search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Our Lady of Snows"

    • வண்ண பலூன்கள், ஜெபமாலை வடிவிலான பலூன் பறக்கவிடப்பட்டது.
    • ஞாயிற்றுக்கிழமை கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

    வள்ளியூர்:

    நெல்லை மாவட்டம் தெற்கு கள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா பேராலயத்தின் 138-வது ஆண்டு திருவிழா நேற்று மாலை 6.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடக்கமாக புனித மிக்கேல் அதிதூதர் சப்பரம் கோவிலை சுற்றியுள்ள ரதவீதி வழியாக எடுத்து வரப்பட்டது.

    கொடியேற்றம்

    சப்பரம் கோவில் வளாகத்தை வந்தடைந்ததும் பரிசுத்த அதிசய பனிமாதா உருவம் பொறிக்கப்பட்ட புனித கொடியை தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் கோவில் தர்மகர்த்தா மருத்துவர் ஜெபஸ்டின் ஆனந்த் மற்றும் ஊர் பெரியவர்கள் கோவில் உள்ளிருந்து எடுத்து வந்தனர்.

    இந்த புனித கொடியை ஆயர் ஜெபம் செய்து அர்ச்சித்தார். பின்னர் தர்மகர்த்தா கொடியேற்றினார். இதனைத் தொடர்ந்து வானவேடிக்கைகள் நடைபெற்றது. வண்ண, வண்ண பலூன்கள், ஜெபமாலை வடிவிலான பலூன் பறக்கவிடப்பட்டது.

    புதுநன்மை வழங்கும் நிகழ்ச்சி

    நிகழ்ச்சியில் தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மை குருவானவர் பன்னீர் செல்வம், குருவானவர்கள் ஜெகதீஷ், பீற்றர் பாஸ்டின், ரூபன், நெல்சன் பால்ராஜ் மற்றும் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். அதன் பின்னர் ஆயர் தலைமையில் சிறப்பு மாலை ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. திருவிழா நாட்களில் தினமும் காலை திரியாத்திரை திருப்பலியும் இரவு மறையுரை மற்றும் நற்கருணை ஆசீர்வாதமும் நடைபெறுகிறது.

    வருகிற 2-ந் தேதி 7-ம் திருவிழா கொண்டாடப்படுகிறது. அன்று மாதா காட்சி கொடுத்த மலைக்கெபியில் திருப்பலியும் இரவு தூத்துக்குடி மறைமாவட்ட ஆயரின் செயலர் ரினோ அடிகளார் தலைமையில் சிறப்பு மாலை ஆராதனையும் நடைபெறுகிறது. 8-ம் திருவிழா காலையில் தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் தலைமையில் நடைபெறுகின்ற திருப்பலியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு புதுநன்மை வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு ஆயர் தலைமையில் நற்கருணைப்பவனியும் அதனைத் தொடர்ந்து மாலை ஆராதனையும் நடைபெறுகிறது.

    தேர்ப்பவனி

    வருகிற 4-ந்தேதி 9-ம்திரு விழா கொண்டாடப்படுகிறது. அன்று காலை தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மை குருவானவர் தலைமையில் திருப்பலி நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் அந்தோணிச்சாமி தலைமையில் சிறப்பு நற்கருணை ஆசீர் நடைபெறுகிறது. இரவு 10 மணிக்கு மலையாளத் திருப்பலியும், இரவு 12 மணிக்கு தமிழ் திருப்பலியும் நடைபெறுகிறது.

    அதன் பின்னர் பரிசுத்த அதிசய பனிமாதா அன்னையின் அலங்கார தேர்ப்பவனி நடைபெறுகிறது. இப்பவனியில் கேரளா, மராட்டியம் மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் திரளாக பங்கேற்று வழிபடுவார்கள். வருகிற 5-ந்தேதி (சனிக்கிழமை) 10-ம் திருவிழா கொண்டாடப்படுகிறது. அன்று ஆதிகாலை 5.15 மணிக்கு பாளையங்கோட்டை மறைமாவட்ட முன்னாள் ஆயர் ஜூடுபால்ராஜ் தலைமையில் ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடைபெறுகிறது. பிற்பகல் 2 மணிக்கு அன்னையின் தேர்ப்பவனியும், மாலை 7 மணிக்கு முதல் சனி வழிபாடும் நடைபெறுகிறது.

