என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கேரளாவில் கொரோனாவை தொடர்ந்து புதிய வகை நோரோ வைரஸ் தாக்குதலுக்கு 34 பேர் பாதிப்பு
Byமாலை மலர்13 Nov 2021 6:23 AM GMT (Updated: 13 Nov 2021 7:23 AM GMT)
புதிய வகை நோரோ வைரஸ் தண்ணீர் மூலம் பரவுவதாக தெரியவந்துள்ளது. எனவே நீர் நிலைகள் மற்றும் குடிநீர் ஆதாரங்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
திருவனந்தபுரம்:
கேரளாவில் கொரோனா பாதிப்பு இன்னும் குறையவில்லை.
கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வந்த நிலையில் கேரளாவின் மலையோர மாவட்டங்களில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவியது. மத்திய நோய் தடுப்பு குழுவினர் மற்றும் மாநில சுகாதாரத்துறையினர் எடுத்த தடுப்பு நடவடிக்கை காரணமாக நிபா வைரஸ் கட்டுக்குள் வந்தது.
இந்த நிலையில் வயநாடு மாவட்டத்தில் இப்போது புதிய வகை நோரோ வைரஸ் காய்ச்சல் பரவ தொடங்கி உள்ளது.
வயநாடு பகுதியில் உள்ள கால்நடை மருத்துவ கல்லூரியின் விடுதியில் தங்கி இருந்த 15-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு 2 நாட்களாக வாந்தி, வயிற்று போக்கு ஏற்பட்டது. இது தொடர்பாக அங்கு சுகாதாரத்துறையினர் விரைந்து சென்று ஆய்வு செய்தனர்.
இதில் அவர்களுக்கு புதிய வகை நோரோ வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இதனை மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் உறுதி செய்தார்.
இதுதொடர்பாக மந்திரி வீணா ஜார்ஜ் கூறியதாவது:- வயநாடு மாவட்டத்தில் புதிய வகை நோரோ வைரஸ் தாக்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. மாணவர்கள் உள்பட 34 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த வைரஸ் தண்ணீர் மூலம் பரவுவதாக தெரியவந்துள்ளது. எனவே நீர் நிலைகள் மற்றும் குடிநீர் ஆதாரங்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்.... அம்மா உணவகங்களில் 2 நாளில் 5 லட்சம் பேர் இலவசமாக சாப்பிட்டனர்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X