search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "NorthEast United"

    5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் பெங்களூரு அணி 3-0 என்ற கோல் கணக்கில் கவுகாத்தி அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. #ISL2018 #Bengaluru #NorthEastUnited
    பெங்களூரு:

    5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில், பெங்களூரு எப்.சி.- நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி) அணிகள் இடையிலான அரைஇறுதியின் 2-வது சுற்று ஆட்டம் பெங்களூருவில் நேற்று இரவு நடந்தது. கவுகாத்தியில் நடந்த முதலாவது சுற்றில் பெங்களூரு எப்.சி. அணி கடைசி நிமிடத்தில் செய்த தவறால் 1-2 என்ற கோல் கணக்கில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியிடம் தோல்வி அடைந்தது. எனவே இந்த ஆட்டத்தில் குறைந்தது 2 கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே பெங்களூரு அணியால் இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியும் என்ற நெருக்கடியுடன் களம் கண்டது. நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி ‘டிரா’ செய்தாலே இறுதிப்போட்டியை உறுதி செய்து விடலாம் என்ற நிலையில் களம் இறங்கியது.

    விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் கோல் எதுவும் விழவில்லை. உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுக்கு மத்தியில் ஆடிய பெங்களூரு அணி கடைசி நேரத்தில் அடுத்தடுத்து கோல் அடித்து அசத்தியது. முடிவில் பெங்களூரு அணி 3-0 என்ற கோல் கணக்கில் கவுகாத்தி அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. பெங்களூரு அணியில் மிகு 72-வது நிமிடத்திலும், டிமாஸ் டெல்காடோ 87-வது நிமிடத்திலும், சுனில் சேத்ரி 90-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். கவுகாத்தி அணியால் கடைசி வரை பதில் கோல் எதுவும் திருப்ப முடியவில்லை.

    எப்.சி.கோவா-மும்பை சிட்டி எப்.சி. அணிகள் இடையிலான அரைஇறுதியின் 2-வது சுற்று ஆட்டம் கோவாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. மும்பையில் நடந்த முதல் சுற்றில் கோவா அணி 5-1 என்ற கோல் கணக்கில் மும்பையை வென்று இருந்தது. எனவே இன்றைய ஆட்டத்தில் மும்பை அணி 5 கோல்களுக்கு மேலான வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே இறுதிப்போட்டிக்குள் நுழைய முடியும்.
    ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியின் 32-வது லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி எப்.சி அணி நார்த் ஈஸ்ட் யுனைடெட்டை (கவுகாத்தி) அணியை வீழ்த்தி 4-வது வெற்றியை பதிவு செய்தது. #ISL2018 #MumbaiCity #NorthEastUnited
    கவுகாத்தி:

    5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் நேற்றிரவு கவுகாத்தியில் நடந்த 32-வது லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி எப்.சி. அணி 1-0 என்ற கோல் கணக்கில் நார்த் ஈஸ்ட் யுனைடெட்டை (கவுகாத்தி) வீழ்த்தி 4-வது வெற்றியை பதிவு செய்தது. வெற்றிக்குரிய கோலை 4-வது நிமிடத்தில் அர்னால்டு இசோகோ அடித்தார். கவுகாத்தி அணிக்கு இது முதலாவது தோல்வியாகும். 6-வது ஆட்டத்தில் ஆடிய அந்த அணி 3 வெற்றி, 2 டிரா, ஒரு தோல்வி என்று 11 புள்ளிகள் பெற்றுள்ளது.

    இன்றைய ஆட்டத்தில் அட்லெடிகோ டி கொல்கத்தா- எப்.சி. புனே சிட்டி (இரவு 7.30 மணி) அணிகள் மோதுகின்றன. #ISL2018 #MumbaiCity #NorthEastUnited 
    ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியின் 23-வது லீக் ஆட்டத்தில் கவுகாத்தி அணி 2-0 என்ற கோல் கணக்கில் டெல்லியை வீழ்த்தியது #ISL2018 #DelhiDynamos #NorthEastUnited
    புதுடெல்லி:

    10 அணிகள் பங்கேற்றுள்ள 5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் டெல்லியில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் நேற்றிரவு அரங்கேறிய 23-வது லீக் ஆட்டத்தில் டெல்லி டைனமோஸ் அணி, நார்த் ஈஸ்ட் யுனைடெட்டை (கவுகாத்தி) எதிர்கொண்டது.