    கொடியிறக்கம்

    ஞாயிற்றுக்கிழமை கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது. திருவிழா ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா மருத்துவர் ஜெபஸ்டின் ஆனந்த் தலைமையில் பங்கு தந்தை ஜெரால்டு எஸ். ரவி, உதவி பங்கு தந்தை ரோஸ், பங்கு மக்கள் செய்துள்ளனர். திருவிழாவையொட்டி நாகர்கோவில், வள்ளியூர், திசையன்விளை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    • தமிழகத்தில் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் பல்லாயிரக்கணக்கனோர் கலந்து கொண்டனர்.
    • இரவு 12 மணிக்கு பரிசுத்த அதிசய பனிமாதா தேரில் எழுந்தருளி வீதி உலா வந்து காட்சி கொடுத்தார்.

    வள்ளியூர் அருகே உள்ள தெற்கு கள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா ஆலய திருவிழா ஆண்டுதோறும் ஜூலை மாதம் 27-ந் தேதி தொடங்கி 10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும். அதன்படி 137-வது ஆண்டு திருவிழா கடந்த மாதம் 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு முதல் திருப்பலியும், அதனை தொடர்ந்து திருயாத்திரை திருப்பலியும் நடந்தது. மாலையில் பக்தர்கள் தங்கள் நேர்த்தி கடனாக தத்து கொடியை கோவிலை சுற்றி வந்து காணிக்கையாக செலுத்தி தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். பின்னர் நற்கருணை ஆசீருடன் கொடியை அர்ச்சித்து தர்மகர்த்தா ஜெபஸ்டின் ஆனந்த் கொடியை ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் தமிழகத்தில் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் பல்லாயிரக்கணக்கனோர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து 10 நாட்கள் நடந்த திருவிழாவில் தினமும் காலையில் திருயாத்திரையுடன் திருப்பலியும், மாலையில் ஜெபமாலை மறையுரையுடன் கூடிய நற்கருனை ஆசீரும் நடந்தது. 9-ம் திருவிழாவன்று காலையில் ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் திருயாத்திரை திருப்பலியும், மாலையில் பாளையங்கோட்டை மறை மாவட்ட ஆயர் அந்தோணிசாமி தலைமையில் ஜெபமாலை, மறையுரை, நற்கருணை ஆசீரும் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இரவு 12 மணிக்கு பரிசுத்த அதிசய பனிமாதா தேரில் எழுந்தருளி வீதி உலா வந்து காட்சி கொடுத்தார். நிகழ்ச்சியில் தமிழகத்தில் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 10-ம் திருவிழாவான நேற்று ஆயர் தலைமையில் கூட்டுத் திருப்பலி நடந்தது.

    விழா ஏற்பாடுகளை தர்மகர்த்தா டாக்டர் ஜெபஸ்டின் ஆனந்த், பங்குத்தந்தை ஜெரால்ட் ரவி, உதவி பங்குத்தந்தை சிபு ஜோசப் மற்றும் தெற்கு கள்ளிகுளம் கத்தோலிக்க கிறிஸ்தவ நாடார் மகமை சங்க நிர்வாகக்குழு உறுப்பினர்கள், இறை மக்கள் செய்திருந்தனர்.

    கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் திருத்தலங்களில் தெற்கு கள்ளிகுளம் அதிசய பனிமாதா திருத்தல பேராலய திருவிழா வருகிற 27-ந் தேதி மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் திருத்தலங்களில் தெற்கு கள்ளிகுளம் அதிசய பனிமாதா திருத்தல பேராலய திருத்தலமும் ஒன்றாகும். தென்னிந்தியாவில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயங்களில் மிக உயர்ந்த வானளாவிய கோபுரம் கொண்டதாக அமைந்துள்ளது பனிமாதா அன்னையின் ஆலயம். இத்திருத்தல பேராலய திருவிழா வருகிற 27-ந் தேதி மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. பனிமாதா உருவம் பொறிக்கப்பட்ட புனித கொடியை ரெமிஜியூஸ் ஜெபம் செய்து அர்ச்சித்த பின்னர் கோவில் தர்மகர்த்தா ஜெபஸ்டின் ஆனந்த் கொடியேற்றுகிறார்.

