என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "shigella virus"
- கேரளாவில் ஷிகெல்லா வைரஸ் பாதிக்கப்பட்ட மாணவர்கள் இருவரும் குடும்பத்துடன் அருகில் உள்ள ஓட்டலில் உணவு சாப்பிட்டு உள்ளனர்.
- பொதுமக்கள் தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்று சுகாதார துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
திருவனந்தபுரம்:
கேரளாவின் ஆலப்புழா மற்றும் வயநாடு மாவட்டங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 மாணவர்களுக்கு நோரோ வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து மாநிலம் முழுவதும் அனைத்து கிராமங்களிலும் சுகாதார துறையினர் வீடு, வீடாக சென்று ஆய்வு செய்தனர்.
லேசான காய்ச்சல் மற்றும் வாந்தி, மயக்கம் இருப்போரை கண்டறிந்து அவர்களின் ரத்த மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் பாலக்காடு மாவட்டம் லக்கிடி மற்றும் பேரூர் ஊராட்சி பகுதிகளை சேர்ந்த சிலருக்கு வாந்தி, மயக்கம் மற்றும் தலைவலி இருந்தது தெரியவந்தது.
மேலும் இப்பகுதியை சேர்ந்த சில மாணவர்களுக்கும் காய்ச்சல் அறிகுறி இருந்தது தெரியவந்தது.
அவர்களின் ரத்த மாதிரிகளை சேகரித்து சுகாதார துறையினர் ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். இதில் 3 மாணவர்களுக்கும் ஷிகெல்லா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மாணவர்கள் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஷிகெல்லா வைரஸ் பாதிக்கப்பட்ட மாணவர்கள் இருவரும் குடும்பத்துடன் அருகில் உள்ள ஓட்டலில் உணவு சாப்பிட்டு உள்ளனர். இதன் காரணமாக அவர்களுக்கு ஷிகெல்லா பாதிப்பு ஏற்பட்டிருக்கலாமா? என்ற சந்தேகம் சுகாதார துறையினருக்கு ஏற்பட்டுள்ளது.
எனவே பொதுமக்கள் தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்று சுகாதார துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
கேரளாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிபா வைரஸ் பரவியது. இது ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு வேகமாக பரவியதால் மாநிலம் முழுவதும் ஏராளமான பொது மக்கள் நிபா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர்.
நிபா வைரஸ் தாக்குதலுக்கு நர்சு உள்பட 17 பேர் உயிரிழந்தனர். இந்த வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுத்ததை தொடர்ந்து அது கட்டுப்படுத்தப்பட்டது. இதன்பிறகே கேரள மக்களுக்கு நிம்மதி ஏற்பட்டது.
இந்த நிலையில் நிபா வைரசை தொடர்ந்து கேரளாவில் ஷிகெல்லா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த வைரசால் பாதிக்கப்படுபவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பதால் இதுவும் பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.
இந்த வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்த மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
இதற்கிடையில் கேரளாவில் டெங்கு காய்ச்சலும் பரவி வருகிறது. கொசுக்கள் மூலம் பரவும் இந்த காய்ச்சலுக்கு இதுவரை 2,564 பேர் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். 15 பேர் உயிரிழந்து உள்ளனர். டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தவும் மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கேரளாவில் கனமழை பெய்து வரும் சூழ்நிலையில் ஷிகெல்லா வைரஸ், டெங்கு காய்ச்சல் பரவி வருவது பொது மக்களை மிகவும் சிரமத்திற்கு ஆளாக்கி உள்ளது. #shigellavirus
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்