search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Galileo Science Institute"

    • முப்பெரும் விழா உடுமலை வெங்கடேஸ்வரா ஹாலில் நடைபெற்றது.
    • நாசாவின் சான்றுகளும் நினைவு பரிசும் வழங்கப்பட்டது.

    மடத்துக்குளம் :

    உடுமலை கலிலியோ அறிவியல் கழகம் ,உடுமலை சுற்றுச்சூழல் சங்கம், தேஜஸ் ரோட்டரி சங்கம் இணைந்து 2022 -23ஆம் கல்வியாண்டில் நல்லாசிரியர் விருது பெற்ற உடுமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆசிரியர்களுக்கும், சமூக சேவகர்களுக்கும் விருது வழங்கும் விழா, சர்வதேச விண்கற்கள் கண்டறியும் ஆய்வில் பங்கேற்ற மாணவர்களுக்கு நாசாவின் சான்றிதழ் வழங்கும் விழா, சர்வதேச விண்வெளி வார விழா வினாடி வினா போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கும் விழா என முப்பெரும் விழாவானது உடுமலை வெங்கடேஸ்வரா ஹாலில் நடைபெற்றது.

    கலிலியோ அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான் வரவேற்று பேசினார். உடுமலை சுற்றுச்சூழல் சங்க தலைவர் மணி தலைமை வகித்தார். உடுமலை தேஜஸ் ரோட்டரி சங்க நிர்வாகி எஸ். எம். டிராவல்ஸ் உரிமையாளர் நாகராஜ் , அபக்ஸ் சங்கத்தின் நிர்வாகி சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உடுமலை தேஜஸ் ரோட்டரி சங்க தலைவர் சத்யம் பாபு,உடுமலை அமிர்தனேயன், விஜயகுமார், தமிழ் ஆசிரியர் சின்னராசு, தமிழக தமிழாசிரியர் கழக மதிப்பியல் தலைவர் வஞ்சிமுத்து, விவேகானந்தா வித்யாலயம் பள்ளி தாளாளர் மூர்த்தி ஆகியோர் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களான சரவணகுமார்,நர்மதா ஐயப்பன், கலாமணி ஆகியோருக்கும் உடுமலை கல்வி மாவட்டத்தை பசுமையாக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க பல்வேறு வழிகளில் உதவிய தற்போதைய திருப்பூர் மாவட்ட மெட்ரிக் பள்ளிகளின் மாவட்ட கல்வி அலுவலர் பழனிசாமி ஆகியோருக்கு பசுமை நாயகன் விருதும், பெத்தேல் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியின் தாளாளர் ஜெயக்குமாரி,லிட்டில் ஏஞ்சல்ஸ் அறக்கட்டளையின் நிர்வாகி ராஜேஸ்வரி ஆகியோருக்கு சமூக சேவகி விருதும், உடுமலை ராயல்ஸ் அரிமா சங்க தலைவர் யோகானந்த் ஆகியோருக்கு சேவை செம்மல் விருதும், இரண்டாம் கிளை நூலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற நூலகர் கணேசனுக்கு நல் நூலகர் விருதும், எண்ணம் போல் அறக்கட்டளையின் நிர்வாகி இமானுவேல் நெல்சனுக்கு சமூக சேவகர் விருதும் வழங்கப்பட்டது.

    சிறப்பு விருந்தினர்களாக திருப்பூர் சிக்கண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் கிருஷ்ணன் கலந்துகொண்டு, இது போன்ற விருதுகள் நம்மை மேன்மேலும் உற்சாகப்படுத்தி புதுமையான பணிகளை சிறப்பாக செய்வதற்கு உறுதுணையாகும், விருது பெற்ற ஒவ்வொருவரும் தங்கள் பணியினை மேன்மேலும் சிறப்பாக செய்ய வேண்டும் என்று சிறப்புரை யாற்றினார். திருப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் பழனிசாமி விருது பெற்ற ஆசிரியர்களுக்கும் சமூக சேவகர்களுக்கும் வாழ்த்துக்களை கூறி தங்கள் பணியை மென்மேலும் சிறப்பாக செய்ய உற்சாகப்படுத்தி பேசினார்.

