search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Plastic Bottles"

    • ஒரு பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலை ரூ.1-க்கு வாங்க கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி உத்தரவிட்டார்.
    • இன்று ஒரே நாளில் 612 பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை ஒரு நபர் கொண்டு வந்து ஒப்படைத்தார்.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி சார்பில் நெகிழி இல்லா நெல்லையை உருவாக்கும் விதமாக பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    பிளாஸ்டிக் பாட்டில்கள்

    அதன் ஒரு பகுதியாக மாநகராட்சி பகுதியில் உள்ள 4 மண்டலங்களிலும் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள், வாறுகால் உள்ளிட்ட வற்றில் வீசப்படு வதை தடுக்க புதிய முயற்சியாக கடந்த மார்ச் மாதம் 23-ந்தேதி ஒரு பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலை ரூ.1-க்கு வாங்க கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி உத்தரவிட்டார்.

    இந்த திட்டத்தை முதன் முதலாக நெல்லை மண்டலத்தில் தொடங்க முடிவு செய்யப்பட்டு உதவி கமிஷனர் வெங்கட்ராமன், மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில் சுகாதார அலுவலர் இளங்கோ மேற்பார்வையில் தண்ணீர் பாட்டில்கள் ஒன்றுக்கு ரூ.1 விலை கொடுத்து வாங்கப்பட்டது.

    25 ஆயிரம்

    இந்த திட்டத்திற்கு நல்ல வரவேற்பு இருந்த நிலையில் இன்று வரை கொள்முதல் செய்யப்பட்ட தண்ணீர் பாட்டில்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்தை கடந்தது. இன்று ஒரே நாளில் 612 பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை ஒரு நபர் கொண்டு வந்து ஒப்படைத்தார்.

    ×