என் மலர்
நீங்கள் தேடியது "பிளாஸ்டிக் பாட்டில்கள்"
- பஸ்சில் பிளாஸ்டிக் தண்ணீா் பாட்டில்கள் உள்ளதாக ஊட்டி நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
- சோதனை சாவடிகளில் கடுமையான சோதனைகளை மேற்கொண்டால் மட்டுமே நீலகிரியின் சுற்றுச்சூழல் காக்கப்படும்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு பிளாஸ்டிக் குடிநீா் பாட்டில் உள்பட 19 வகையான பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தடையை மீறி, நீலகிரிக்கு பிளாஸ்டிக் பொருள்கள் கொண்டுவரப்படுகிறதா? என்பது குறித்து அவ்வப்போது அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் சோதனையில் ஈடுபட்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகளில் அடிக்கடி அதிகாரிகள் ஆய்வு செய்து பிளாஸ்டிக் வைத்திருப்போருக்கு அபராதம் விதித்து வருகிறார்கள்.
இந்நிலையில், கா்நாடக மாநிலம் சிக்மகளூர் நகராட்சி ஆணையாளர், நகராட்சி கவுன்சிலா்கள் மற்றும் சிக்மகளூர் சட்டப்பேரவை உறுப்பினா் கொண்ட குழு நீலகிரியில் திடக்கழிவு திட்டங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக அண்மையில் ஊட்டிக்கு வந்தனர். அவா்கள் வந்த பஸ்சில் பிளாஸ்டிக் தண்ணீா் பாட்டில்கள் உள்ளதாக ஊட்டி நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அந்தப் பஸ்சில் நகராட்சி நகா்நல அலுவலா் சிபி தலைமையிலான நகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, அதில் 1 லிட்டா் பிளாஸ்டிக் குடிநீா் பாட்டில்கள் 60 இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, பாட்டில் ஒன்றுக்கு ரூ.100 வீதம் ரூ.6 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
இது குறித்து சமூக ஆா்வலா்கள் கூறுகையில், கூடலூா், நாடுகாணி சோதனை சாவடிகளை கடந்து தண்ணீா் பாட்டில்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
இது சோதனைச் சாவடியின் குறைபாட்டை காட்டுகிறது. சோதனை சாவடிகளில் கடுமையான சோதனைகளை மேற்கொண்டால் மட்டுமே நீலகிரியின் சுற்றுச்சூழல் காக்கப்படும். இதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பிளாஸ்டிக் பாட்டில்களை தூள்களாக்கி மறுசுழற்சி செய்யும் வகையில் எந்திரங்களை வாங்கி உள்ளனர்.
- முதல் கட்டமாக 2 எந்திரங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளது.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் வரும் சுற்றுலா பயணிகள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் குடிநீர், குளிர்பானம் பாட்டில்களை சாலையோரம் வீசிசெல்வதால் புராதன சின்னங்கள் பகுதியில் சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்பட்டு வந்தது. இதை பார்க்கும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் முகம் சுழிக்கும் நிலை ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து மாமல்லபுரம் பகுதியில் சுற்றுலா பயணிகள் பயன்படுத்திவிட்டு வீசி செல்லும் பிளாஸ்டிக் பாட்டில்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில் மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம், தனியார் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து பிளாஸ்டிக் பாட்டில்களை தூள்களாக்கி மறுசுழற்சி செய்யும் வகையில் எந்திரங்களை வாங்கி உள்ளனர். முதல் கட்டமாக 2 எந்திரங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளது.
இதில் ஒரு எந்திரம் மாமல்லபுரம் கடற்கரை சாலையிலும், மற்றொரு எந்திரம் ஐந்துரதம் பகுதியிலும் வைக்கப்பட்டு உள்ளது. பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் மூலம் சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் பாட்டில்களை மறு சுழற்சி செய்யும் பகுதியில் துகள்களாக்கப்படுகிறது.
இந்த எந்திரங்களை மாமல்லபுரம் பேரூராட்சி தலைவர் வளர்மதி எஸ்வந்த்ராவ் தொடங்கி வைத்தார்.
- பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்பது ரத்த அழுத்தத்தைக் குறைக்கும்.
- பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்ட பானங்களை தவிர்க்க வேண்டும்.
மைக்ரோபிளாஸ்டிக்ஸ், நமது உணவு மற்றும் தண்ணீரில் காணப்படும் சிறிய பிளாஸ்டிக் துகள்கள் உள்ளிட்ட பல்வேறு மூலங்களிலிருந்து உலகம் மாசுபாட்டை எதிர்கொள்கிறது.
இந்த மைக்ரோபிளாஸ்டிக்ஸ் மனித ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிப்பதாக கருதப்படுகிறது. இதனால் இதய பிரச்சனைகள், ஹார்மோன் ஏற்றத்தாழ்வு மற்றும் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் குடிப்பதால் ரத்த ஓட்டத்தில் நுழையும் மைக்ரோபிளாஸ்டிக் காரணமாக ரத்த அழுத்தம் அதிகரிக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
பிளாஸ்டிக் நுகர்வு குறைவதால் ரத்த அழுத்தம் குறைவதை குறிக்கும் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில், ரத்த ஓட்டத்தில் இருக்கும் பிளாஸ்டிக் துகள்கள் உயர் ரத்த அழுத்தத்திற்கு பங்களிக்கக்கூடும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
ஆய்வின் முடிவுகளின்படி, பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்பது ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் என்று தெரிய வந்துள்ளது. பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்ட பானங்களை தவிர்க்க வேண்டும் என்ற பரிந்துரைக்கப்பட்டுள்ளது.