    முதல் பாதியில் கோல் ஏதும் விழாத நிலையில் கடைசி 10 நிமிடங்களில் கவுகாத்தி அணியினர் அமர்க்களப்படுத்தினர். 82-வது நிமிடத்தில் பெடரிகோ காலெகோ, 90-வது நிமிடத்தில் கேப்டன் பார்த்தோலோம் ஒக்பேச் ஆகியோர் கவுகாத்தி அணிக்காக கோல் போட்டனர். முடிவில் கவுகாத்தி அணி 2-0 என்ற கோல் கணக்கில் டெல்லியை வீழ்த்தியது. இதுவரை தோல்வியே சந்திக்காத கவுகாத்தி அணி 3 வெற்றி, 2 டிரா என்று 11 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது. டெல்லி அணிக்கு விழுந்த 3-வது உதை இதுவாகும்.

    இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் லீக் ஆட்டத்தில் பெங்களூரு எப்.சி.-அட்லெடிகோ டி கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.  #ISL2018 #DelhiDynamos #NorthEastUnited
    ஐ.எஸ்.எல். கால்பந்து திருவிழாவில் சென்னையில் இன்று (வியாழக்கிழமை) இரவு நடைபெறும் லீக் ஆட்டத்தில் சென்னை-கவுகாத்தி அணிகள் மோதுகின்றன. #ISL2018 #ChennaiyinFC #NorthEastUnited
    சென்னை:

    10 அணிகள் இடையிலான 5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று இரவு நடைபெறும் 11-வது லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி.-நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி. (கவுகாத்தி) அணிகள் மோதுகின்றன.

    நடப்பு சாம்பியனான சென்னை அணி தனது முதல் ஆட்டத்தில் பெங்களூரு அணியிடமும் (0-1), 2-வது ஆட்டத்தில் கோவா அணியிடமும் (1-3) தோல்வியை தழுவியது. கவுகாத்தி அணி முதல் ஆட்டத்தில் கோவாவுடன் டிரா (2-2) கண்டது. அடுத்த ஆட்டத்தில் கொல்கத்தாவை (1-0) வென்றது.



    உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் சென்னை அணி வெற்றி கணக்கை தொடங்க முழு முயற்சி மேற்கொள்ளும். நட்சத்திர வீரர்கள் ஜெஜெ லால்பெகுலா, மெயில்சன் ஆல்வ்ஸ், இனிகோ கால்ட்ரோன், அகஸ்டோ உள்ளிட்டோர் சாதிக்கும் முனைப்புடன் தயாராகி வருகிறார்கள். அதே சமயம் வெற்றிப்பயணத்தை தொடர கவுகாத்தி அணி எல்லா வகையிலும் தீவிரம் காட்டும். எனவே இந்த மோதலில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இரு அணிகளும் இதுவரை 8 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் கவுகாத்தி அணி 4 முறையும், சென்னை அணி 2 தடவையும் வெற்றி பெற்று இருக்கின்றன. 2 ஆட்டம் டிராவில் முடிந்தது. இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

    இன்றைய ஆட்டம் குறித்து சென்னை அணியின் பயிற்சியாளர் ஜான் கிரிகோரி அளித்த பேட்டியில், ‘கவுகாத்தி அணி இந்த சீசனில் சிறப்பான தொடக்கம் கண்டு இருக்கிறது. அந்த அணியை நாங்கள் மதிக்கிறோம். அதேநேரத்தில் எங்கள் அணி வீரர்கள் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அவர்கள் எங்களுக்கு வெற்றி தேடித் தரும் திறமை படைத்தவர்கள்’ என்று தெரிவித்தார்.

