search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kallanai dam"

    தஞ்சை மாவட்டம் கல்லணையில் இருந்து இன்று காலை கூடுதலாக தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால் கோரிகுளம் பகுதியில் வெள்ள நீர் சூழ்ந்தது.
    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் கல்லணையில் இருந்து இன்று காலை கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. 28057 கன அடி திறக்கப்படுவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் தஞ்சையில் உள்ள 20 கண் கல்லணை கால்வாயில் இருந்து செல்லும் தண்ணீர் 5 குளங்களுக்கு செல்லும். தஞ்சை கோரிகுளம், தைக்கால் குளம், மோத்திரப்ப சாவடி குளம், ருக்மணி குளம், நாகை சாலை குளம் ஆகிய 5 குளங்களுக்கு செல்கிறது.

    தற்போது கோரிகுளம் பகுதியில் ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டுள்ளது. இதனால் இன்று காலை காவிரி தண்ணீர் இங்குள்ள 6 வீடுகளை சூழ்ந்தது. இன்று மதியம் வரை 6 வீடுகளையும் தண்ணீர் சுற்றி சூழ்ந்ததால் அங்கு வசித்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் அதிகாரிகள் விரைந்து வந்து பார்வையிட்டனர். அங்கு வசித்த வந்த மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தினர்.

    இன்று இரவுக்குள் இந்த வீடுகளை வெள்ள நீர் முழுவதுமாக சூழ்ந்து விடும் என தெரிகிறது.

    தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஏரி, குளங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. இதனால் குளங்கள்- ஏரிகளுக்கு செல்ல முடியாமல் தண்ணீர் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்து வருகிறது. #tamilnews
    காவிரி டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து 22-ந்தேதி தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.
    தஞ்சாவூர்:

    காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. மேட்டூரில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் வருகிற 22-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை கல்லணைக்கு வந்து சேருகிறது.

    பின்னர் காவிரி டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து 22-ந் தேதி காலை 11 மணியளவில் தண்ணீர் திறக்கப்படுகிறது.

    இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைக்கண்ணு, காமராஜ், ஓ.எஸ்.மணியன், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, விஜயபாஸ்கர், எம்.பி.க்கள் வைத்திலிங்கம், பரசுராமன், பாரதிமோகன், குமார், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் செந்தில்குமார், கண்காணிப்பு பொறியாளர் ரவிச்சந்திரன், தஞ்சை, திருவாரூர், நாகை, திருச்சி, அரியலூர் மாவட்ட கலெக்டர்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

    கல்லணையில் தண்ணீர் திறப்பு நிகழ்வின் போது முதலில் கொள்ளிடத்தின் கீழ்பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெறும்.

    பின்னர் கல்லணை கரிகாலன் சோழன் சிலை அருகில் உள்ள ஆதிவிநாயகர் கோவிலில் வழிபாடு நடைபெறும். அதன் பின்னர் முக்கிய பிரமுகர்கள் காவிரி டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து காவிரியில் தண்ணீரை திறந்து விடுவார்கள்.

    இதைதொடர்ந்து வெண்ணாறு, கல்லணை கால்வாய்களில் தண்ணீர் திறக்கப்படும். நிறைவாக கருப்பண்ணசாமி கோவிலில் வழிபாடு நடைபெற்ற பின்னர் கொள்ளிடத்தில் தண்ணீர் திறக்கப்படும்.

    கல்லணையில் இருந்து தண்ணீர் திறப்பதற்கான ஏற்பாடுகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.


    மேட்டூர் அணை தண்ணீரை எதிர்பார்த்து கல்லணையில் மதகுகளுக்கு வர்ணம் பூசப்பட்டு புதுப்பொலிவு பெற்று வருகிறது.
    திருக்காட்டுப்பள்ளி:

    தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரி டெல்டா மாவட்டங்களின் தண்ணீர் தேவையை பகிர்ந்தளிக்கும் அணையாக கல்லணை உள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு மேட்டூர் அணை வழக்கத்துக்கு மாறாக ஜூன் 6-ந் தேதி திறக்கப்பட்டது. 2012-ம் ஆண்டு செப்டம்பர் 17-ந் தேதியும், 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் 2-ந் தேதியும், 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் 10-ந் தேதியும், 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் 9-ந் தேதியும், 2016-ம் ஆண்டு செப்டம்பர் 20-ந் தேதியும் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. கடந்த ஆண்டு மிக தாமதமாக அக்டோபர் 2-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. கல்லணையில் இருந்து கடந்த ஆண்டு அக்டோபர் 5-ந் தேதி தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்ட பாசன தேவைக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.



    தற்போது கர்நாடக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்துவருவதால் கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹேமாவதி, ஹேரங்கி ஆகிய அணைகள் நிரம்பியுள்ளன. இதனால் இந்த அணைகளுக்கு வரும் உபரி நீர் அப்படியே தமிழகத்துக்கு திறந்துவிடப்பட்டு வருகிறது. மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்ந்துள்ள நிலையில் நாளை(வியாழக்கிழமை) டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும் என முதல்- அமைச்சர் அறிவித்துள்ளார். முதல்- அமைச்சரின் இந்த அறிவிப்பை தொடர்ந்து தஞ்சை மாவட்டம் கல்லணையில் பொதுப்பணித்துறையினர் தீவிரமாக பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    கல்லணையில் காவிரி, கொள்ளிடம், வெண்ணாறு, கல்லணை கால்வாய் ஆகிய ஆறுகளின் மதகுகளில் பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மதகுகளை ஏற்றி இறக்கும் எந்திரங்களை துடைத்து மசகு எண்ணெய் வைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. மதகுகள் அனைத்துக்கும் வர்ணம் பூசப்பட்டு வருகிறது. கல்லணையில் உள்ள கரிகாலன், அகத்தியர், காவிரி அன்னை, ராஜராஜன் சிலைகளுக்கும் வர்ணம் பூசப்பட்டுள்ளது. கொள்ளிடத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலும் மேட்டுர் அணை தண்ணீரை எதிர் நோக்கி புதுப்பொலிவு பெற்றுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து நாளை(வியாழக்கிழமை) திறக்கப்படும் தண்ணீர் 22-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை கல்லணைக்கு வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
    ×