search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "nutrition project"

    • செப்டம்பா் 22 ல் ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டமும் நடத்தப்படவுள்ளது.
    • சத்துணவு ஊழியா்கள் மூலமாகவே அமல்படுத்த வேண்டும்.

    தாராபுரம்:

    தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் தாராபுரத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநிலத் தலைவா் சு.தமிழ்ச்செல்வி தலைமை வகித்தாா்.

    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் வருமாறு:-

    சங்க முன்னாள் மாநிலத் தலைவா் சுப்பிரமணியனின் தற்காலிகப் பணிநீக்க உத்தரவை ரத்து செய்வது உள்ளிட்ட நிலுவைக்கோரிக்கைகளை வலியுறுத்தி 3 கட்டமாகப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில், மண்டல அளவில் வரும் ஜூலை 22 ந்தேதி தர்ணாவும், சென்னையில் வரும் ஆகஸ்ட் 16 ந்தேதி முதல் ஆகஸ்ட் 19 ந்தேதி வரையில் 72 மணி நேர உண்ணாவிரதப் போராட்டமும், செப்டம்பா் 22 ல் ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டமும் நடத்தப்படவுள்ளது.

    சத்துணவு திட்டத்தின்கீழ் மாணவா்களுக்கு காலை சிற்றுண்டி வழங்குவது என்ற அரசின் முடிவு வரவேற்கத்தக்கது. அதே வேளையில், இந்தத் திட்டத்தின் மகளிா் சுய உதவிக்குழுக்களை ஈடுபடுத்தாமல் சத்துணவு ஊழியா்கள் மூலமாகவே அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில் மாவட்டத்தலைவா் ஞானசேகரன், மாநில துணைத்தலைவா்கண்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

    தமிழத்தில் நடைபெறும் சத்துணவு திட்ட ஊழலில் நடவடிக்கை எடுக்க கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தியுள்ளது. #indiacommunist #NutritionProjectScam
    சென்னை:

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக ஆட்சி வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு தமிழக அரசின் துறைகள் அனைத்தும் லஞ்ச லாவண்யத்தில் மூழ்கிக் கிடக்கின்றது. இதன் உச்சகட்டமாக சத்துணவு திட்ட மெகா ஊழல் அம்பலமாகியுள்ளது. இந்த மெகா ஊழல் பற்றி தமிழக அரசுக்கும், மத்திய விசாரணை முகமைக்கும் வருமான வரித்துறை கடிதம் எழுதி உள்ளதாக கூறப்படுகின்றது.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியே ஊழல் புகார்களில் சிக்கியுள்ளதால், இந்த சத்துணவு திட்ட மெகா ஊழல் பற்றி விசாரணைக்கு உத்தரவிட்டாலும் அது ஏமாற்று வேலையாகவே முடியும்.

    தமிழகத்தில் நடைபெறும் ஊழலை விசாரிப்பதுபோல் விசாரித்து, பின்பு அதை வைத்து எடப்பாடி பழனிசாமி அரசை மிரட்டி தன் அரசியல் லாபத்துக்கு பணியவைக்கும் வேலையை பிரதமர் நரேந்திர மோடி தலைமயிலான மத்திய அரசு செய்து வருகின்றது. இந்த சத்துணவு மெகா ஊழல் விஷயத்திலாவது உரிய விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #indiacommunist #NutritionProjectScam
    ×