என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "home jewellery robbery"
திண்டிவனம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் இந்திராநகர் பகுதியை சேர்ந்தவர் கணபதி (வயது 52). இவரது மனைவி திலகவதி. திண்டிவனத்தை அடுத்த பாதிரியாபுலியூரில் உள்ள அரசு பள்ளியில் கணபதி ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று இரவு திலகவதிக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. உடனே வீட்டை பூட்டி விட்டு திலகவதியை திண்டிவனத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கணபதி அழைத்துசென்றார்.
இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் சிலர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவை உடைத்து அதில் இருந்த 18 பவுன் நகைகளை கொள்ளையடித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
திலகவதியை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டு அவருக்கு தேவையான பொருட்களை எடுப்பதற்காக கணபதி மட்டும் நள்ளிரவில் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறிகிடந்தனர்.
மேலும் அதில் இருந்த 18 பவுன் நகைகள் கொள்ளை போய் இருந்தது. கொள்ளை போன நகைகளின் மதிப்பு ரூ.5 லட்சம் ஆகும்.
இதுகுறித்து திண்டிவனம் போலீசில் கணபதி புகார் செய்தார். புகாரின் பேரில் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நெய்வேலி:
கடலூர் மாவட்டம் நெய்வேலியை அடுத்த ஊ.மங்கலம் பழமலை நகர் பகுதியை சேர்ந்தவர் முருகன்(வயது46). என்.எல்.சி. தொழிலாளி இவர் சிதம்பரத்தில் நடைபெறும் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று முன்தினம் இரவு வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்தினருடன் சென்று விட்டார்.
இதை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள் சிலர் நள்ளிரவில் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர் .
பின்னர் வீட்டில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 3 அரை பவுன் நகை மற்றும் விலை உயர்ந்த பட்டு புடவைகள், மற்றும் வீட்டில் இருந்த டி.வி. மற்றும் சில பொருட்களை திருடி கொண்டு தப்பி ஓடி விட்டனர்.
திருமண நிகழ்ச்சி முடிந்து நேற்று இரவு முருகன் தனது குடும்பத்தினருடன் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைந்து கிடப்பதை கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன பீரோ உடைக்கபட்டு அதில் இருந்த நகை, பட்டு புடவைகள் மற்றும் வீட்டில் இருந்த பொருட்கள் கொள்ளை போயிருந்தது. கொள்ளை போன பொருட்களின் மொத்த மதிப்பு ரூ. 1½ லட்சம் ஆகும்.
இது குறித்து ஊ.மங்கலம் போலீசில் முருகன் புகார் செய்தார்.புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நகை- பொருட்களை கொள்ளையடித்து கொண்டு தப்பி சென்ற மர்ம மனிதர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்