search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pakistani drone"

    • சுட்டு வீழ்த்தப்பட்ட டிரோனை இன்று காலையில் எல்லை பகுதியில் இருந்து படை வீரர்கள் கைப்பற்றினர்.
    • டிரோன் சட்டத்திற்கு மாறாக எல்லை பகுதியில் பறந்ததால் சுடப்பட்டதாக எல்லை பாதுகாப்பு படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அமிர்தசரஸ்:

    பஞ்சாப் மாநிலத்தில் உள்ள சர்வதேச எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் டிரோன் இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டது. ஆள் இல்லாத அந்த 'டிரோன்' பஞ்சாப் தலைநகர் அமிர்தசரஸ் பகுதியில் உள்ள காக்கர் என்ற இடத்தில் இன்று அதிகாலை இறங்கிய போது எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டனர்.

    சுட்டு வீழ்த்தப்பட்ட டிரோனை இன்று காலையில் எல்லை பகுதியில் இருந்து படை வீரர்கள் கைப்பற்றினர். அந்த டிரோன் சட்டத்திற்கு மாறாக எல்லை பகுதியில் பறந்ததால் சுடப்பட்டதாக எல்லை பாதுகாப்பு படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு படை வீரர்கள் அதனை பறிமுதல் செய்து எதற்காக அவை அனுப்பப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ராஜஸ்தான் மாநிலத்தின் கங்காநகர் பகுதியில் பறந்துகொண்டிருந்த பாகிஸ்தான் நாட்டு ஆளில்லா உளவு விமானத்தை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது. #PakDrone
    ஜெய்ப்பூர்:

    புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய விமானப்படை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாமை தாக்கி அழித்தது. எல்லை தாண்டி வந்து இந்தியா தாக்குதல் நடத்தியதற்கு பதிலடி கொடுப்போம் என பாகிஸ்தான் கூறியதால் இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.

    இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் கங்காநகர் செக்டார் அருகே ஹிந்துமால்கோட்டில் பாகிஸ்தானின் உளவு விமானம் இன்று அதிகாலை 5 மணிக்கு நுழைந்தது. இதைக் கண்ட இந்திய பாதுகாப்பு படையினர் சரமாரி தாக்குதல் நடத்தினர். 

    இதையடுத்து அந்த உளவு விமானம் பாகிஸ்தானை நோக்கி திரும்பிச் சென்று விட்டது. மீண்டும் இந்திய எல்லைக்குள்  வந்த பாகிஸ்தானின் உளவு விமானத்தை இந்திய ராணுவத்தினர் சுட்டு வீழ்த்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

    கடந்த மாதம் 26ம் தேதி நடைபெற்ற விமானப்படை தாக்குதலுக்கு பிறகு சுட்டு வீழ்த்தப்பட்ட 3-வது உளவு விமானம் இது என்பது குறிப்பிடத்தக்கது. #PakDrone
    ×