search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pakistan Tour of England"

    பாகிஸ்தானுக்கு எதிராக 93 பந்தில் 128 ரன்கள் குவித்து இங்கிலாந்துக்கு வெற்றியைத் தேடிக்கொடுக்க ஐபிஎல் மிகப்பெரிய உதவியாக இருந்தது என பேர்ஸ்டோவ் தெரிவித்துள்ளார்.
    இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் பேர்ஸ்டோவ். இவர் முதன்முறையாக இந்த சீசனில் ஐபிஎல் தொடரில் பங்கேற்று விளையாடினார். 10 போட்டிகளில் 445 ரன்கள் குவித்து அசத்தினார். சராசரி 55.62 ஆகும். ஆர்சிபி-க்கு எதிராக சதம் விளாசினார்.

    தற்போது இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று நடைபெற்ற 3-வது ஒருநாள் போட்டியில் 359 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களம் இறங்கியது.

    பேர்ஸ்டோவ் 93 பந்தில் 128 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். இந்நிலையில் ஐபிஎல் தொடரில் விளையாடியது மிகப்பெரிய உதவியாக இருந்தது என்று தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து பேர்ஸ்டோவ் கூறுகையில் ‘‘ஐபிஎல் தொடரில் விளையாடுவதன் மூலம் மாறுபட்ட பயிற்சியாளர்கள், மாறுபட்ட வீரர்களிடம் இருந்து பல்வேறு மாறுபட்ட விஷயங்களை கற்றுக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். அதில் சிறிய அளவில் போட்டியின் திட்டங்களும் இருக்கும்.

    டேவிட் வார்னர் முற்றிலும் மாறுபட்ட பகுதிகளில் பந்தை விரட்டக்கூடியவர். இது வேறெங்கும் இல்லாத முறை. இதில் இருந்து வார்னர் போன்ற வீரர்கள் இருக்கும்போது, நெருக்கடியான நிலையில் எப்படி சிறப்பாக விளையாட முடியும் என்பதை கற்றுக் கொள்ளலாம்’’ என்றார்.
    பாகிஸ்தானுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி மெதுவாக பந்து வீசியதால், அந்த அணி கேப்டன் மோர்கனுக்கு ஐசிசி தடைவிதித்துள்ளது.
    இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகளில் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. 3-வது ஒருநாள் போட்டி பிரிஸ்டோலில் நேற்று நடைபெற்றது. முதலில் பாகிஸ்தான் பேட்டிங் செய்தது. அந்த அணி 358 ரன்கள் குவித்தது.

    பாகிஸ்தான் பேட்டிங் செய்யும்போது இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்கவில்லை. குறிப்பிட்ட நேரத்திற்குள் இரண்டு ஓவர்கள் குறைவாக வீசியிருந்தனர். இதனை போட்டி நடுவர் சுட்டிக்காட்டி கேப்டன் மோர்கனுக்கு ஒரு போட்டியில் விளையாட தடைவிதித்தார். அத்துடன் 40 சதவீதம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சக வீரர்களுக்கு தலா 10 சதவீதம் அபாரதம் விதிக்கப்பட்டுள்ளது.



    மோர்கன் தலைமையில் கடந்த பிப்ரவரி மாதம் 22-ந்தேதி வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் இதேபோன்று குறிப்பிட்ட நேரத்திற்குள் சில ஓவர்கள் குறைவாக வீசியிருந்தனர்.

    ஒரு வருடத்திற்குள் இரண்டு முறை இப்படி நடந்தால் ஒரு போட்டியில் விளையாட தடைவிதிக்கப்படும். அதனடிப்படையில் மோர்கனுக்கு ஒரு போட்டியில் விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் நாளைமறுநாள் நாட்டிங்காமில் நடைபெறும் 4-வது போட்டியில் மோர்கன் விளையாடமாட்டார்.
    பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது போட்டியில் ப்ளங்கெட் பந்தை சேதப்படுத்திய செயலில் ஈடுபடவில்லை என்று ஐசிசி உறுதிப்படுத்தியுள்ளது.
    இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் சவுத்தாம்ப்டனில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 373 ரன்கள் குவித்தது. பின்னர் 374 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களம் இறங்கியது. தொடக்க வீரர் பகர் ஜமான் சதம் விளாசியதால் பாகிஸ்தான் அணி வெற்றியை நோக்கி சென்று கொண்டிருந்தது. இறுதியில் 361 ரன்கள் குவித்து 12 ரன்னில் தோல்வியைத் தழுவியது.

    இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ப்ளங்கெட் பந்தை விரல் நகத்தால் சுரண்டியது போன்ற வீடியோ வெளியானதால் சர்ச்சை கிளம்பியது. இந்நிலையில் போட்டிக்கான அதிகாரிகள் வீடியோவை ஆய்வு செய்தனர். அப்போது ப்ளங்கெட் தவறு செய்யவில்லை என்பது தெரியவந்துள்ளது.

    இதுகுறித்து ஐசிசி தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘ப்ளங்கெட் பந்தை சேதப்படுத்தும் விதமான எந்தவொரு செயலிலும் ஈடுபடவில்லை. பந்தை சேதப்படுத்தினாரா? என்பதை ஓவர்-பை-ஓவராக போட்டிக்கான அதிகாரிகள் பரிசோதனை செய்தனர். பின்னர் அவ்வாறு செய்யவில்லை என்பது உறுதி செய்தனர்’’ என்று பதிவிட்டுள்ளது.

    இதனால் ப்ளங்கெட் உலகக்கோப்பைக்கான இங்கிலாந்து அணியில் விளையாடுவதில் எந்த பிரச்சனையும் இல்லை.
    பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் பந்தை சேதப்படுத்தினாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
    இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 373 ரன்கள் குவித்தது. பின்னர் 374 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களம் இறங்கியது.

    தொடக்க வீரர் பகர் ஜமான் சதம் விளாசியதால் பாகிஸ்தான் அணி வெற்றியை நோக்கி சென்று கொண்டிருந்தது. இறுதியில் 361 ரன்கள் குவித்து 12 ரன்னில் தோல்வியைத் தழுவியது.

    இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் பந்தை விரல் நகத்தால் சுரண்டியது தற்போது வீடியோவில் தெரியவந்துள்ளது. பந்து ரிவர்ஸ் ஸ்விங் ஆகவில்லை என்றால், சில வீரர்கள் பந்தை சேதப்படுத்துவார்கள். அப்படி என்றால் பந்து ஒரு பக்கம் தேய்ந்து ரிவர்ஸ் ஸ்விங் ஆகும். இதனால் ப்ளங்கெட் ரிவர்ஸ் ஸ்விங் செய்வதற்காக இப்படி செய்திருப்பாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது. அவர் பந்தை சுரண்டிய பின் பந்து வீசும்போது, ஒருபக்கம் பந்து மிகவும் சேதமாகியிருந்தது தெளிவாக வீடியோவில் பதிவாகியுள்ளது.

    ஒருவேளை அந்த வீடியோவை பார்த்து விசாரணை மேற்கொண்டால் ப்ளங்கெட் சிக்குவதற்கு வாய்ப்புள்ளது. கடந்த ஆண்டு தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கேப் டவுன் டெஸ்டின்போது பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்மித், வார்னர், பான்கிராப்ட் ஆகியோர் சிக்கி தடைபெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    பாகிஸ்தானுக்கு எதிராக 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர் 50 பந்தில் சதம் விளாச, இங்கிலாந்து 373 ரன்கள் குவித்தது.
    இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதிய 2-வது ஒருநாள் போட்டி கிரிக்கெட் போட்டி பகல்-இரவு ஆட்டமாக நேற்று சவுத்தாம்ப்டனில் நடந்தது. முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 373 ரன் குவித்தது.

    பட்லர் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். அவர் 50 பந்தில் 4 பவுண்டரி, 9 சிக்சருடன் 100 ரன்னை தொட்டார். பட்லர் 55 பந்தில் 110 ரன்னும் (6 பவுண்டரி, 9 சிக்சர்), ஜேசன் ராய் 87 ரன்னும், கேப்டன் மோர்கன் 48 பந்தில் 71 ரன்னும் (6 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர்.

    பின்னர் விளையாடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 361 ரன் குவித்தது. இதனால் இங்கிலாந்து அணி 12 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.



    பகர் ஜமான் சதம் அடித்தும் பலன் இல்லாமல் போனது. அவர் 106 பந்தில் 138 ரன்னும் (12 பவுண்டரி, 4 சிக்சர்), ஆஷிப் அலி, பாபர் ஆசம் தலா 51 ரன்னும் எடுத்தனர்.

    ப்ளங்கெட், டேவிட் வில்லே தலா 2 விக்கெட்டும், கிறிஸ் வோக்ஸ், மொயீன் அலி, அடில் ரஷீத் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

    இந்த வெற்றி மூலம் 5 போட்டி கொண்ட தொடரில் இங்கிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. முதல் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது.
    ×