search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Painting Competation"

    • 75 நிகழ்வுகள் 75 இடங்களில் நடத்தப்பட்டு வருகிறது.
    • தன்னம்பிக்கை என்பது பள்ளி மாணவர்களுக்கு மிகவும் அவசியம்.

    மடத்துக்குளம் :

    75 வது சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழாவாக உடுமலையில் கொண்டாட பல்வேறு தன்னார்வ அமைப்புகள் இணைந்து 75 நிகழ்வுகள் 75 இடங்களில் நடத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் உடுமலை கலிலியோ அறிவியல் கழகம் மற்றும் உடுமலை சுற்றுச்சூழல் சங்கத்தின் சார்பாக உடுமலை ஆர்.ஜி.எம். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஸ்ரீ விசாலாட்சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ,பெத்தேல் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி, என்.வி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் கணக்கும் இனிக்கும் என்ற தலைப்பில் கணிதம் பற்றிய அறிவையும், கணித பாடம் மிகவும் எளிது என்பதை எடுத்துரைக்கும் விதமாகவும் மாயசதுரங்களை எவ்வாறு அமைப்பது என்பது பற்றியும், தங்களது பிறந்த தேதியை கூட எவ்வாறு மாய சதுரமாக மாற்றுவது என்பது பற்றியும் ஓய்வு பெற்ற ரயில்வே நிலைய மேலாளர் ஜோதிலிங்கம் மிகச் சிறப்பாக மாணவர்களுக்கு எடுத்துக்காட்டினார்.

    மேலும் அறிவியல் என்றாலே, ஏன் எதற்கு எப்படி என்ற கேள்விகளை கேட்பது அத்தகைய அறிவியல் விழிப்புணர்வு நிகழ்வினை அறிவியல் தன்னார்வலர் பிரபாகரன் செய்து காண்பித்தார். அதனைத் தொடர்ந்து ஓய்வு பெற்ற மதுரை ரயில்வே நிலையம் பாலசுப்பிரமணியன் தன்னம்பிக்கை என்பது பள்ளி மாணவர்களுக்கு மிகவும் அவசியம். எதிர்காலத்தில் பல்வேறு சாதனைகளை நீங்கள் நிகழ்த்த வேண்டும் என்று தன்னம்பிக்கை கருத்தை வலியுறுத்தி 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். பள்ளி மாணவர்களுக்கு ஓவியப்போட்டி, கட்டுரை போட்டி மற்றும் ஸ்லோகன் எழுதும் போட்டி ஆகியவை உடுமலை தேஜஸ் மஹாலில் நடைபெற்றது. உடுமலை மற்றும் மடத்துக்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து சுமார் 800க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். கனவு இந்தியா 2047 என்பதை கருத்தாக கொண்டு நடத்தப்பட்ட இப் போட்டிகளில் ஐந்தாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கின்ற மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

    இந்நிகழ்ச்சியில் உடுமலை சுற்றுச்சூழல் சங்கத் தலைவர் மணி, செயற்குழு உறுப்பினர் சசிகுமார், மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர் பெருமக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியினை கலிலியோ அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான் ஒருங்கிணைத்தார். நாளை முதல் 14 ந் தேதி வரை உடுமலை தளி ரோட்டில் உள்ள தேஜஸ் மஹாலில் அறிவியல் விஞ்ஞானிகள், தபால் தலை, ஆயுத கண்காட்சிகள் , விடுதலைப் போராட்ட வீரர்களின் கண்காட்சி மற்றும் ரோபோடிக்ஸ் செயற்கை நுண்ணறிவு பற்றிய செயல் விளக்கம், இரவு வான் நோக்கும் நிகழ்ச்சி ஆகியவை நடைபெற உள்ளது. மாணவர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டு கண்காட்சியையும் வான்நோக்கும் நிகழ்ச்சியையும் கண்டு களிக்கலாம்.தொடர்புக்கு கண்ணபிரான் 8778201926 என்பவரை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • உலக மக்கள் தொகை தினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கொண்டாடப்பட்டது.
    • வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

    குடிமங்கலம் :

    குடிமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் உலக மக்கள் தொகை தினம், அரசு மேல்நிலைப்பள்ளியில் கொண்டாடப்பட்டது.பள்ளித்தலைமையாசிரியர் பழனிசாமி தலைமை வகித்தார். வட்டார மருத்துவ அலுவலர் சுந்தரபாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    இந்த தினத்தையொட்டி ஓவியப்போட்டி நடத்தப்பட்டது.தொடர்ந்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன. உதவித்தலைமை ஆசிரியர்கள் பத்மகீதா, சக்திவேல்ராஜா, ஓவிய ஆசிரியர்கள் தியாகராஜன், மாசிலாமணி, சுகாதார ஆய்வாளர் உட்பட பலர் பங்கேற்றனர்.

    • 75 மாணவர்கள் கலந்து கொள்ளும் ஓவிய போட்டி நடைபெறுகிறது.
    • 75 மாணவ மாணவிகள் தொடர் வாசிப்பை மேற்கொள்ள உள்ளனர்.

    உடுமலை :

    பாரத திருநாட்டின் 75 -வது சுதந்திர தின விழா நிறைவை ஒட்டி உடுமலை உழவர் சந்தை எதிரே உள்ள கிளை நூலகம் எண் இரண்டில் 75 மாணவர்கள் கலந்து கொள்ளும் ஓவிய போட்டி நடைபெறுகிறது. வருகிற 13, 14-ந்தேதி ஆகிய 2 நாட்கள் ஒரே சமயத்தில் 75 மாணவ மாணவிகள் தேசத் தலைவர்களின் படங்களை வரையும் இந்த நிகழ்ச்சியில் உடுமலை மகாத்மா காந்தி உண்டு உறைவிடப் பள்ளி மாணவர்கள் மற்றும் அரசு மகளிர் இல்ல மாணவிகள் கலந்து கொண்டு இந்த போட்டியில் ஓவியங்களை வரைய உள்ளனர்.

    இதில் வெற்றி பெறும் மாணவ மாணவிகளுக்கு உடுமலை 75 வது சுதந்திர தின அமுதப் பெருவிழா குழுவினர் சார்பில் சான்றிதழ்கள் வழங்கப்படும். அதைத்தொடர்ந்து தொடர்ச்சியாக ஒரே நேரத்தில் வாசிப்பின் அவசியத்தையும் உணர்த்தும் வகையில் 75 மாணவ மாணவிகள் தொடர் வாசிப்பை மேற்கொள்ள உள்ளனர். இரு நிகழ்ச்சிகளை உடுமலை ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் நாகராஜ் துவக்கி வைக்கிறார்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நூலக வாசகர் வட்ட தலைவர் இளமுருகு ,துணைத்தலைவர் சிவகுமார் ,நூலக வாசகர்வட்டஆலோசகர் அய்யப்பன், பேராசிரியர் கண்டி முத்து, ஓவியர் வீரமணி, நூலகர் கணேசன், மகளிர் வாசகர் வட்ட தலைவர் நல்லாசிரியர் விஜயலட்சுமி ,நூலகர்கள் மகேந்திரன், பிரமோத் ,அஷ்ரப் சித்திகா, மற்றும் நூலக வாசகர் வட்டத்தினர் செய்து வருகின்றனர். ஓவிய போட்டி மற்றும் வாசிப்பு நிகழ்ச்சிகளை உடுமலை பாரதியார் நூற்றாண்டு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியரும் மகளிர் வாசகர் வட்ட தலைவருமான விஜயலட்சுமி ஒருங்கிணைக்கிறார் .

    ×