search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Athisaya Panimatha"

    • தமிழகத்தில் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் பல்லாயிரக்கணக்கனோர் கலந்து கொண்டனர்.
    • இரவு 12 மணிக்கு பரிசுத்த அதிசய பனிமாதா தேரில் எழுந்தருளி வீதி உலா வந்து காட்சி கொடுத்தார்.

    வள்ளியூர் அருகே உள்ள தெற்கு கள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா ஆலய திருவிழா ஆண்டுதோறும் ஜூலை மாதம் 27-ந் தேதி தொடங்கி 10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும். அதன்படி 137-வது ஆண்டு திருவிழா கடந்த மாதம் 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு முதல் திருப்பலியும், அதனை தொடர்ந்து திருயாத்திரை திருப்பலியும் நடந்தது. மாலையில் பக்தர்கள் தங்கள் நேர்த்தி கடனாக தத்து கொடியை கோவிலை சுற்றி வந்து காணிக்கையாக செலுத்தி தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். பின்னர் நற்கருணை ஆசீருடன் கொடியை அர்ச்சித்து தர்மகர்த்தா ஜெபஸ்டின் ஆனந்த் கொடியை ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் தமிழகத்தில் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் பல்லாயிரக்கணக்கனோர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து 10 நாட்கள் நடந்த திருவிழாவில் தினமும் காலையில் திருயாத்திரையுடன் திருப்பலியும், மாலையில் ஜெபமாலை மறையுரையுடன் கூடிய நற்கருனை ஆசீரும் நடந்தது. 9-ம் திருவிழாவன்று காலையில் ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் திருயாத்திரை திருப்பலியும், மாலையில் பாளையங்கோட்டை மறை மாவட்ட ஆயர் அந்தோணிசாமி தலைமையில் ஜெபமாலை, மறையுரை, நற்கருணை ஆசீரும் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இரவு 12 மணிக்கு பரிசுத்த அதிசய பனிமாதா தேரில் எழுந்தருளி வீதி உலா வந்து காட்சி கொடுத்தார். நிகழ்ச்சியில் தமிழகத்தில் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 10-ம் திருவிழாவான நேற்று ஆயர் தலைமையில் கூட்டுத் திருப்பலி நடந்தது.

    விழா ஏற்பாடுகளை தர்மகர்த்தா டாக்டர் ஜெபஸ்டின் ஆனந்த், பங்குத்தந்தை ஜெரால்ட் ரவி, உதவி பங்குத்தந்தை சிபு ஜோசப் மற்றும் தெற்கு கள்ளிகுளம் கத்தோலிக்க கிறிஸ்தவ நாடார் மகமை சங்க நிர்வாகக்குழு உறுப்பினர்கள், இறை மக்கள் செய்திருந்தனர்.

    • கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் புண்ணிய ஸ்தலங்களில் சிறப்பு பெற்ற திருத்தலம் தெற்குகள்ளிகுளம் அதிசய பனிமாதா பேராலயமாகும்.
    • இந்த ஆலயத்திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி ஆகஸ்ட் 5-ந் தேதி நிறைவுபெறும்.

    வள்ளியூர்:

    கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் புண்ணிய ஸ்தலங்களில் சிறப்பு பெற்ற திருத்தலம் தெற்குகள்ளிகுளம் அதிசய பனிமாதா பேராலயமாகும்.

    இந்த ஆலயத்திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி ஆகஸ்ட் 5-ந் தேதி நிறைவுபெறும்.

    அதன்படி வருகிற 27-ந் தேதி காலை 5.15 மணிக்கு அருட்தந்தை ஒய்.தேவராஜன் அடிகளார் தலைமையில் திருப்பலி நடைபெறுகிறது.

    மாலை 6.30 மணிக்கு புனித கொடியேற்றம் நடைபெறுகிறது. மாதா சொரூபம் பொறிக்கப்பட்ட புனித கொடியை அருட் தந்தையர்கள் ஜெபம் செய்து அர்ச்சித்தபின்னர் தர்மகர்த்தா மருத்துவர் ஜெபஸ்டின் ஆனந்த் கொடியேற்றுகிறார்.

    அதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் நற்கருணை ஆசீர்வாதம் நடைபெறுகிறது. தொடர்ந்து திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது.

    திருவிழா நாட்களில் தினமும் காலை திரியாத்திரை திருப்பலியும் மாலை மறையுரையும் நற்கருணை ஆசீர்வாதமும் நடைபெறுகிறது.

    ஆகஸ்டு 2-ந்தேதி 7-ம் திருவிழா கொண்டாடப்படுகிறது. மாலை 6.30 மணிக்கு பாளையங்கோட்டை பேரருட்திரு. ஜோமிக்ஸ் தலைமையில் சிறப்பு மாலை ஆராதனை நடைபெறுகிறது. ஆகஸ்டு 3-ந் தேதி 8-ம் திருவிழா கொண்டாடப்படுகிறது. அன்று காலை 7.30 மணிக்கு பேரருட்திரு - இளங்கே தலைமையில் முனைவர் ஜெரால்டு.எஸ்.ரவி மறையுரையுடன் புதுநன்மை திருப்பலி நடைபெறுகிறது.

    இத்திருப்பலியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு புது நன்மை வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் நற்கருணை சிற்றாலயம் திறப்பு மற்றும் நற்கருணைப் பவனியும் அதனைத் தொடர்ந்து நற்கருணை ஆசீரும் நடைபெறுகிறது.

    ஆகஸ்டு 4-ந் தேதி 9-ம் திருவிழா கொண்டாடப்படுகிறது. அன்று காலை 7.30மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் உறுதிப்பூசுதல் திருப்பலி நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு பாளை மறைவட்ட ஆயர் அந்தோணிசாமி தலைமையில் இரக்கத்தின் ஆண்டவர் கெபி திறப்பு விழா மற்றும் சிறப்பு நற்கருணை ஆசீரும் நடைபெறுகிறது. இரவு 10 மணிக்கு சிபு ஜோசப் தலைமையில் மலையாளத்திருப்பலி நடைபெறுகிறது.

    அதனைத் தொடர்ந்து இரவு 12 மணிக்கு அதிசய பனிமாதா அன்னையின் அலங்காரத் தேர்ப்பவனியும் நடைபெறுகிறது. ஆகஸ்டு 5-ந் தேதி 10-ம் திருவிழா கொண்டாடப்படுகிறது. அன்று காலை 5.15 மணிக்கு பாளை மறைவட்ட ஆயர் அந்தோணிசாமி தலைமையில் கூட்டுத்திருப்பலி காலை7.30 மணிக்கு திருமுழுக்கு திருப்பலி நடைபெறும் மாலை 6.30 மணிக்கு நற்கருணை ஆசீருடன் திருவிழா நிறைவு பெறுகிறது. ஆகஸ்டு 6-ந் தேதி முதல் சனி சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது.

    திருவிழா ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா மருத்துவர் ஜெபஸ்டின் ஆனந்த் தலைமையில் பங்கு தந்தை ஜெரால்டு ரவி, உதவி பங்கு தந்தை சிபு ஜோசப் மற்றும் பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.

    ×