என் மலர்
நீங்கள் தேடியது "nilgiris rain"
- மக்கள் கூறும்போது, நாங்கள் பல ஆண்டுகளாக மாயாற்றை கடந்துதான் பரிசலில் பயணம் மேற்கொண்டு வருகிறோம்.
- மாயாற்றுக்கு மேல் தொங்கு பாலம் அமைக்க வேண்டும் என பல வருடங்களாக போராடி வருகிறோம்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த அடர்ந்த வனப்பகுதியில் தெங்குமரஹாட மலை கிராமம் உள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு படிக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வியாபாரிகள், கூலி வேலை செய்பவர்கள் மாயாற்றை பரிசல் மூலம் கடந்து சென்று வருகின்றனர்.
மழைக்காலங்களில் மாயாற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு விடும். அப்பொழுது மக்கள் ஆபத்தை உணராமல் பரிசலில் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீலகிரி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக கடந்த சில நாட்களாக மாயாற்றில் வழக்கத்தை விட தண்ணீர் அதிகரித்து வருகிறது. தற்போது கோவை மாவட்டம் பில்லூர் அணை தனது முழு கொள்ளளவு எட்டி உள்ளதால் 18 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் மாயாற்றில் மேலும் நீர்வரத்து அதிகரித்து இருகரையும் தொட்டபடி நீர் பாய்ந்து செல்கிறது.
இந்நிலையில் இன்று காலை ஆபத்தை உணராமல் தெங்குமரகஹாட கிராம மக்கள் பரிசலில் பயணம் மேற்கொண்டனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, நாங்கள் பல ஆண்டுகளாக மாயாற்றை கடந்துதான் பரிசலில் பயணம் மேற்கொண்டு வருகிறோம்.
திடீர் திடீரென வெள்ளபெருக்கு ஏற்பட்டு சில சமயம் ஊருக்குள்ளேயே முடங்கி கிடக்கிறோம். வயிற்று பிழைப்புக்காக ஆபத்தான முறையில் பரிசலில் கடந்து செல்கிறோம். இதற்கு நிரந்தர தீர்வாக மாயாற்றுக்கு மேல் தொங்கு பாலம் அமைக்க வேண்டும் என பல வருடங்களாக போராடி வருகிறோம்.
கோரிக்கை விடுத்தும் வருகிறோம். ஆனால் இதுவரை கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. இனியாவது மாவட்ட நிர்வாகம் தாமதிக்காமல் தொங்கு பாலம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கோடை சீசனையொட்டி சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. ஒரு வாரத்துக்கு பின்னர் ஊட்டி மற்றும் குன்னூர் பகுதிகளில் நேற்று பிற்பகலில் மழை பெய்யத்தொடங்கியது. சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
வெயில் வாட்டி வதைத்த நிலையில் இந்த திடீர் மழை அந்த பகுதி மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சியடைய செய்தது. மலைக்காய்கறிகளுக்கு ஏற்றதாக இந்த மழை உள்ளது என்று விவசாயிகள் கூறினர்.
இது தவிர அரசு மற்றும் தனியார் பூங்காக்களில் மலர்ச்செடிகளுக்கு இந்த மழை மிக அவசியம் என்று பூங்கா பராமரிப்பாளர்கள் தெரிவித்தனர். கனமழையால் ஊட்டி படகு சவாரி நிறுத்தப்பட்டது. சுமார் 3 மணி நேரம் பெய்த மழையால் மாவட்டத்தில் நிலவிய வெப்பம் தணிந்தது.
சமவெளிப்பகுதியில் நிலவும் கடும் வெப்பத்தில் இருந்து தப்பிக்க கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு 25 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், கூடலூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் கடுங்குளிர் பொதுமக்களை வாட்டி வருகிறது. அடர்த்தியான மேக மூட்டம் நிலவுவதால் வாகனங்கள் முகப்பு விளக்கை ஒளிர விட்டவாறு செல்கின்றன.
தொடர்மழையால் நீலகிரியில் உள்ள பைக்காரா, காமராஜர் சாகர், குந்தா, எமரால்டு, அவலாஞ்சி, அப்பர் பவானி, டைகர் ஹில்ஸ் உள்ளிட்ட 14 அணைகளும் அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. காட்டேரி, கல்லட்டி, கேத்ரின் உள்ளிட்ட நீர் வீழ்ச்சிகளில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
தொடர் மழை மற்றும் கடுங்குளிரால் சுற்றுலா தலங்களான அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம், ரோஜா பூங்கா, தொட்டபெட்டா உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
தீபாவளி பண்டிகை நெருங்குவதையொட்டி பொதுமக்கள் வெளியே நடமாட முடியாமலும், பண்டிகை பொருட்கள் வாங்க முடியாமலும் முடங்கியுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் தீபாவளியை பண்டிகை மழையால் களை இழந்து காணப்படுகிறது.
கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.நேற்று இரவு மேட்டுப்பாளையத்தில் அதிகபட்சமாக 20 மில்லி மீட்டர் மழை பதிவானது.






