search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "nlc employee"

    • ராஜ்மோகன் என்.எல்.சி. சுரங்கத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.
    • வீட்டிற்கு வந்த பொழுது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சடைந்தார்.

    கடலூர்:

    நெய்வேலி வட்டம் -2 என்.கே.ஆர். பிள்ளை சாலையில் வசித்து வருபவர் ராஜ்மோகன் (வயது 56). இவர் என்.எல்.சி. சுரங்கத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். கடந்த 9-ந் தேதி ராஜ்குமார் தனது உறவினர் திருமணத் திற்காக தனது குடும்பத்தினருடன் திருச்சி சென்றார். இந்நிலையில் நேற்று மாலை வீட்டிற்கு வந்த பொழுது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சடைந்தார். மேலும் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 3 பவுன் தங்க நகை மற்றும் வெள்ளி குத்துவிளக்கு உள்ளிட்டவை திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து ராஜ்மோகன் நெய்வேலி நகர போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • நெய்வேலி அருகே உள்ள ஊ.மங்கலத்தை சேர்ந்த வர் மணிவேல்
    • மணிவேலுக்கு உடல்நலம் பாதிக்கப் பட்டது

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள ஊ.மங்கலத்தை சேர்ந்த வர் மணிவேல் (வயது 42). இவர் என்.எல்.சி. முதலா வது சுரங்கத்தில் தொழி லாளியாக வேலைபார்த்து வந்தார்.கடந்த 2 நாட்களுக்கு முன்பு மணிவேலுக்கு உடல்நலம் பாதிக்கப் பட்டது. இதைத்தொடர்ந்து அவர் என்.எல்.சி. பொது மருத்துவ மணையில் அனு மதிக்கப்பட்டார். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்பு திருச்சி யில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப் பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு மணிவேல் உயிரிழந்தார்.

    அவர் மாரடைப்பால் இறந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து மணிவேல் உடல் ஆம்புலன்ஸ் மூலம் ஊ.மங்கலத்துக்கு கொண்டு வரப்பட்டது. இறுதி சடங்கு நடைபெற இருந்த நிலையில் ஊ.மங்கலம் போலீசார் அங்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மணி வேலின் சாவு குறித்து யாரா வது தகவல் தெரிவித்தி ருக்கலாம் அதனால்தான் போலீசார் உடலை பிரேத பரிசோதகை்காக அனுப்பி வைத்தது தெரியவந்தது.

    என்.எல்.சி. தொழிலாளி வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த ரூ.1½ லட்சம் மதிப்புள்ள நகையை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

    நெய்வேலி:

    கடலூர் மாவட்டம் நெய்வேலியை அடுத்த ஊ.மங்கலம் பழமலை நகர் பகுதியை சேர்ந்தவர் முருகன்(வயது46). என்.எல்.சி. தொழிலாளி இவர் சிதம்பரத்தில் நடைபெறும் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று முன்தினம் இரவு வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்தினருடன் சென்று விட்டார்.

    இதை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள் சிலர் நள்ளிரவில் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர் .

    பின்னர் வீட்டில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 3 அரை பவுன் நகை மற்றும் விலை உயர்ந்த பட்டு புடவைகள், மற்றும் வீட்டில் இருந்த டி.வி. மற்றும் சில பொருட்களை திருடி கொண்டு தப்பி ஓடி விட்டனர்.

    திருமண நிகழ்ச்சி முடிந்து நேற்று இரவு முருகன் தனது குடும்பத்தினருடன் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைந்து கிடப்பதை கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன பீரோ உடைக்கபட்டு அதில் இருந்த நகை, பட்டு புடவைகள் மற்றும் வீட்டில் இருந்த பொருட்கள் கொள்ளை போயிருந்தது. கொள்ளை போன பொருட்களின் மொத்த மதிப்பு ரூ. 1½ லட்சம் ஆகும்.

    இது குறித்து ஊ.மங்கலம் போலீசில் முருகன் புகார் செய்தார்.புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நகை- பொருட்களை கொள்ளையடித்து கொண்டு தப்பி சென்ற மர்ம மனிதர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    ×