என் மலர்
நீங்கள் தேடியது "Parents Day"
- கே.ஜி., குழந்தைகள் தங்களது பெற்றோர்களுடன் கலந்து கொண்டனர்.
- பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் நடனமாடியும், பாடியும், மிமிக்ரி செய்தும் பலவிதமான திறமைகளை காட்டி குடும்பமாக கலந்து கொண்டு மகிழ்ச்சியடைந்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் காந்திநகர் ஏ.வி.பி., டிரஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பெற்றோர்கள் தின விழா கொண்டாடப்பட்டது. கே.ஜி., குழந்தைகள் தங்களது பெற்றோர்களுடன் கலந்து கொண்டனர். பெற்றோர்கள், குழந்தைகள், முக்கிய பிரமுகர்கள் விளக்கேற்ற ஒருங்கிணைப்பாளர் வித்யா ரிஸ்வான் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் நடனமாடியும், பாடியும், மிமிக்ரி செய்தும் பலவிதமான திறமைகளை காட்டி குடும்பமாக கலந்து கொண்டு மகிழ்ச்சியடைந்தனர்.
லக்கி லிப் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பெற்றோர்களுக்கு பள்ளி தாளாளர் கார்த்திக்கேயன், பொருளாளர் லதா கார்த்திக்கேயன் ஆகியோர் பரிசுகள் வழங்க கவுரவித்தனர்.
முதல்வர் டயானா, ஒருங்கிணைப்பாளர் வித்யா ரிஸ்வான் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.
- தூத்துக்குடி மாநகராட்சி கமிஷனர் சாருஸ்ரீ, அவரது கணவர் அபிஷேக் டோபார் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினர்.
- மாணவிகள் இரு குழுக்களாகப் பிரிந்து இந்திய பண்பாட்டை நாட்டியத்தின் மூலம் வெளிப்படுத்தினர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி ஸ்பிக்நகர் மேல்நிலைப் பள்ளியின் 49-வது பெற்றோர் தின விழா ராசகோபாலன் கலை யரங்கத்தில் நடைபெற்றது.
மாநகராட்சி கமிஷனர்
சிறப்பு விருந்தினர்களாக தூத்துக்குடி மாநகராட்சி கமிஷனர் சாருஸ்ரீ, அவரது கணவர் அபிஷேக் டோபார் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினர்.
விழாவில் ஸ்பிக் பள்ளித் தலைவார் ராமகிருஷ்ணன், ஸ்பிக் நகரியத்தின் முதல் பெண் அகிலா ராமகிருஷ்ணன், தலைமை நிர்வாக இயக்குனர் பாலு, பள்ளிச் செயலாளர் பிரேம்சுந்தர், தலைமை ஆசிரியர் ராதாகிருஷ்ணன் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
பண்பாடு
முன்னதாக மாணவி சக்திதேவி வரவேற்றார். பின்னர் "பரதத்திற்குப்பதில் சொல்லும் கதக்" என்னும் தலைமையில் மாணவிகள் இரு குழுக்களாகப் பிரிந்து இந்திய பண்பாட்டை நாட்டியத்தின் மூலம் வெளிப்படுத்தினர்.
தொடர்ந்து வட இந்திய கிராமிய நடனங்களை மாணவிகள் அவற்றின் நயம் மாறாமல் வெளிப்படுத்தினர். மாணவி நித்யஅஸ்வினி நன்றி கூறினார்.






