search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Observation"

    • மதுரை கண் ஆஸ்பத்திரிக்கு இலவசமாக செய்யகூடிய அறுவை சிகிச்சைக்காக கண்கள் அனுப்பி வைக்கப்பட்டது.
    • விழி கொடுத்து ஒளி ஏற்றுவோம். கண்தானம் செய்வோம்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் தேவதானம் மனற்படுகையை சேர்ந்த பெரியசாமி மனைவியும், கார்த்தி தாயாரும், கட்டிமேடு ஓவிய ஆசிரியர் நேரு சகோதரியுமான மணிமேகலை மரணம் அடைந்தார். முன்னதாக மரணத்திற்கு முன்பே அவர் ராய் டிரஸ்ட் இன்டர்நேஷனல் மூலம் கண்தானம் செய்ய விருப்பம் தெரிவித்து இருந்தார்.அதன்படி மணிமேகலை கண்களை தானமாக ராய் டிரஸ்ட் இன்டர்நேஷனல் மூலம் பெற்று குடும்பத்தினரின் ஒப்புதலோடு மதுரை அரவிந்த கண் மருத்துவமனைக்கு இலவசமாக செய்யகூடிய அறுவை சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

    மறைந்தும் நான்கு நபரின் வாழ்வில் ஒளியேற்றி, உயிர் வாழ்கிற மணிமேகலை குடும்பத்திற்கு ராய் டிரஸ்ட் சார்பாக பாராட்டுதல் தெரிவிக்கப்பட்டது.

    இது பற்றி ராய் டிரஸ்ட் இன்டர்நேஷனல் நிறுவனத் தலைவர் முனைவர் துரை ராயப்பன் கூறும் போது, தானங்களில் சிறந்தது கண்தானம். உலக சுகாதார நிறுவனத்தின் தரவுகளின்படி கார்னியல் பிளைண்ட்னெஸ் எனப்படும் கருவிழி பாதிப்பானது பார்வையிழப்புக்குக் காரணமான விஷயங்களில் நான்காவது இடம் வகிப்பதாகத் தெரிகிறது.

    இறந்தவர்களின் கண்களை அடுத்த 6 - 8 மணி நேரத்துக்குள் எரிக்கவோ, புதைக்கவோ கூடாது. இறந்தவர்களின் கண்கள் நல்ல நிலையில் இருக்கும் பட்சத்தில் அவற்றை பிரத்தியோக ஐஸ் பெட்டியில் வைத்து எடுத்து வருவார்கள். கருவிழி மாற்று அறுவைசிகிச்சை தேவைப் படுவோருக்கு அவற்றைப் பொருத்துவதன் மூலம் பார்வை கிடைக்கச் செய்ய முடியும்.

    கருவிழி மாற்று அறுவை சிகிச்சையில், பிரச்னைகள் ஏதும் இல்லாத பட்சத்தில் 5 முதல் 15 வருடங்கள் வரை அப்படியே இருக்கும். ஆனால், இந்த அறுவை சிகிச்சைக்குப் பிறகு, சம்பந்தப்பட்ட நபர், அடிக்கடி கண் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.

    விழி கொடுத்து ஒளி ஏற்றுவோம். கண் தானம் செய்வோம். கண்கள் புதைப்பதற்கு அல்ல, விதைப்பதற்கு என்ற விழிப்புணர்வை அனைவரிடமும் சென்று சேர வேண்டும் என்றார்.

    • விமான நிலையத்தில் மருத்துவ கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • ஒரே நாளில் 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

    கோவை,

    கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    மேலும் வெளிநாடுகளில் இருந்த கோவைக்கு வரும் பயணிகளுக்கு விமான நிலையத்தில் மருத்துவ கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    நேற்று முன்தினம் சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு வந்த பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவில் விமானத்தில் வந்த கணபதியை சேர்ந்த 41 வயது ஆண் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இது குறித்து அவருக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். மேலும் தனிமைப்படுத்தி சிகிச்சை மேற்கொள்ள அறிவுறுத்தினர். தொடர்ந்து அவரை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.

