search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "passengers awadhi"

    சென்னை விமான நிலையத்தில் ஒரே நேரத்தில் புக் செய்ததால் வாடகை கார் கிடைக்காமல் பயணிகள் அவதியுற்றனர். #ChennaiAirport
    ஆலந்தூர்:

    சென்னைக்கு டெல்லி, மும்பை, கோவா, அந்தமான் உள்ளிட்ட நகரங்களில் இருந்து காலையில் 10-க்கும் மேற்பட்ட விமானங்கள் வந்தன.

    அதில் வந்த பயணிகளில் சிலர் ‘ஓலா’ கால்டாக்சியை செயலி மூலம் புக் செய்தனர்.

    விமானத்தை விட்டு இறங்கி வருவதற்குள் புக் செய்து வருகைப்பதிவு 2-வது நுழைவு வாசலில் உள்ள அதன் கவுண்டர் அருகில் காத்து நின்றனர்.

    காருக்காக நீண்ட நேரமாக காத்திருந்தனர். ஆனால் ஒரு மணி நேரத்துக்கு மேலாக ‘ஓலா’ கார் வராததால் 120 பயணிகள் வீடு திரும்ப முடியாமல் தவித்தனர்.

    அவர்கள் அந்த நிறுவன கவுண்டரில் சென்று கேட்டனர். ஒரே நேரத்தில் அதிக பேர் புக் செய்ததால் கார் வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்றனர்.

    விமானப் பயணிகள் தங்களது பயணத்தை திட்டமிட்டு செய்வதால் காருக்காக புக் செய்து நீண்ட நேரமாக கார் வராததால் குறித்த நேரத்திற்குள் வீடு திரும்ப முடியாமல் அவதிப்பட்டனர்.

    பின்னர் ஒவ்வொரு காராக வரத்தொடங்கியதும் அவர்கள் பயணத்தை தொடர்ந்தனர். #ChennaiAirport
    ஆரணிக்கு மாநகர பஸ்கள் இயக்காததால் மாதாந்திர பயணச்சீட்டு பெற்ற பயணிகள் பல்வேறு அவதி அடைந்தனர்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம் ஆரணிக்கு ஆவடி பஸ் டொப்போ மூலம் 10 பஸ்கள் தடம் எண்-580 இயக்கப்பட்டு வந்தது.

    இந்த வழித்தட பஸ்சில் பயணம் செய்ய கடந்த புதன்கிழமை மாலை ஏறிய ஒரு பயணிக்கும் கண்டக்டர் ராஜ்குமாருக்கும் இடையே டிக்கெட் எடுப்பதில் வாக்கு வாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது.

    இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வு காண வேண்டும் என்று கூறி போக்குவரத்து துறை ஊழியர்கள் ஆரணி வழி தடத்தில் கடந்த இரண்டு நாட்களாக பஸ்களை இயக்க வில்லை.

    வள்ளளார் நகரில் இருந்து சிறுவாபுரி வழியாக பெரியபாளையம் வரையில் தண்டையார்பேட்டை பஸ் டொப்போ மூலம் 5 பஸ்கள் வழி தடம் எண்-547 இயக்கப்பட்டு வந்தது.

    இந்த பஸ்கடந்த சில நாட்களாக எப்.சி என்றும், கண்டக்டர், டிரைவர் பற்றாக்குறை என்றும் கூறி மூன்று பஸ்சை இயக்கவில்லை.இரண்டு பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகிறது.

    மேலும் அண்ணாநகர் பஸ் டொப்போ மூலம் கோயம்பேட்டில் இருந்து சிறுவாபுரி வழியாக ஆரணிக்கு மூன்று பஸ்கள் இயக்கி வந்தனர். ஆனால், ஏதோ காரணத்தால் ஒரு பஸ்சை கடந்த சில நாட்களாக குறைத்து விட்டனர். இந்த வழித்தடத்தில் தற்போது இரண்டு பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகிறது.

    நேற்று கிருத்திகை என்பதால் சிறுவாபுரிக்கு செல்லும் மாநகர பஸ் குறைக்கப்பட்டதால் பயணிகள் பல்வேறு அவதி அடைந்தனர்.

    மாதாந்திர பயணச்சீட்டு பெற்ற தனியார் மற்றும் அரசுதுறை ஊழியர்கள் வியாபாரிகள், பள்ளி மாணவர்கள் மாநகர பஸ்கள் இயக்காததால் குறித்த நேரத்தில் பணிக்கு செல்ல முடியாமல் அவதிக்கு உள்ளானார்கள்.

    எனவே சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு ஆரணி வழித்தடத்தில் இயங்கிய அணைத்து பஸ்களையும் உரிய நேரத்தில் இயக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    சம்பள பாக்கியை வழங்ககோரி புதுவை அரசு பஸ் ஊழியர்கள் இன்று 2-வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். பஸ்கள் ஓடாததால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். #BusStrike
    புதுச்சேரி:

    புதுவை அரசின் சாலை போக்குவரத்து கழகத்தின் சார்பில் உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்கு 137 பஸ்கள் இயக்கப்படுகிறது.

