search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Norovirus"

    • சில மாணவர்களின் பெற்றோருக்கு நோரா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்தது.
    • நோரா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்ட பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கொச்சி காக்கநாட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பயிலும் மாணவர்கள் சிலருக்கு திடீரென வாந்தி, பேதி ஏற்பட்டது.

    இதுபற்றிய தகவல் அறிந்ததும் சுகாதாரத்துறையினர் அங்கு சென்று ஆய்வு நடத்தினர். இதில் சில மாணவர்களின் பெற்றோருக்கு நோரா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

    இவர்கள் மூலம் மாணவர்களுக்கும் நோரா வைரஸ் பரவி இருக்கலாம் என தெரியவந்தது. இதையடுத்து பள்ளியில் நோய் அறிகுறியுடன் காணப்பட்ட 62 மாணவர்களின் ரத்த மாதிரிகளை சுகாதாரத்துறையினர் சேகரித்தனர். அவை பொது சுகாதார ஆய்வகத்திற்கு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

    இதில் 2 மாணவர்களுக்கு நோய் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. உடனடியாக அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    அவர்களின் உடல் நிலை சீராக இருப்பதாக சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் தெரிவித்தனர். மேலும் அந்த மாணவர்களின் பெற்றோரும் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

    இதற்கிடையே நோரா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்ட பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டது.

    மேலும் கொச்சி பகுதியில் சுகாதாரத்துறையினர் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    நோரா வைரஸ் அசுத்தமான தண்ணீர் மற்றும் உணவு மூலமே பரவுகிறது என்று டாக்டர்கள் எச்சரித்து உள்ளனர். இதனால் பொதுமக்கள் தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளனர்.

    வீடுகளில் குளோரின் கலந்த குடிநீரையே பயன்படுத்தவேண்டும், பழங்கள், காய்கறிகளை பயன்படுத்தும் முன்பு நன்கு கழுவி பயன்படுத்த வேண்டும், விலங்குகளுடன் பழகும்போது கவனமாக இருக்க வேண்டும் என சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

    • கேரளாவில் ஷிகெல்லா வைரஸ் பாதிக்கப்பட்ட மாணவர்கள் இருவரும் குடும்பத்துடன் அருகில் உள்ள ஓட்டலில் உணவு சாப்பிட்டு உள்ளனர்.
    • பொதுமக்கள் தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்று சுகாதார துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவின் ஆலப்புழா மற்றும் வயநாடு மாவட்டங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 மாணவர்களுக்கு நோரோ வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து மாநிலம் முழுவதும் அனைத்து கிராமங்களிலும் சுகாதார துறையினர் வீடு, வீடாக சென்று ஆய்வு செய்தனர்.

    லேசான காய்ச்சல் மற்றும் வாந்தி, மயக்கம் இருப்போரை கண்டறிந்து அவர்களின் ரத்த மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

    இதில் பாலக்காடு மாவட்டம் லக்கிடி மற்றும் பேரூர் ஊராட்சி பகுதிகளை சேர்ந்த சிலருக்கு வாந்தி, மயக்கம் மற்றும் தலைவலி இருந்தது தெரியவந்தது.

    மேலும் இப்பகுதியை சேர்ந்த சில மாணவர்களுக்கும் காய்ச்சல் அறிகுறி இருந்தது தெரியவந்தது.

    அவர்களின் ரத்த மாதிரிகளை சேகரித்து சுகாதார துறையினர் ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். இதில் 3 மாணவர்களுக்கும் ஷிகெல்லா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மாணவர்கள் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    ஷிகெல்லா வைரஸ் பாதிக்கப்பட்ட மாணவர்கள் இருவரும் குடும்பத்துடன் அருகில் உள்ள ஓட்டலில் உணவு சாப்பிட்டு உள்ளனர். இதன் காரணமாக அவர்களுக்கு ஷிகெல்லா பாதிப்பு ஏற்பட்டிருக்கலாமா? என்ற சந்தேகம் சுகாதார துறையினருக்கு ஏற்பட்டுள்ளது.

    எனவே பொதுமக்கள் தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்று சுகாதார துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

    • கேரளாவில் தற்போது பரவி வரும் புதிய வகை நோரோ வைரஸ் குழந்தைகளை அதிகம் பாதிக்கும் என்று கூறப்பட்டு உள்ளது.
    • நோரோ வைரஸ் பாதித்தவர்களுக்கு வாந்தி மயக்கம், தலைவலி, காய்ச்சல், அடி வயிற்றில் வீக்கம் போன்றவை ஏற்படும்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கடந்த 1-ந் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது.