    அதனைத் தொடர்ந்து மதுரை மறைமாநிலம் ஆனந்தம் தலைமையில் சிறப்பு மாலை ஆராதனை மற்றும் மறையுரை, நற்கருணை ஆசீர்வாதம் நடைபெறுகிறது. தொடர்ந்து திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. திருவிழா நாட்களில் தினமும் காலை திருப்பலியும் இரவு மறையுரை மற்றும் நற்கருணை ஆசீர்வாதமும் நடைபெறுகிறது.

    ஆகஸ்டு 2-ந் தேதி 7ம் திருவிழா கொண்டாடப்படுகிறது. அன்று காலை 6.30 மணிக்கு திருயாத்திரை திருப்பலியும், 8.30 மணிக்கு குழந்தைகளுக்கு ஞானஸ்நானம் கொடுக்கப்படுகிறது. மாலை6.30 மணிக்கு அலங்காரதட்டு பங்குதந்தை ஜான் செல்வம் தலைமையில் சிறப்பு ஆராதனை மற்றும் மறையுரை, நற்கருணை ஆசீர்வாதம் நடைபெறுகிறது.

    3-ந் தேதி 8ம் திருவிழா கொண்டாடப்படுகிறது. அன்று காலையில் மறைமாவட்ட வடவை முதன்மை குரு ஜான் பிரிட்டோ தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெறுகிறது. இத்திருப்பலியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு புதுநன்மை வழங்கப்படுகிறது. மாலை 6.30 மணிக்கு பி‌ஷப் இவான் அம்புரோஸ் தலைமையில் நற்கருணை பவனி நடைபெறுகிறது. கோட்டார் இளைஞர் இயக்குநர் ஜெனிபர் எடிசன் அடிகளார் மறையுரை நற்கருணை ஆசீர்வாதம் வழங்குகிறார்.

    ஆகஸ்ட் 4-ந் தேதி 9ம் திருவிழா கொண்டாடப்படுகிறது. அன்று இரவு 7 மணிக்கு தக்கலை மேதகு பேராயர் ஜார்ஜ் ராஜேந்திரன் தலைமையில் சிறப்பு ஆடம்பர மாலை ஆராதனை நடைபெறுகிறது. அடைக்கலாபுரம் ஜோசப் இசிதோர் மறையுரையும், அதனைத் தொடர்ந்து வானவேடிக்கையும் இரவு 12 மணிக்கு அன்னையின் அலங்கார தேர்ப்பவனியும் நடைபெறுகிறது.

    இப்பவனியில் திரளான பக்தர்கள் பங்கேற்று உப்பு, மிளகு காணிக்கை செலுத்தி வழிபடுகிறார்கள். ஆகஸ்ட் 5ம் தேதி 10ம் திருவிழா கொண்டாடப்படுகிறது. அன்று காலை 5.30 மணிக்கு தக்கலை மேதகு பேராயர் ஜார்ஜ் ராஜேந்திரன் தலைமையில் ஆடம்பர கூட்டுத்திருப்பலி மற்றும் 8.30 மணிக்கு மலையாள திருப்பலி நடைபெறுகிறது.

    பின்னர் இரவு மாலை ஆராதனையுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. திருவிழா ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா எம்.ஜெபஸ்டின்ஆனந்த், பங்குதந்தை ஜான்சன்ராஜ், உதவி பங்குதந்தை கலைச்செல்வன் மற்றும் கத்தோலிக்க கிறிஸ்தவ நாடார் மகைமை சங்கம்,நிர்வாகக்குழு உறுப்பினர்கள் இறைமக்கள் செய்துவருகின்றனர்.
    ×