search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "PETTION"

    • கூட்டத்தில் முதலாவதாக விவசாயிகளின் கோரிக்கைக்கான மனுக்கள் கலெக்டரிடம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • தக்க ஆவணங்களுடன் வரும் விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசன மேலாண்மை தகவல் அமைப்பில் பதிவு செய்து கொள்ளவும் ஏற்பாடு செய்யப்படும்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் 25.8.2023 அன்று மாவட்ட கலெக்டர் தலைமையில் காலை 10 மணிக்கு மாவட்ட கலெக்டர் வளாக அறை எண் 240 ல் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது.கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் விவசாயிகளும் கலந்து கொள்ள உள்ளனர்.

    கூட்டத்தில் முதலாவதாக விவசாயிகளின் கோரிக்கைக்கான மனுக்கள் கலெக்டரிடம் வழங்கவும், பின்னர் பதிவு செய்யப்பட்ட விவசாய சங்கங்களில் ஒரு சங்கத்திற்கு ஒருவர் வீதம் தங்களது கோரிக்கைகளை தொகுத்து கலெக்டரிடம் நேரடியாக தெரிவித்திட கேட்டுக்கொ ள்ளப்படுகிறது.

    மேலும் விவசாயிகள் நுண்ணீர் பாசனம் அமைத்திட விவசாயிகளுக்கு ஏதுவாக வேளாண்மை அலுவலர், தோட்டக்கலை அலுவலர் மற்றும் வேளாண் பொறியியல் துறை அலுவலர்களை கொண்டு வேளாண் உதவி மையம் கூட்டத்தில் அமைக்கப்படும். வேளாண் உதவி மையத்தின் மூலம் விவசாயிகள் நுண்ணீர் பாசனம் அமைக்க தேவையான தகவல்கள் வழங்கப்படும். தக்க ஆவணங்களுடன் வரும் விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசன மேலாண்மை தகவல் அமைப்பில் பதிவு செய்து கொள்ளவும், வேளாண் - உழவர் நலத்துறை மற்றும் வேளாண் சார்ந்த துறைகளால் அமைக்கப்படவுள்ள கருத்துக்காட்சியிலும் கலந்து கொண்டு விவசாயிகள் பயன்பெறலாம் என கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.  

    • அய்யம்பாளையம் குபேர விநாயகர் கும்பாபிஷேக விழாவில் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
    • அப்போது பொதுமக்களிடம் பெறப்பட கோரிக்கை மனுக்களை பெற்று அதற்குரிய அதிகாரிகளிடம் மக்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண்பது குறித்து அறிவுறுத்தினார்.

    மங்கலம்:

    சாமளாபுரம் வாழைத்தோட்டத்து அய்யன் கோவில் அய்யம்பாளையம் குபேர விநாயகர் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். பின்னர் மக்களுக்கான குறைகளை கேட்டறிந்து அவர்கள் அளித்த கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார். அதிகாரிகளிடம் மக்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண்பது குறித்து அறிவுறுத்தினார்.

    இதில் சாமளாபுரம் பேரூராட்சி தலைவர் விநாயகா பழனிச்சாமி மற்றும் சாமளாபுரம் பேரூராட்சியின் 5 -வது வார்டு உறுப்பினரும் தி.மு.க. நகரச் செயலாளருமான வேலுசாமி, வா- அய்யம்பாளையம் கிளைச் செயலாளர் சண்முகம், தி.மு.க. மூத்த நிர்வாகி பறையாகாடு மணி, கந்தசாமி, உதயக்குமார், ஆறுமுகம், திருப்பூர் மாவட்ட அறநிலையத்துறை தலைவர் கீர்த்தி சுப்பிரமணியம், காளிபாளையம் 9-வது வார்டு மகாலட்சுமி பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

    • டிராக்டர் மூலம் மணல் எடுக்க கோரி கலெக்டரிடம் மனு அளித்தனர்.
    • தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு டாரஸ் மற்றும் டிப்பர் லாரிகள் மூலம் மணல் எடுத்துச் செல்லப்படுகிறது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா பானாவயல் பகுதியில் கடந்த 1 மாதகாலமாக அரசு அனுமதியுடன் மணல் குவாரி செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து உள் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு டிப்பர், டாரஸ் லாரிகள் மூலம் மணல் கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில் உள் மாவட்டங்களுக்கு பயன்படும் வகையில் ட்ராக்டர் மூலம் மணல் அள்ள மாவட்ட கலெக்டர் அனுமதி வழங்க வேண்டும் என விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து கல்லணைக்கால்வாய் பாசனதாரர் விவசாயிகள் சங்கத் தலைவர் கொக்குமடை ரமேஷ், மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது, பானாவயல் கிராம பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மணல்குவாரியிலிருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு டாரஸ் மற்றும் டிப்பர் லாரிகள் மூலம் மணல் எடுத்துச் செல்லப்படுகிறது. இந்நிலையில் உள் மாவட்டத்தில் உள்ள குக்கிராமங்கள், குடியிருப்பு பகுதிகளில் டிப்பர் லாரிகள் செல்ல போதிய பாதை வசதி இல்லை. இதனால் மத்திய, மாநில அரசுகளால் வழங்கப்படுகின்ற வீடுகள் மற்றும் சின்னச் சின்ன கட்டுமானப் பணிகள் நடைபெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே உள் மாவட்டத்தில் லாரிகள் செல்ல முடியாத குக்கிராமங்களுக்குள் செல்ல ஏதுவாக உள்ள ட்ராக்டரில் மணல் எடுக்க மாவட்ட கலெக்டர் அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.


    ×