    திருவனந்தபுரத்தை அடுத்த விழிஞம் பகுதியில் உள்ள தொடக்க பள்ளிக்கு சென்ற சில மாணவர்கள் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்டனர். இதில் சிலருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது.

    உடனடியாக அவர்கள் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள், சிறுவர்களின் ரத்த மாதிரியை பரிசோதனைக்கு அனுப்பினர்.

    பரிசோதனை முடிவில் 2 மாணவர்களுக்கு புதிய வகை நோரோ வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து மாணவர்கள் இருவரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.

    கேரளாவில் ஏற்கனவே பறவை காய்ச்சல், பன்றி காய்ச்சல் என நோய்கள் பரவி வந்த நிலையில் இப்போது புதிய வகை நோரோ வைரஸ் பரவி இருப்பது சுகாதார துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    நோரோ வைரஸ் பாதித்தவர்களுக்கு வாந்தி மயக்கம், தலைவலி, காய்ச்சல், அடி வயிற்றில் வீக்கம் போன்றவை ஏற்படும்.

    வாந்தி மற்றும் வயிற்று போக்கு அதிகமானால் நீரிழப்பு ஏற்படும். இதனால் உடல் பலவீனம் அடைந்து நோய் பாதிப்பு அதிகரிக்கும்.

    நோரோ வைரஸ் பாதிப்புக்கு ஆளானவர்களிடம் தொடர்பில் இருப்போருக்கும் இந்த நோய் பரவ வாய்ப்பு உள்ளது. நோயாளிகளின் வாந்தி மற்றும் அவர்களின் உமிழ் நீர் மூலமும் நோய் பரவ வாய்ப்பு உள்ளது.

    நோரோ வைரஸ் பாதிப்பை தடுக்க சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். குறிப்பாக சுத்தமான தண்ணீரை நன்றாக காய்ச்சி குடிக்க வேண்டும்.

    கிணறுகள் மற்றும் தொட்டிகளை பிளீச்சிங் பவுடர் மூலம் சுத்தம் செய்து பயன்படுத்த வேண்டும். பழங்கள், காய்கறிகளை நன்கு கழுவிய பின்பே பயன்படுத்த வேண்டும். கைகளை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என சுகாதார துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

    கேரளாவில் தற்போது பரவி வரும் புதிய வகை நோரோ வைரஸ் குழந்தைகளை அதிகம் பாதிக்கும் என்று கூறப்பட்டு உள்ளது. தற்போது மேலும் 5 மாணவர்களுக்கும் உடல் நலக்குறைவு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களின் ரத்த மாதிரிகளும் பரிசோதனைக்கு அனுப்பபட்டுள்ளது. அதன் முடிவுகள் வந்த பிறகே இவர்களுக்கும் நோரோ வைரஸ் பாதிப்பு உள்ளதா? என்பது தெரியவரும்.

    புதிய வகை நோரோ வைரஸ் தண்ணீர் மூலம் பரவுவதாக தெரியவந்துள்ளது. எனவே நீர் நிலைகள் மற்றும் குடிநீர் ஆதாரங்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கொரோனா பாதிப்பு இன்னும் குறையவில்லை.

    கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வந்த நிலையில் கேரளாவின் மலையோர மாவட்டங்களில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவியது. மத்திய நோய் தடுப்பு குழுவினர் மற்றும் மாநில சுகாதாரத்துறையினர் எடுத்த தடுப்பு நடவடிக்கை காரணமாக நிபா வைரஸ் கட்டுக்குள் வந்தது.

    இந்த நிலையில் வயநாடு மாவட்டத்தில் இப்போது புதிய வகை நோரோ வைரஸ் காய்ச்சல் பரவ தொடங்கி உள்ளது.

    வயநாடு பகுதியில் உள்ள கால்நடை மருத்துவ கல்லூரியின் விடுதியில் தங்கி இருந்த 15-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு 2 நாட்களாக வாந்தி, வயிற்று போக்கு ஏற்பட்டது. இது தொடர்பாக அங்கு சுகாதாரத்துறையினர் விரைந்து சென்று ஆய்வு செய்தனர்.

    இதில் அவர்களுக்கு புதிய வகை நோரோ வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இதனை மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் உறுதி செய்தார்.

    மந்திரி வீணா ஜார்ஜ்

    இதுதொடர்பாக மந்திரி வீணா ஜார்ஜ் கூறியதாவது:- வயநாடு மாவட்டத்தில் புதிய வகை நோரோ வைரஸ் தாக்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. மாணவர்கள் உள்பட 34 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த வைரஸ் தண்ணீர் மூலம் பரவுவதாக தெரியவந்துள்ளது. எனவே நீர் நிலைகள் மற்றும் குடிநீர் ஆதாரங்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×