என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Patteeswaram"
கும்பகோணம்:
கும்பகோணம் அடுத்த பட்டீஸ்வரம் அருகே மாடாகுடி கிராமத்தை சேர்ந்தவர் மோகன். இவரது மனைவி சந்தியா (வயது 33). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் சந்தியா , சென்னையில் தங்கியிருந்து வீட்டு வேலை செய்து வந்தார். இதனால் குழந்தைகளை உறவினர் கோபால கிருஷ்ணன் என்பவர் கவனித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சந்தியா ஊருக்கு திரும்பினார்.
அப்போது குழந்தைகள் 2 பேரும், சந்தியாவிடம் சரியாக பேசாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் சந்தியா மிகுந்த மனவேதனையில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு திடீரென சந்தியா கயிற்றால் தூக்குப் போட்டார். இதை பார்த்த அவரது உறவினர்கள் மீட்டு கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சந்தியா பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் பற்றி பட்டீஸ்வரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
13-ம் தேதி காலை 9மணிக்கு கோயில் குளக் கரையில் திருஞான சம்பந்த மூர்த்திக்கு அன்னை ஞானம்பிகை திருமுலைப்பால் வழங்கும் விழாவும், இரவு பொற்றாளம் தந்து சுவாமி அம்பாள் வீதிஉலாவும் நடக்கிறது. 14ம் தேதி காலை 7மணிக்கு திருஞானசம்பந்த மூர்த்திக்கு ஈசன் முத்துக் கொண்டை முத்துக்குடை மற்றும் முத்து சின்னங்கள் வழங்கும் விழாவும், மாலை மின் அலங்காரத்துடன் கூடிய அழகிய முத்துதிரு ஓடத்தில் வீதிஉலாவும் நடைபெறும். தொடர்ந்து 15-ம் தேதி காலை திருஞானசம்பந்த மூர்த்தி திரு மடாலயத்திலிருந்து திருமேற்றளிகை கைலாசநாத சுவாமி திருக்கோயிலுக்கு அழகிய முத்து பந்தலில் எழுந்தருளி அதன் பின் திருசக்தி முற்றம் சக்திவனேஸ்வர சுவாமியை தரிசிப்பார்.
நிறைவில் தேனுபுரீஸ்வரர் வழங்கியருளிய அழகிய முத்துப் பந்தலில் திருஞான சம்பந்த மூர்த்தி காட்சியளித்து தேனுபுரீஸ்வரரை வழிபடும் நிகழ்வும், அன்று இரவு சுவாமி அம்பாள் முத்து விமானத்திலும் திருஞான சம்பந்தமூர்த்தி முத்துப் பந்தலிலும் உலாவுடன் நடைபெறஉள்ளது. ஏற்பாட்டினை கோயில் நிர்வாகம் செய்து வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்