    கவுகாத்தி அணியின் பயிற்சியாளர் எல்கோ ஸ்சாட்டோரி கருத்து தெரிவிக்கையில், ‘எந்த அணிக்கு எதிராகவும் எங்களால் சவால் அளிக்க முடியும். ஆனால் சென்னை அணியில் தனிப்பட்ட வீரர்களின் திறமை எங்களை விட அதிகமாக இருக்கிறது. இருப்பினும் அவர்களிடம் சில பலவீனங்கள் உள்ளது. அதனை நாங்கள் சரியாக பயன்படுத்தி கொள்வோம்’ என்றார்.

    இதற்கிடையே, டெல்லியில் நேற்றிரவு நடந்த 10-வது லீக் ஆட்டத்தில் அட்லெடிகோ டி கொல்கத்தா அணி 2-1 என்ற கோல் கணக்கில் டெல்லி டைனமோசை வீழ்த்தி முதலாவது வெற்றியை பதிவு செய்தது.  #ISL2018 #ChennaiyinFC #NorthEastUnited
    ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் கோவா-கவுகாத்தி அணிகள் இடையிலான ஆட்டம் யாருக்கும் வெற்றி தோல்வியின்றி ‘டிரா’வில் முடிந்தது. #ISL2018 #NorthEastUnited #FCGoa
    கவுகாத்தி:

    5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னையின் எப்.சி., பெங்களூரு எப்.சி., நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி), எப்.சி.கோவா, மும்பை சிட்டி, ஜாம்ஷெட்பூர், அட்லெடிகோ டி கொல்கத்தா, கேரளா பிளாஸ்டர்ஸ், டெல்லி டைனமோஸ், புனே சிட்டி ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் உள்ளூர், வெளியூர் அடிப்படையில் 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும்.



    இந்த நிலையில் கவுகாத்தியில் நேற்றிரவு நடந்த 3-வது லீக் ஆட்டத்தில் கவுகாத்தி-கோவா அணிகள் மல்லுகட்டின. இதில் பலம் வாய்ந்த கோவா அணி முழுமையாக ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கவுகாத்தி அணியினர் ஈடுகொடுத்து ஆடினர். கோவா கோல் கீப்பர் முகமது நவாஸ் செய்த தவறால் 8-வது நிமிடத்தில் கவுகாத்தி வீரர் பெடரிகோ காலெகோ கோல் அடித்தார். அதாவது தனது பகுதியை விட்டு வெளியே வந்து பந்தை பிடித்த முகமது நவாஸ் அது ஆப்-சைடு என்று அறிவிக்கப்படும் என்று நினைத்தார். ஆனால் நடுவரோ உடனடியாக பிரிகிக் வாய்ப்பு வழங்கினார். அவர் திரும்புவதற்குள் பந்தை பெடரிகோ கோலாக மாற்றினார்.

    இதன் பின்னர் 14-வது நிமிடத்தில் பதிலடி கொடுத்த கோவா அணியின் நட்சத்திர வீரர் பெரன் கோராமினோஸ் கோல் அடித்தார். 39-வது நிமிடத்தில் எதிரணியின் மூன்று தடுப்பாட்டக்காரர்களை ஏமாற்றி கோராமினோஸ் மீண்டும் ஒரு கோல் போட்டார். இதனால் 2-1 என்ற கோல் கணக்கில் கோவா முன்னிலை பெற்றது. ஆனால் இந்த முன்னிலையை அவர்கள் தக்க வைத்துக் கொள்ள தவறினர். 53-வது நிமிடத்தில் கவுகாத்தி கேப்டன் பார்த்தோலோம் ஓக்பேச் தலையால் முட்டி கோல் அடித்தார். முடிவில் இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது.

    மும்பையில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் லீக்கில் மும்பை சிட்டி-ஜாம்ஷெட்பூர் அணிகள் மோதுகின்றன. #ISL2018 #NorthEastUnited #FCGoa 
    ×