    பெங்களூர், சென்னை, திருப்பதி, நாகர்கோவில், மாகி, கடலூர், விழுப்பும் உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படுகிறது. அதோடு புதுவையின் நகர பகுதியிலும், சுற்றுப்புற கிராமங்களுக்கும் பஸ் மற்றும் மினி பஸ்களும் இயக்கப்படுகிறது.

    சாலை போக்குவரத்து கழகத்தில் நிரந்தர ஊழியர்கள் 450 பேரும், ஒப்பந்த ஊழியர்கள் 250 பேரும் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 2 மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை.

    சம்பளம் வழங்க கோரி போக்குவரத்து ஊழியர்கள் துறை அதிகாரிகளிடம் பல முறை கோரிக்கை விடுத்தனர். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இதனையடுத்து அனைத்து தொழிற்சங்கத்தினரும், நேற்று மாலை துறை அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த திட்டமிட்டிருந்தனர். இதற்காக ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் தலைமை அலுவலகத்திற்கு வந்தனர்.

    ஆனால், நீண்ட நேரம் காத்திருந்தும் அதிகாரிகள் யாரும் வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அனைத்து தொழிற்சங்கத்தினர் திடீர் வேலை நிறுத்த அறிவிப்பு செய்தனர்.

    இதனையடுத்து மாலை 6 மணிக்கு மேல் அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. நகரம், கிராம பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் மட்டுமல்லாது வெளியூர் செல்லும் பஸ்களும் இயக்கப்படவில்லை. இதனால், பெங்களூர், சென்னை, திருப்பதி, நாகர்கோவில், மாகி உள்ளிட்ட பகுதிகளுக்கு முன்பதிவு செய்த பயணிகளும் அவதியடைந்தனர்.

    பேச்சுவார்த்தை நடத்தி சம்பளம் பாக்கி தொடர்பாக உறுதி அளிக்கும் வரை வேலைநிறுத்த போராட்டத்தை தொடர்வதாகவும் தொழிற் சங்கத்தினர் அறிவித்தனர். இதனால், இன்று (புதன் கிழமை) 2-வது நாளாக வேலை நிறுத்த போராட்டம் தொடர்கிறது.

    அரசு பஸ் ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.  #BusStrike
    மெட்ரோ ரெயில் பாதையில் ஒரே வாரத்தில் 3 தடவை சிக்னல் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் 30 நிமிடங்கள் வரை பயணிகள் சேவை முடங்கியது. #MetroTrain
    சென்னை:

    சென்னை மாநகர போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காகவும் விரைவு பயணத்துக்காகவும் மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டது.

    கோயம்பேடு- ஆலந்தூர், சின்னமலை- விமான நிலையம் வரை உயர் மட்டப் பாதையிலும், திருமங்கலம்- சென்ட்ரல், சைதாப்பேட்டை- டி.எம்.எஸ். வரை சுரங்கப்பாதையிலும் மெட்ரோ ரெயில் சேவை நடந்து வருகிறது. மேலும் சென்னை மாநகரம் முழுவதும் மெட்ரோ ரெயில் சேவையை விரிவுப்படுத்தும் பணிகளும் நடந்து வருகிறது.

    தற்போது மெட்ரோ ரெயில் பாதையில் ஒரே வாரத்தில் 3 தடவை ‘சிக்னல்’ கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் 30 நிமிடங்கள் வரை பயணிகள் சேவை முடங்கியது.

    கடந்த 8-ந்தேதி 30 நிமிடங்களும், 11-ந்தேதி 25 நிமிடங்களும் நேற்று 12-ந்தேதி 30 நிமிடங்களும் சிக்னல் கோளாறால் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டது. இதனால் மெட்ரோ ரெயில்கள் ஆங்காங்கே நடுவழியில் நின்றன. மெட்ரோ பயணிகள் பெரும் அவதிப்பட்டனர்.

    இதுகுறித்து மெட்ரோ பயணி ஒருவர் கூறியதாவது:-

    சென்னை மாநகரத்தில் விரைவு பயணத்துக்காக மெட்ரோ ரெயில் போக்குவரத்து சேவையில் அடிக்கடி சிக்னல் கோளாறு ஏற்பட்டு வருவதால் பயணிகள் அவதிப்பட்டு வருகிறார்கள். ஒரே வாரத்தில் 3 முறை சிக்னல் கோளாறு என்பது ஏற்புடையது அல்ல.

    மெட்ரோ ரெயில்கள் ஆங்காங்கே நடு வழியில் சிக்னல் கோளாறு ஏற்பட்டு நிறுத்தப்படுவதால் பயணிகள் உரிய நேரத்தில் செல்ல முடியவில்லை. இதனால் மெட்ரோ ரெயில் மீது நம்பகத்தன்மை குறையும். பயணிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் மெட்ரோ ரெயில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #MetroTrain
    ×