    அவரது சளி மாதிரி எடுக்கப்பட்டு புதிய வகை கொரோனா தொற்று உள்ளதா என்பதை கண்டுபிடிப்பதற்காக மரபணு சோதனைக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    கடந்த 3 நாட்களுக்கு முன்பு சிங்கப்பூரில் இருந்த கோவைக்கு வந்த கேரளாவை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

    கோவை மாவட்டத்தில் தொற்று அதிமுள்ள பகுதிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என 157 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனை முடிவுகள் நேற்று வெளியானது. இதில் நேற்று ஒரே நாளில் 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் கோவை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 41 ஆயிரத்து 673 ஆக உயர்ந்துள்ளது. தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக வீடுகள், அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகள் என 100 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்ற 11 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பினர்.

    • ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தின விழா இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளன.
    • கடற்கரை ஓரமுள்ள 49 மீனவ கிராமங்களிலும் அடையாளம் தெரியாத நபர்கள், மர்ம நபர்கள், சந்தேகப்படும்படியான படகுகள் ஏதேனும் வருகிறதா? என்பதை போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

    கடலூர்:

    நாடு முழுவதும் 75 - ம் ஆண்டு சுதந்திர தின விழா அமுத பெருவிழாவாக கொண்டாட வேண்டும் என பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இந்த நிலையில் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தின விழா இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளன. இதனை தொடர்ந்து ஒவ்வொரு வீடுகளிலும் இன்று முதல் வருகிற 15-ந் தேதி வரை தேசிய கொடி ஏற்றி 75-ம் ஆண்டு சுதந்திர தின விழா கொண்டாட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் சுதந்திர தின விழாவை யொட்டி மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதனை தொடர்ந்து கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவின் பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் கடலூர், பண்ருட்டி, சிதம்பரம், சேத்தியாதோப்பு, திட்டக்குடி, பண்ருட்டி, விருத்தாச்சலம் ஆகிய ஏழு உட்கோட்டத்திற்கு உட்பட்ட துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீஸார்கள் என 1900 போலீசார்கள் சுதந்திர தினத்தை முன்னிட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து இந்த ஆண்டு 75-ம் ஆண்டு சுதந்திர தின விழா என்பதால் வழக்கத்தை விட கூடுதலாக மாவட்ட ம் முழுவதும் கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இது மட்டும் இன்றி கடற்கரை ஓரமுள்ள 49 மீனவ கிராமங்களிலும் அடையாளம் தெரியாத நபர்கள், மர்ம நபர்கள், சந்தேகப்படும்படியான படகுகள் ஏதேனும் வருகிறதா? என்பதை போலீசார் கண்காணித்து வருவதோடு அங்குள்ள மக்களிடம் தகவல் அளிக்க அறிவுறுத்தி உள்ளனர்.

    இது மட்டுமின்றி மக்கள் அதிகமாக கூடும் இடமான கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள், பஸ் நிலையங்கள், ெரயில் நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். மேலும் மாவட்டம் முழுவதும் மோப்பநாய் உதவியுடன் எங்கேனும் வெடிகுண்டுகள் உள்ளதா? என்பதனை வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள சோதனை சாவடிகளின் போலீசார் தீவிர சோதனைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். கடலூர் முதுநகர் ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையில் தலைமை காவலர் முருகன் போலீஸ் வினோத்குமார் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இன்று காலை ரெயில் நிலையத்துக்கு வந்த ரெயில்களில் தீவிர சோதனை நடத்தி, பயணிகளின் உடமைகளை காண்காணித்தனர். ரெயில்வே தண்டவாளங்களில் மெட்டல் டிடெக்டர் கருவியின் உதவியுடன் சோதனை நடத்தினர். கடலூர் முதுநகர் ரெயில் நிலையத்திற்கு வந்த ரயில்கள் மற்றும் பயணிகளின் பார்சல்களை வெடிகுண்டு பரிசோதிக்கும் கருவிகளைக் கொண்டு போலீசார் சோதனை செய்தனர். இதனை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் ரெயில் நிலையங்களிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    ×