாரி போன்றவை அடிக்கடி நடைபெற்று விபத்துகளும், உயிரிழப்புகளும் நடந்து வருகிறது.
கொடைக்கானல்:
கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் அதிகம் கூடும் இடங்களில் ஏரிச்சாலை முக்கியமான பகுதியாகும். இங்கு சைக்கிள் சவாரி, குதிரை சவாரி போன்றவையும் நடைபெறும்.
வெளியூர்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் தங்கள் மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களை ஏரிச்சாலையில் நிறுத்தி விட்டு படகு சவாரி, குதிரை சவாரி செய்வது வழக்கம்.
மேலும் சிலர் அங்குள்ள நடைமேடையில் கால்நடையாக நடந்து சென்று இயற்கை அழகை கண்டு ரசிப்பார்கள். இந்நிலையில் மோட்டார் சைக்கிள்களில் அதிவேகத்தில் வரும் இளைஞர்கள் சாலை ஓரத்தில் நிறுத்தி இருக்கும் வாகனங்களை இடித்து தள்ளி விட்டு அதனை கண்டுகொள்ளாமல் சென்று விடுகின்றனர்.
மேலும் கார்களின் கண்ணாடிகளையும் கைப்பிடிகளையும் சேதப்படுத்தி செல்வதும் வாடிக்கையாக உள்ளது. போக்குவரத்து நெரிசலாக இருக்கும் நாட்களில் வாகனங்களை எங்கு நிறுத்துவது என தெரியாமல் கிடைக்கும் இடங்களில் நிறுத்தி விட்டு சுற்றுலா பயணிகள் செல்லும் போது மீண்டும் திரும்பி வந்தால் அது சேதமடைந்த நிலையை கண்டு மனம் வருந்தி விடுகின்றனர்.
இது குறித்து யாரிடம் புகார் செய்வது என்று தெரியாமல் சேதமடைந்த வாகனங்களையே எடுத்து சென்று விடுகின்றனர். போக்குவரத்து நெரிசல் ஏற்படும் சமயங்களிலும் விதி மீறல் பயணங்களை கண்காணிக்கவும், கொடைக்கானலில் போக்கு வரத்து காவலர்களுக்கு ரூ.23 லட்சம் மதிப்பிலான ரோந்து வாகனங்கள் வழங்கப்பட்டது. ஆனால் அந்த வாகனங்களை போலீசார் பயன்படுத்துவதே கிடையாது.
இதனால் விதி மீறல் பயணங்கள் மற்றும் சாகச சவாரி போன்றவை அடிக்கடி நடைபெற்று விபத்துகளும், உயிரிழப்புகளும் நடந்து வருகிறது. எனவே இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ரூ.14.71 கோடி மதிப்பிலான 93 ரோந்து வாகனங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை காவல் துறையின் பயன்பாட்டிற்காக கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
- இவ்வாகனங்களில் ரோந்து வாகன சமிக்ஞை விளக்குகள் மற்றும் ஒலி பெருக்கிகள் பொருத்தப்பட்டு உள்ளன.
சென்னை:
2021-22ஆம் ஆண்டு காவல்துறை மானியக் கோரிக்கையில் முதல்-அமைச்சர் நவீன கட்டுப்பாட்டு அறையை பலப்படுத்தும் விதமாக பழுதடைந்துள்ள பழைய ரோந்து வாகனங்களுக்கு மாற்றாக புதிய வாகனங்கள் வாங்கப்படும் என்றும், சுமார் 10 வருடங்களாக பயன்படுத்தப்பட்டு வரும் வாகனங்களுக்கு பதிலாக புதிய ரோந்து வாகனங்களும் வாங்கப்படும் என்று அறிவித்தார்.
அதன்படி, சென்னை காவல் துறையின் நவீன காவல் கட்டுப்பாட்டறையின் மூலம் நாள்தோறும் பெறப்படும் அவசர சேவை அழைப்புகளுக்கு விரைந்து சேவை வழங்கிடவும் மற்றும் சேவையை பலப்படுத்தும் விதமாகவும் தற்போது பயன்பாட்டில் இருந்து வரும் பழுதடைந்த ரோந்து வாகனங்களுக்கு பதிலாக புதிதாக 46 ரோந்து வாகனங்களும், சென்னை பெருநகரில் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசலை சீர் செய்திடவும், அவசர ஊர்திகளின் பயன்பாடு மற்றும் மிக முக்கிய பிரமுகர்களுக்கு பாதுகாப்பான போக்குவரத்தினை விரைவுப்படுத்திடவும் சுமார் 10 ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வரும் பழைய போக்குவரத்து ரோந்து வாகனங்களுக்கு பதிலாக புதிதாக 47 போக்குவரத்து ரோந்து வாகனங்களும், என மொத்தம் ரூ.14.71 கோடி மதிப்பிலான 93 ரோந்து வாகனங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை காவல் துறையின் பயன்பாட்டிற்காக கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இவ்வாகனங்களில் ரோந்து வாகன சமிக்ஞை விளக்குகள் மற்றும் ஒலி பெருக்கிகள் பொருத்தப்பட்டு உள்ளன. இதன்மூலம் காவல் கட்டுப்பாட்டறையில் பெறப்படும் சேவை அழைப்புகளுக்கும், போக்குவரத்து காவல் மூலம் பெறப்படும் சேவை அழைப்புகளுக்கும் விரைந்து நடவடிக்கை எடுக்க மிகவும் பயனுள்ளதாக அமைவதுடன் சென்னை பெருநகர காவல் பணி மேன்மேலும் சிறக்க உறுதுணையாக இருக்கும்.
நிகழ்ச்சியில், உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி, தலைமைச் செயலாளர் இறையன்பு, உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே. பிரபாகர், காவல்துறை தலைமை இயக்குநர் செ. சைலேந்திர பாபு, சென்னை கமிஷனர் சங்கர் ஜிவால் மற்றும் காவல்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்