என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "nilgiris rain"
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கோடை சீசனையொட்டி சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. ஒரு வாரத்துக்கு பின்னர் ஊட்டி மற்றும் குன்னூர் பகுதிகளில் நேற்று பிற்பகலில் மழை பெய்யத்தொடங்கியது. சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
வெயில் வாட்டி வதைத்த நிலையில் இந்த திடீர் மழை அந்த பகுதி மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சியடைய செய்தது. மலைக்காய்கறிகளுக்கு ஏற்றதாக இந்த மழை உள்ளது என்று விவசாயிகள் கூறினர்.
இது தவிர அரசு மற்றும் தனியார் பூங்காக்களில் மலர்ச்செடிகளுக்கு இந்த மழை மிக அவசியம் என்று பூங்கா பராமரிப்பாளர்கள் தெரிவித்தனர். கனமழையால் ஊட்டி படகு சவாரி நிறுத்தப்பட்டது. சுமார் 3 மணி நேரம் பெய்த மழையால் மாவட்டத்தில் நிலவிய வெப்பம் தணிந்தது.
சமவெளிப்பகுதியில் நிலவும் கடும் வெப்பத்தில் இருந்து தப்பிக்க கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு 25 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், கூடலூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் கடுங்குளிர் பொதுமக்களை வாட்டி வருகிறது. அடர்த்தியான மேக மூட்டம் நிலவுவதால் வாகனங்கள் முகப்பு விளக்கை ஒளிர விட்டவாறு செல்கின்றன.
தொடர்மழையால் நீலகிரியில் உள்ள பைக்காரா, காமராஜர் சாகர், குந்தா, எமரால்டு, அவலாஞ்சி, அப்பர் பவானி, டைகர் ஹில்ஸ் உள்ளிட்ட 14 அணைகளும் அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. காட்டேரி, கல்லட்டி, கேத்ரின் உள்ளிட்ட நீர் வீழ்ச்சிகளில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
தொடர் மழை மற்றும் கடுங்குளிரால் சுற்றுலா தலங்களான அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம், ரோஜா பூங்கா, தொட்டபெட்டா உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
தீபாவளி பண்டிகை நெருங்குவதையொட்டி பொதுமக்கள் வெளியே நடமாட முடியாமலும், பண்டிகை பொருட்கள் வாங்க முடியாமலும் முடங்கியுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் தீபாவளியை பண்டிகை மழையால் களை இழந்து காணப்படுகிறது.
கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.நேற்று இரவு மேட்டுப்பாளையத்தில் அதிகபட்சமாக 20 மில்லி மீட்டர் மழை பதிவானது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்