    தொடர்ந்து சர்வதேச விண்கற்கள் கண்டறியும் ஆய்வில் நாசா உடன் இணைந்து கலிலியோ அறிவியல் கழகம் வழிகாட்டுதலின் பேரில் மிகச் சிறப்பாக ஆய்வு செய்த கோவை எஸ்என்எம்வி., கலைமற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கும் ,ஜிவிஜி கல்லூரி மாணவிகளுக்கும் நாசாவின் சான்றுகளும் நினைவு பரிசும் வழங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக சர்வதேச விண்வெளி வார விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட வினாடி வினா போட்டிகளில் சிறப்பாக பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழும் பரிசுகளும் வழங்கப்பட்டது. நிறைவாக நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் சரவணன் நன்றி கூறினார்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கலிலியோ அறிவியல் கழக நிர்வாகிகள் சதீஷ்குமார், சசிகுமார் உட்பட அனைவரும் செய்திருந்தனர்.

    • 75 நிகழ்வுகள் 75 இடங்களில் நடத்தப்பட்டு வருகிறது.
    • தன்னம்பிக்கை என்பது பள்ளி மாணவர்களுக்கு மிகவும் அவசியம்.

    மடத்துக்குளம் :

    75 வது சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழாவாக உடுமலையில் கொண்டாட பல்வேறு தன்னார்வ அமைப்புகள் இணைந்து 75 நிகழ்வுகள் 75 இடங்களில் நடத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் உடுமலை கலிலியோ அறிவியல் கழகம் மற்றும் உடுமலை சுற்றுச்சூழல் சங்கத்தின் சார்பாக உடுமலை ஆர்.ஜி.எம். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஸ்ரீ விசாலாட்சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ,பெத்தேல் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி, என்.வி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் கணக்கும் இனிக்கும் என்ற தலைப்பில் கணிதம் பற்றிய அறிவையும், கணித பாடம் மிகவும் எளிது என்பதை எடுத்துரைக்கும் விதமாகவும் மாயசதுரங்களை எவ்வாறு அமைப்பது என்பது பற்றியும், தங்களது பிறந்த தேதியை கூட எவ்வாறு மாய சதுரமாக மாற்றுவது என்பது பற்றியும் ஓய்வு பெற்ற ரயில்வே நிலைய மேலாளர் ஜோதிலிங்கம் மிகச் சிறப்பாக மாணவர்களுக்கு எடுத்துக்காட்டினார்.

    மேலும் அறிவியல் என்றாலே, ஏன் எதற்கு எப்படி என்ற கேள்விகளை கேட்பது அத்தகைய அறிவியல் விழிப்புணர்வு நிகழ்வினை அறிவியல் தன்னார்வலர் பிரபாகரன் செய்து காண்பித்தார். அதனைத் தொடர்ந்து ஓய்வு பெற்ற மதுரை ரயில்வே நிலையம் பாலசுப்பிரமணியன் தன்னம்பிக்கை என்பது பள்ளி மாணவர்களுக்கு மிகவும் அவசியம். எதிர்காலத்தில் பல்வேறு சாதனைகளை நீங்கள் நிகழ்த்த வேண்டும் என்று தன்னம்பிக்கை கருத்தை வலியுறுத்தி 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். பள்ளி மாணவர்களுக்கு ஓவியப்போட்டி, கட்டுரை போட்டி மற்றும் ஸ்லோகன் எழுதும் போட்டி ஆகியவை உடுமலை தேஜஸ் மஹாலில் நடைபெற்றது. உடுமலை மற்றும் மடத்துக்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து சுமார் 800க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். கனவு இந்தியா 2047 என்பதை கருத்தாக கொண்டு நடத்தப்பட்ட இப் போட்டிகளில் ஐந்தாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கின்ற மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

    இந்நிகழ்ச்சியில் உடுமலை சுற்றுச்சூழல் சங்கத் தலைவர் மணி, செயற்குழு உறுப்பினர் சசிகுமார், மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர் பெருமக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியினை கலிலியோ அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான் ஒருங்கிணைத்தார். நாளை முதல் 14 ந் தேதி வரை உடுமலை தளி ரோட்டில் உள்ள தேஜஸ் மஹாலில் அறிவியல் விஞ்ஞானிகள், தபால் தலை, ஆயுத கண்காட்சிகள் , விடுதலைப் போராட்ட வீரர்களின் கண்காட்சி மற்றும் ரோபோடிக்ஸ் செயற்கை நுண்ணறிவு பற்றிய செயல் விளக்கம், இரவு வான் நோக்கும் நிகழ்ச்சி ஆகியவை நடைபெற உள்ளது. மாணவர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டு கண்காட்சியையும் வான்நோக்கும் நிகழ்ச்சியையும் கண்டு களிக்கலாம்.தொடர்புக்கு கண்ணபிரான் 8778201926 என்பவரை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×