என் மலர்
நீங்கள் தேடியது "Painting work"
- நீர் வண்ண ஒவிய கண்காட்சி புதுச்சேரி செயின்ட் தெரேசா வீதியில் உள்ள வண்ண அருவி கூடத்தில் வருகிற 10-ந் தேதி வரை நடக்கிறது.
- கண்காட்சியை நடிகர் சிவக்குமார் திறந்து வைத்து ஓவியங்களை பார்வையிட்டார்.
ஓவியர் ஏழுமலையின் மண்ணின் மனம் என்ற தலைப்பிலான நீர் வண்ண ஒவிய கண்காட்சி புதுச்சேரி செயின்ட் தெரேசா வீதியில் உள்ள வண்ண அருவி கூடத்தில் வருகிற 10-ந் தேதி வரை நடக்கிறது.
கண்காட்சியை நடிகர் சிவக்குமார் திறந்து வைத்து ஓவியங்களை பார்வையிட்டார். அப்போது தான் வரைந்த ஓவியங்களை ஓவியர்கள், பார்வையாளர்களிடம் காண்பித்து அந்த ஓவியம் வரையப்பட்ட சூழலை விளக்கி கூறியதாவது:-
1962-ல் காஞ்சிபுரத்தில் ஏகாம்பரேஸ்வரர் கோவில் படம் வரைந்த போது வெளியேறுமாரு மறைமுகமாக கூறினார்கள். அதனால் வரதராஜ பெருமாள் கோவிலில் சென்று படங்கள் வரைந்து வந்து அதை காட்டினேன். உடனே ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் ஓவியம் வரைய அனுமதித்தனர்.
1962-ல் மதுரையில் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை ஒரே சிட்டிங்கில் மதுரை காமாட்சி கோவிலை வரைந்தேன். யாராலும் இதை 20 வயதில் வரைய முடியாது.
1986-ல் சிந்து பைரவி படம் ஓடி 200 நாள் வெற்றி விழா மதுரையில் நடந்தது.அப்போது என்னை பார்க்க ஒருவர் வந்தார். அவர் 1962-ல் திண்டுக்கல்லில் என்னுடன் சாப்பிட்டதை குறிப்பிட்டார். அவர் பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையா. கன்னியாகுமரியில் ரூ.2-க்கு வாடகைக்கு அறை எடுத்து தங்கி பிரம்மாண்டமாக வந்த அலைகளை பார்த்து 400 அலைகளை மனதில் வைத்து வெள்ளை பெயிண்டை பயன்படுத்தாமல் ஓவியம் வரைந்தேன்.இதுவரை 192 படங்களில் நடித்துள்ளேன். இந்தியா முழுவதும் நான் சுற்றி வரைந்த ஓவியங்களுக்கான செலவு ரூ.7,500 தான். இன்னொரு பிறவி எடுத்தால் ஓவியமாக பிறக்க வேண்டும். ஆனால் இந்தியாவில் அல்ல. இவ்வாறு சிவக்குமார் பேசினார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- அழகாய் மாறுது வேலூர்
- கலெக்டர் குமாரவேல் பாண்டியன் நேரில் ஆய்வு செய்தார்
வேலூர்:
வேலூர் கிரீன் சர்க்கிளில் மேம்பால சுவர்களில் இருபுறமும் போஸ்டர்கள் ஒட்டி அசிங்கப்படுத்துகின்றனர்.
இதனால் மேம்பாலச் சுவர்கள் அலங்கோலமாக காட்சி அளிக்கிறது. மாநகரின் மையப்பகுதியில் உள்ள இந்த மேம்பாலச் சுவர்களை அழகுப்படுத்த முடிவு செய்யப்பட்டது.
கிரீன் சர்க்கிளில் இருபுறமும் உள்ள மேம்பால சுவர்களில் பல வகையான ஓவியங்களை வரையும் பணி இன்று தொடங்கியது.
இதற்காக மேம்பால சுவர்களில் இருபுறமும் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களை அகற்றி அதில் வெள்ளை நிற வண்ணம் தீட்டு பணி இன்று நடந்தது.
இதனை கலெக்டர் குமாரவேல் பாண்டியன், கார்த்திகேயன் எம் எல் ஏ, மேயர் சுஜாதா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் மாநகர நல அலுவலர் முருகன் மற்றும் கவுன்சிலர்கள் உடனிருந்தனர். இதை தொடர்ந்து கலெக்டர் கூறியதாவது;
வேலூர் மாநகராட்சி சார்பில் கிரீன் சர்க்கிளில் மேம்பாலத்தின் சுவர்களில் இருபுறமும் வண்ண ஓவியங்கள் தீட்டப்படுகிறது. தமிழகம் நம்முடைய மாவட்டம் மற்றும் மாநகராட்சியில் உள்ள கோட்டை உள்ளிட்ட சிறப்பு அம்சங்கள் குறித்து விளக்க வரைபடம் அமைய உள்ளது.
மேலும் கல்வித்துறை சார்பில் மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்க நெறிமுறைகள் அரசு நில திட்டங்கள் போன்றவை பட விளக்கங்களாக இந்த மேம்பாலங்களில் வரையப்படுகிறது.
நெரிசலை குறைக்க கிரீன் சர்க்கிள் இன்னும் சில மாதங்களில் செவ்வக வடிவில் மாற்றி அமைக்கப்பட உள்ளது. இதன்மூலம் கிரீன் சர்க்கிள் பகுதியில் முழுவதுமாக போக்குவரத்து நெரிசல் குறையும்.
வேலூர் மாநகராட்சி பகுதியில் உள்ள அரசு மற்றும் மேம்பால சுவர்களில் வண்ண ஓவியங்கள் மூலம் அழகு படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரி டெல்டா மாவட்டங்களின் தண்ணீர் தேவையை பகிர்ந்தளிக்கும் அணையாக கல்லணை உள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு மேட்டூர் அணை வழக்கத்துக்கு மாறாக ஜூன் 6-ந் தேதி திறக்கப்பட்டது. 2012-ம் ஆண்டு செப்டம்பர் 17-ந் தேதியும், 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் 2-ந் தேதியும், 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் 10-ந் தேதியும், 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் 9-ந் தேதியும், 2016-ம் ஆண்டு செப்டம்பர் 20-ந் தேதியும் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. கடந்த ஆண்டு மிக தாமதமாக அக்டோபர் 2-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. கல்லணையில் இருந்து கடந்த ஆண்டு அக்டோபர் 5-ந் தேதி தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்ட பாசன தேவைக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

தற்போது கர்நாடக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்துவருவதால் கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹேமாவதி, ஹேரங்கி ஆகிய அணைகள் நிரம்பியுள்ளன. இதனால் இந்த அணைகளுக்கு வரும் உபரி நீர் அப்படியே தமிழகத்துக்கு திறந்துவிடப்பட்டு வருகிறது. மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்ந்துள்ள நிலையில் நாளை(வியாழக்கிழமை) டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும் என முதல்- அமைச்சர் அறிவித்துள்ளார். முதல்- அமைச்சரின் இந்த அறிவிப்பை தொடர்ந்து தஞ்சை மாவட்டம் கல்லணையில் பொதுப்பணித்துறையினர் தீவிரமாக பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கல்லணையில் காவிரி, கொள்ளிடம், வெண்ணாறு, கல்லணை கால்வாய் ஆகிய ஆறுகளின் மதகுகளில் பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மதகுகளை ஏற்றி இறக்கும் எந்திரங்களை துடைத்து மசகு எண்ணெய் வைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. மதகுகள் அனைத்துக்கும் வர்ணம் பூசப்பட்டு வருகிறது. கல்லணையில் உள்ள கரிகாலன், அகத்தியர், காவிரி அன்னை, ராஜராஜன் சிலைகளுக்கும் வர்ணம் பூசப்பட்டுள்ளது. கொள்ளிடத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலும் மேட்டுர் அணை தண்ணீரை எதிர் நோக்கி புதுப்பொலிவு பெற்றுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து நாளை(வியாழக்கிழமை) திறக்கப்படும் தண்ணீர் 22-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை கல்லணைக்கு வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.






